search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடா பாவ்"

    • மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று.
    • ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

    கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மாவின் இந்த அதிரடியான இன்னிங்சின் போது வர்ணனையாளர் ஹர்சா போக்லே பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான வடா பாவ் பற்றி நகைச்சுவையான கருத்தை கூறினார்.

    மும்பை என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் வடா பாவும் ஒன்று. மும்பையில் உள்ள மூலைமுடுக்குகளில் எங்கும் கிடைக்கும் வடா பாவ் மும்பை மக்கள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி ஆகும். இந்நிலையில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் பற்றி பேசிய ஹர்சா போக்லே உற்சாகத்தில் 'என் வடா பாவை பிடித்து கொள்ளுங்கள்' என்று வர்ணனை செய்தார். உடனே ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வடா பாவ் பற்றிய வேடிக்கையான மீம்ஸ்களுடன் வீடியோக்களை பகிர தொடங்கினர். இதனால் குறுகிய நேரத்தில் வடா பாவ் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.

    ×