search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varusabhishekam"

    • கலசத்திலிருந்து புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கலசத்திலிருந்து புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
    • இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா மற்றும் கிழக்கத்தியான் சுவாமி கோவில் கொடை விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    அன்று இரவு திருவிளக்கு விளக்கு பூஜையும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை 8 மணிக்கு சுந்தர விநாயகருக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், புண்யாக வாஜானம், கும்ப பூஜை, வேத பாராயணம், கோபுர கலச அபிஷேகம் ,தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

    சுந்தர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீமதி தியாகராஜன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் ,இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இரவு 10 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி மற்றும் செங்கிடா சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு கிழக்கத்தியான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனையுடன் சாமகொடையும் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வருசாபிஷேகத்தையொட்டி கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
    • சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது.

    களக்காடு:

    களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன.

    அதனைதொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, வருசாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது.

    இரவில் விஷேச அலங்கார தீபாராதனைகளுக்கு பின் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வருசாபிஷேகத்தை தொடர்ந்து அனைத்து வகை திரவியங்களினாலும் அபிஷேகம் நடந்தது.
    • வருசாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை கே.டி.சி. நகரில் பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10-ந்தேதி வருசாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி காைல விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து வகை திரவியங்களினாலும் அபிஷேகம் நடந்தது. விநாயகர், மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • சிவகிரி சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.
    • விநாயகருக்கு 18 வகையான நறுமண பொருட்கள் மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் சண்முகவிலாஸ் கிளை மண்டபத்திற்கு பாத்தியப்பட்ட சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொருட்கள் மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் சேனை தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், செயலர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணை தலைவர் கலைஞர் மூக்கையா மற்றும் கிளை சங்க நிர்வாகிகள், விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவர் ராசு, கணக்கர் குருசாமி, பொருளாளர் கணேசன், பூசாரி குருவு, மயில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 7 மணி முதல் ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை நடைபெற்றது.
    • விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    காலை 7 மணி முதல் பஞ்சஸூக்த ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை வருசாபிஷேகத்திற்கான கும்பாபிஷேகம், விமானம், மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கருடசேவை, நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலை மையில் விழா குழுவினர் செய்தனர்.வருசாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×