என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இடையர்காடு கிராமத்தில் சுந்தர விநாயகர்கோவில் வருசாபிஷேகம்
- இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
- இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
இடையர்காடு கிராமத்தில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா மற்றும் கிழக்கத்தியான் சுவாமி கோவில் கொடை விழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.
அன்று இரவு திருவிளக்கு விளக்கு பூஜையும், அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு சுந்தர விநாயகருக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், புண்யாக வாஜானம், கும்ப பூஜை, வேத பாராயணம், கோபுர கலச அபிஷேகம் ,தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
சுந்தர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீமதி தியாகராஜன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் ,இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று வேளையும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி மற்றும் செங்கிடா சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு கிழக்கத்தியான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை, தீபாராதனையுடன் சாமகொடையும் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு நிறைகொடை பூஜையும் ,தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்