search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vada Pav"

    • வடபாவை வாங்கி சாப்பிடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார்.
    • வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

    உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் சுவிட்லானா ஹயென்கோ. சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில் கோவா நகரை சுற்றி பார்ப்பதற்காக சுவிட்லானா வந்துள்ளார். அப்போது அங்குள்ள தெருவோர ஓட்டல் ஒன்றில் வடமாநிலங்களில் பிரசித்திபெற்ற சிற்றுண்டியான வடபாவ் விற்பதை பார்த்துள்ள அவர் அதனை ருசி பார்க்க விரும்பினார்.

    பின்னர் வடபாவை வாங்கி சாப்பிடுவது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் வடபாவை ருசிக்கும்போது சுவிட்லானாவின் முகபாவனைகளை இணையவாசிகள் ரசித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது
    • முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார்.

    மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பிரபலமான நொறுக்கு தீனிகளில் ஒன்றாக வடாபாவ் திகழ்கிறது. குறிப்பாக தெருவோர உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் வடாபாவுக்கென்றே வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கராமத்கான் என்ற இன்ஸ்டாகிராம் பயனர், கராச்சியில் உள்ள கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே கவிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் உணவு கடை தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கவிதாவின் உணவகத்துக்கு சென்ற கராமத்கான் அந்த ஓட்டலில் வடாபாவ், பாவ் பாஜி, தால் சமோசா போன்ற உணவுப்பொருட்கள் சுவையாக இருப்பதாக கூறுகிறார்.

    கடையை நடத்தும் கவிதா கூறுகையில், வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது. இப்போது கராச்சியில் வசிப்பவர்களும் அதை விரும்புகிறார்கள் என கூறுகிறார். முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று.
    • ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மாவின் இந்த அதிரடியான இன்னிங்சின் போது வர்ணனையாளர் ஹர்சா போக்லே பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான வடா பாவ் பற்றி நகைச்சுவையான கருத்தை கூறினார்.

    மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று. மும்பையில் உள்ள மூலைமுடுக்குகளில் எங்கும் கிடைக்கும் வடா பாவ் மும்பை மக்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி ஆகும். இந்நிலையில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் பற்றி பேசிய ஹர்சா போக்லே உற்சாகத்தில் 'என் வடா பாவை பிடித்து கொள்ளுங்கள்' என்று வர்ணனை செய்தார். உடனே ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர். இதனால் குறுகிய நேரத்தில் வடா பாவ் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.

    • ரோகித் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார்.
    • ரோகித்தை கிண்டல் செய்தவர்களை அரையிறுதி போட்டியின் நேரலையில் ஹர்ஷா போக்லே பதிலடி கொடுத்தார்.

    மும்பை:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. நாக் அடுட் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

    ஆனால் தொடக்க முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. ரோகித் அதிரடியான தொடக்கம் அளித்தார். அவர் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோகித் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

    ரோகித்தை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.

    இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

    ×