search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் விலை"

    • தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்தி மற்றும் விற்பனையை இன்று முதல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்து உள்ள ஆவின் டிலைட் பாலினை அதே விற்பனை விலைக்கு விநியோகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான (ஆரோக்யா) ஹட்சன் இன்று முதல் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள அவ்வகை பாலுக்கு லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் பாலுக்கான கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த விற்பனை விலை குறைப்பை அமல்படுத்த இருப்பதாகவும் வருகின்ற தகவலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.

    அதே சமயம் இந்த தருணத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தவறான தகவலை தெரிவித்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

    மேலும் ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்ல இது ஏதுவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.
    • கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஆவின் நிர்வாகம் பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகிறது.

    சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் பச்சைநிற பால் பாக்கெட் (4½ சதவீத கொழுப்பு சத்து), அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் இப்போது பசும்பாலை 3½ சதவீதம் கொழுப்புசத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

    கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மற்ற ஊர்களிலும் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்ற பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இதுபற்றி ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் விலையில் இப்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புவதால் அந்த மாவட்டத்தில் மட்டும் 22 ரூபாய் விலையில் அரை லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    கோவை மாவட்ட பால் ஒன்றியத்தில் தற்போது கொழுப்பு சத்து குறைத்து பழைய விற்பனை விலையிலேயே பசும்பால் என கொண்டு வந்துள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையில் அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் அல்லது புதிய வகை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆம்பூர் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்க சிறப்பு தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் பெருமாள், தலைவர் ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் வீரப்பன், ஆனந்தன், பாண்டுரங்கன், கணேசன், சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.5 வழங்க வேண்டும். இலவச கறவை பசு, கால்நடை தீவனம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு சரியான நேரத்தில் தட்டுப்பாடின்றி பால் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.

    • பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என உச்சிப்புளியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பேசினார்.
    • பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என உச்சிப்புளியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பேசினார்.

    பனைக்குளம்

    தமிழகத்தில் பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியின் தலைவர் இ.எம்.டி. கதிரவன் உத்தரவின்படி, பா.ஜ.க.வினர் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி முழக்கமிட்டனர்.

    மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் பிரமாண்ட அளவில் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் விக்ராந்த் சந்துரு செய்திருந்தார்.

    இந்த போராட்டம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் பா.ஜ.க. முக்கிய பிரமுகரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சண்முகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்டத் துணைத் தலைவர் அழகர், ஓ.பி.சி. பிரசார பிரிவு மாவட்ட தலைவர் தவமணி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேசுவரன், தரவு தளம் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், ஒன்றிய பொதுச் செயலாளர் கோபால், ஒன்றிய பொருளாளர் ஜோதி, பா.ஜ.க.வை சேர்ந்த முருகானந்தம், கோபி, தீபக், பூவேந்திரன், கண்ணன், கார்த்தி, பிரித்திவிராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் பேசுகையில், தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் அண்ணாமலை தமிழக மக்களின் நலனில் முழு கவனம் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    பொதுமக்களுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்க ளை நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். பிரதமர் மோடி இந்திய திருநாட்டில் நல்லாட்சியை நடத்தி மக்களையும், நாட்டையும் பாதுகாத்து வருகிறார். பிரதமர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, மாநில அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • கேரளாவில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • உற்பத்தியாளர் கோரிக்கை குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    கேரளாவில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து உற்பத்தியாளர் கோரிக்கை குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது.

    அக்குழுவினர் இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கையை அவர்கள் அரசிடம் அளித்தனர். அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.7 முதல் 8 வரை உயர்த்தலாம் என கூறியிருந்தனர்.

    இந்த அறிக்கை குறித்து அரசு அதிகாரிகள் இன்று முடிவு செய்ய உள்ளனர். இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் இன்று ஆலோசனை நடக்க உள்ளது.

    இக்கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. அதன்பின்பே பால் விலை லிட்டருக்கு எவ்வளவு உயரும் என்பது தெரியவரும்.

    • பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர்.
    • பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக இயற்கை விவ சாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டாக பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்ற பொருட்கள் கடுமையான விலை ஏற்றம் அடைந்து உள்ளது. ஆட்கள் கூலியும் அதிகரித்து உள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த பால் உற்பத் தியாளர்கள், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    ஆனால் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தர பரிசீலனை செய்யுமாறு தமிழக கால்நடை வளர்ப்போர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர். 

    • சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள பால் குளிர்வு நிலையம் முன்பு பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
    • பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு, பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் உடனே வழங்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள பால் குளிர்வு நிலையம் முன்பு பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கும் பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் உடனே வழங்க வேண்டும் என கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு பால் கூட்டுறவு சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சேமலைகவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் குப்புசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், கிளை நிர்வாகி கருங்காலிபாளையம் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். இப்போராட்டத்தில் விவசாயிகள் சின்னச்சாமி, பழனிச்சாமி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

    ×