search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aavin"

    • சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.
    • கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆவின் நிர்வாகம் பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகிறது.

    சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் பச்சைநிற பால் பாக்கெட் (4½ சதவீத கொழுப்பு சத்து), அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் இப்போது பசும்பாலை 3½ சதவீதம் கொழுப்புசத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

    கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மற்ற ஊர்களிலும் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்ற பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இதுபற்றி ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் விலையில் இப்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புவதால் அந்த மாவட்டத்தில் மட்டும் 22 ரூபாய் விலையில் அரை லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    கோவை மாவட்ட பால் ஒன்றியத்தில் தற்போது கொழுப்பு சத்து குறைத்து பழைய விற்பனை விலையிலேயே பசும்பால் என கொண்டு வந்துள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையில் அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் அல்லது புதிய வகை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2019-20-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர்கள் என 91 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய இடங்களிலும் ஆவினில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முறையாக தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பலருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ''முறையாக விண்ணப்பிக்காத பலர் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். இந்த பணி நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், ஒரு பணியிடத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை பணி அமர்த்தியதாகவும்" ஆவின் நிர்வாக அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    தனியாக அழைத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் குழு மதுரை, தேனி, திருப்பூர் நாமக்கல், விருதுநகர் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்

    இந்த விசாரணையின்போது அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ததில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த குறித்த முழுமையான அறிக்கையை அதிகாரிகள் குழு ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் வழங்கியது.

    இந்த அறிக்கையை பரிசீலித்த ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இதேபோன்று தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.

    இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

    • ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது.
    • வாக்களித்த மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளதாக அண்ணாமலை கண்டனம்

    சென்னை:

    பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஆவினில், 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 200 மி.லி நெய் 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது.

    தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலம் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக்கு பல்வேறு விதமான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின் நிறுவனம் இந்த முறை கேக் தயாரிப்பிலும் ஈடுபடுகிறது.

    சென்னையில் மட்டும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிளம் கேக் விற்பனை செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 5 சுவைகளில் கேக் தயாரிக்கவும், தனியார் கேக்கை விட குறைந்த விலையில் விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேக் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. சென்னையில் உள்ள முக்கிய ஆவின் பார்லர்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

    கேக்கினை பதப்படுத்தக்கூடிய குளிர்சாதன வசதி உள்ள பார்லர்களில் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா கூறியதாவது:-

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆவின் சார்பில் 5 சுவைகளில் கேக் தயாரிக்கப்பட உள்ளது. இது தவிர பிளம் கேக்கும் தயாரிக்கப்படும். மற்ற நிறுவனங்களை விட தரத்துடன் விலை குறைவாக விற்கப்படும்.

    பொங்கலுக்கு 100 கிராம் நெய் பாக்கெட் 50 லட்சம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்கள் பொங்கலை கொண்டாட நெய்யை பயன்படுத்தும் விதமாக அதிகளவில் தயாரிக்கப்பட உள்ளது. தற்போது 100 கிராம் நெய் 10 ஆயிரம் தான் தயாரிக்கப்படுகிறது.

    சேலத்தில் புதிய ஐஸ்கிரீம் பண்ணை நிறுவப்பட்டு உள்ளது. அதன் மூலம் தினமும் 6000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • ஊக்கத்தொகை வழங்கும் விழா

    அரியலூர்:

    அரியலூர் பால் உற்பத்தி–யாளர்கள் கூட்டு–றவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்.எல.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, திருச்சி ஆவின் பொது மேலாளர் பெருமாள், துணை பொது மேலாளர் நந்தகோபால், உதவி பொது மேலாளர் முனுசாமி, அரியலூர் பால்வளத் துணைப் பதிவாளர் பார்த்திபன், பால் சொசைட்டி செயலாளர் கொளஞ்சிநாதன், சங்க தலைவர் பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மிகப் பழமையானது. தனியார் பால் பண்ணைகள் பல இருந்த போதும் கூட்டுறவு சங்கத்தை நாடி வருகிறார்கள் என்பது பெரிய விஷயமாகும்.

    2020-21ஆம் ஆண்டி–ற்கான சுமார் 3,420 உற்பத்தியாளர்களுக்கு சுமார் 95 லட்சத்தில்ஊக்க தொகை வழங்க–ப்படுகி–ன்றது, பால்வள–த்துறை அமைச்சரிடமும், தமிழக முதலமைச்சர் கவன–த்தில் கொண்டு சென்று அரிய–லூரில் ஆவின் பால் பொருட்கள்உற்பத்தி தொழிற்சாலை அமைக்க பெரும் முயற்சி மேற்கொ–ள்வேன் என பேசினார்.

    • அரசுத்துறை நிறுவனமான ஆவினும் தனது உபபொருட்களின் விலைகளை உயர்த்தியது.
    • விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் தங்களது தயிர், லஸ்சி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி உள்ளன.

    இந்த நிலையில் அரசுத்துறை நிறுவனமான ஆவினும் தனது உபபொருட்களின் விலைகளை உயர்த்தியது. இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

    பொருட்கள்

    பழைய விலை

    புதிய விலை

    தயிர் ஸ்பெஷல் (100 கிராம்)

    ரூ.10

    ரூ.12

    தயிர் ஸ்பெஷல் (200 கிராம்)

    ரூ.25

    ரூ.28

    பாக்கெட் தயிர் (500 மி.லி.)

