search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viswanathan Anand"

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
    • செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ், 2755.9 புள்ளிகள் பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் மூலம் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்.

    செஸ் உலக கோப்பை (2023) தொடர் அஜர்பை ஜான் நாட்டின் பாகுவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய குகேஷ், தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை தோற்கடித்து பிறகு உலக தரவரிசை பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

    5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986-ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-ஒன் வீரராக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 1-ந்தேதி அடுத்த தரவரிசை பட்டியல் வெளியிடும் வரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்ததால் 1986-க்கு பிறகு ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.

    இந்த நிலையில் செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள்.

    உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளன.

    உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • ஒரு பயனர், ‘என் நண்பன் எப்போதும் என் ராணியை எடுத்து செல்கிறான்’ என்ன செய்வது? என்று கேட்டிருந்தார்.
    • ஆனந்த் வேடிக்கையாக செஸ் விளையாட்டிலா? அல்லது வாழ்க்கையிலா? என கேட்டு பதில் அளித்தார்.

    செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு இருந்தாலும் அவர் அதிக பதிவுகளை பதிவிடுவது இல்லை. இந்நிலையில் அவர் #AskVishy என்ற ஹேஷ்டேக்குடன் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அமர்வை தொடங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செஸ்போர்டுக்கு முன்னால் இருப்பது போன்று ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். பின்னர் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார். அப்போது ஒரு பயனர், 'என் நண்பன் எப்போதும் என் ராணியை எடுத்து செல்கிறான்' என்ன செய்வது? என்று கேட்டிருந்தார். அதற்கு ஆனந்த் வேடிக்கையாக செஸ் விளையாட்டிலா? அல்லது வாழ்க்கையிலா? என கேட்டு பதில் அளித்தார். இதேபோல ஆனந்திடம், உங்களுக்கு பிடித்த பாடல் எது? என பயனர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் 'ரூக் ரூக் ரூக் ஹரே பாபா ரூக்' என பதில் அளித்திருந்தார். இதே போல பல்வேறு பயனர்களுக்கும் அவர் பதிலளித்து பயனர்களை குஷிபடுத்தினார்.

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.
    • செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் விஸ்வநாதன் ஆனந்த்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.

    நிறைவு விழாவில் இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.
    • செஸ் விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

    இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் கூறியுள்ளதாவது:

    புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் ஆகும்.

    கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது. தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
    • சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

    இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன.

    அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    • முதல்வர் ஸ்டாலின் குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு ‘தம்பி’ என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    சென்னை:

    நார்வே செஸ் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் கிளாசிக்கல் சுற்றில் பங்கேற்ற முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடத்தை கைப்பற்றினார். குரூப் ஏ சுற்றில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த தொடரில் மற்றொரு இந்திய வீரரான சந்திபன் சந்தாவும் பங்கேற்றார்.

    இந்நிலையில் இவர்கள் மூவரும் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை, விஸ்வநாதன் ஆனந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 'அண்ணனுடன் செஸ் தம்பிகள் இரவு உணவுக்கு செல்கின்றனர்' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான லோகோவை கடந்த ஜூன் 9-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தொடருக்கான குதிரை உருவம் கொண்ட சின்னம் ஒன்றையும் வெளியிட்ட அவர், அதற்கு 'தம்பி' என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

    இதை குறிப்பிடும் வகையில்தான் விஸ்வநாதன் ஆனந்த், 'செஸ் தம்பிக்கள்' என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    • நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்
    • 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம், ஆனந்த் தோல்வி அடைந்தார்

    ஒஸ்லோ:

    உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த 5-வது சுற்றின் 50வது நகரில் கார்ல் சென்னை விழ்த்தி ஆனந்த் வெற்றி பெற்றார். இதன்மூலம், நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து அவர் முதலிடத்தில் உள்ளார்.

    கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

    முன்னதாக இந்த தொடரின் முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த், 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.  

    3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    நார்வே:

    நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். 

    இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
    கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
    ஓஸ்லோ:

    செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார். 

    இந்நிலையில் நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 52 வயது விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்டார். போட்டியின் 43வது நகர்வின் போது கார்ல்சன் விஸ்வநாதன் ஆனந்திடம் வீழ்ந்தார்.

    இதையடுத்து கார்ல்சனை வீழ்த்திய ஆனந்த், நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டித் தொடரில் 4-வது இடம் பிடித்தார். 

    இந்தத் தோல்வியினால் கார்ல்சன் 2-வது இடத்துக்குச் சென்றார். 5-வது சுற்றில் அனிஷ் கிரியிடமும், 9-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவிடமும் தோல்வியடைந்ததால், ஆனந்த் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். 

    அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான வெஸ்லி சோ, 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நெதர்லாந்து கிராண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆனந்த், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்தான் கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.
    பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. #ViswanathanAnand #RussianFederation
    சென்னை:

    பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘நட்புறவு விருது’ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘நட்புறவு விருது’ வழங்கி கவுரவித்தார்.

    விழாவில், ரஷிய நாட்டின் பெண் ஓவியர் கட்யா பெல்யாவ்ஸ்கயா, செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவிலேயே செஸ் விளையாட்டை அடிப்படையாக கொண்டு ஒரு ஓவிய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    ‘நட்புறவு விருது’ என்பது இரு நாடுகள் இடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காக பாடுபட்ட பிரபலங்களுக்கு ரஷியா நாடு வழங்கும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.   #ViswanathanAnand #RussianFederation
    நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவுக்கு எதிரான 8-வது சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். #ViswanathanAnand #NorwayChessChampionship

    ஆஸ்லோ:

    நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்திய வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் தனது எட்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். வீஸ்லி சோ - அமெரிக்கா, பேபியானோ கார்வானா - அமெரிக்கா, கார்ல்சன் - நார்வே, ஹிகாரு நாகமுரா - அமெரிக்கா ஆகியோர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.  #ViswanathanAnand #NorwayChessChampionship
    நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். #ViswanathanAnand #NorwayChessChampionship

    ஆஸ்லோ:

    நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்திய வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் தனது ஏழாவது போட்டியில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்த், 1 புள்ளி பெற்றார். 

    இதன் மூலம் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்), நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
    ×