    ரூ.30

    ரூ.35

    பிரீமியம் கப் தயிர் (400 கிராம்)

    ரூ.40

    ரூ.50

    பிரீமியம் தயிர் (ஒரு கிலோ)

    ரூ.100

    ரூ.120

    பிரோபயாடிக் லஸ்சி (200 மி.லி.)

    ரூ.27

    ரூ.30

    மேங்கோ லஸ்சி (200 கிராம்)

    ரூ.23

    ரூ.25

    சாக்கோ லஸ்சி (200 மி.லி.)

    ரூ.23

    ரூ.25

    பாக்கெட் மோர் (200 மி.லி.)

    ரூ.7

    ரூ.8

    நெய் (ஜார்-ஒரு லிட்டர்)

    ரூ.535

    ரூ.580

    நெய் (ஜார்-அரைகிலோ)

    ரூ.275

    ரூ.290

    நெய் (ஜார் 200 மி.லி.)

    ரூ.120

    ரூ.130

    நெய் (ஜார் 100 மி.லி.)

    ரூ.65

    ரூ.70

    நெய் (ஜார் 5 லிட்டர்)

    ரூ.2650

    ரூ.2900

    நெய் (டின் 15கிலோ)

    ரூ.8680

    ரூ.9680

    நெய் (அட்டைப்பெட்டி-1 லிட்டர்)

    ரூ.530

    ரூ.575

    பிரீமியம் நெய் டின் (1 லிட்டர்)

    ரூ.585

    ரூ.630

    நெய் பாக்கெட்-(100 மி.லி.)

    ரூ.60

    ரூ.65

    நெய் பாக்கெட்- (15 மி.லி.)

    ரூ.10

    ரூ.12


    • பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார்.
    • சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்தது அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது.

    கோவை:

    பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கோவை மலுமிச்சம்பட்டி, மதுக்கரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார்.

    அப்போது பால் விற்பனை பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து கோவை ஆர்.எஸ்.புரம் பால் விற்பனை அதிகாரியான சுப்பிரமணியம் மற்றும் சுஜித்குமார் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். சுப்பிரமணியம் ஆவின் அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

    இவர் திருப்பூர் ஆவின் பார்லர் பொறுப்பாளராக இருந்தபோது ரூ.20 லட்சமும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் பால் விற்பனை அலுவலராக பணியாற்றியபோது ரூ.70 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சம் பால் பொருட்களை விற்றும் அதில் வந்த பணத்தை ஆவினுக்கு செலுத்தாமல் இருந்து வந்தது அமைச்சரின் ஆய்வில் தெரியவந்தது.

    சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்ததும் அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது.

    அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட சில தினங்களிலேயே 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழல் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஆவின் விற்பனை ரூ.55 கோடியாகத்தான் இருந்தது.

    குறிப்பாக, கடந்த ஆண்டு ஆவின் நெய் 600 டன் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு 900 டன் விற்பனை ஆகியுள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது.

    ஆவின் நெய்

    பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 27 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது.

    அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளோம். மிக விரைவில் பக்கத்து மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த பால்வளத்துறை வளாகத்தில், ஐஸ்கிரீம், நறுமணப்பால், கூல் காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
    சென்னை:

    ஆவின் நிறுவனம் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப சென்னை மாநகரில் சராசரியாக தினசரி 12.30 லட்சம் லிட்டர் பால், மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான பால் பொருட்களை மாதம் தோறும் விற்பனை செய்து வருகிறது.

    சென்னை நகரில் நுகர்வோர்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பொருட்களை வழங்கி, விற்பனையை உயர்த்தத் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.

    தற்போது பிஸ்தா, பாதாம், மேங்கோ, கிரேப், ஸ்டிராபெரி, பைன்ஆப்பிள், பிளாக்கரண்ட், லிட்சி, ஆரெஞ்சு, சாக்லெட் என பத்து வகையான குல்பி ஐஸ்கிரீம்கள், மேங்கோ, ஸ்டிராபெரி, பைன்ஆப்பிள், கிரேப், ஆரெஞ்சு, சர்க்கரையில்லா வெண்ணிலா என ஆறு வகையான யோகர்ட், பைன் ஆப்பிள், ஏலக்காய், சாக்லேட், பிஸ்தா, ஸ்டிராபெரி என ஐந்து வகையான நறுமணப்பால் மற்றும் கூல் காபி போன்ற பால் பொருட்கள் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. தற்பொழுது 24 வகையான பால் பொருட்கள் மற்றும் 80 வகையான ஐஸ்கிரீம்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    நுகர்வோர்களின் தேவையை மேலும் பூர்த்தி செய்யும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த பால்வளத்துறை வளாகத்தில், ஐஸ்கிரீம், நறுமணப்பால், கூல் காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டங்கள் தொடர்பான கையேடு மற்றும் பசுந்தீவன மேம்பாட்டுத் திட்டக் கையேட்டினை வெளியீட்டு, இணையம் மற்றும் ஒன்றியங்களில் பணியாற்றும் 5036 பணியாளர்களுக்கு ரூ.691.45 லட்சம் மதிப்பீட்டிற்கான போனஸ் தொகையினை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

    நுகர்வோர் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க 24 மணி நேரம் நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவு கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
    ×