search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train ticket"

    • தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.

    இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.

    • இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந் தேதி வருகிறது.
    • காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

    சென்னை :

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

    நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பாக ரெயில்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வரையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. முன்னதாக நவம்பர் 9-ந் தேதியே (வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

    அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12-ந் தேதியில் இருந்து ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12-ந் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    அதன்படி ஜூலை 12-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந் தேதியும், 13-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ந் தேதியும், 14-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந் தேதியும், 15-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ந் தேதியும், 16-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ந் தேதியும், 17-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ந் தேதியும், 18-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ந் தேதியும் பயணம் செய்ய முடியும்.

    வட இந்திய ரெயில்களுக்கான முன்பதிவு தேதியில் ஒன்று அல்லது 2 நாட்கள் மாறுதல் இருக்கலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

    இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
    • 2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது.

    புதுடெல்லி :

    நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் 'பெர்த்' (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி (தி.மு.க.) மற்றும் தீபக் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டில் 2,687 பயணிகள் ரெயில்கள், 2,032 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட மொத்தம் 10,378 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.

    2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது. மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கியதில் அந்த ஆண்டு சுமார் ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    ரெயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் 'பெர்த்' தானாகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது.
    • நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் ‘ஜன சுவிதா’ கடைகள் நிறுவப்படும்.

    புதுடெல்லி :

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது 2023-24-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் இணையதள வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மடங்கு வேகம் இருக்கும்.

    தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது. இதை நிமிடத்திற்கு 2.25 லட்சமாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    இதைப்போல பயணிகளின் விசாரணை அழைப்புகளை எதிர்கொள்ளும் திறனையும் நிமிடத்துக்கு 40 ஆயிரம் என்ற இலக்கில் இருந்து 4 லட்சமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4,500 கி.மீ. புதிய ரெயில் பாதை இலக்கு எட்டப்பட்டு உள்ளது. இது நாளொன்றுக்கு 12 கி.மீ. ஆகும். அதேநேரம் 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாளுக்கு 4 கி.மீ.யாக இருந்தது.

    2023-24-ம் நிதியாண்டில் 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய பாதைகள், இரட்டைமயமாக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

    நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 'ஜன சுவிதா' கடைகள் நிறுவப்படும். இவை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இந்த கடைகளில் தினசரி உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.

    ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கிழ் 550 ரெயில் நிலையங்களில் 594 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படும்.

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2.40 லட்சம் கோடியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சிறிய தயாரிப்பான வந்தே மெட்ரோ உருவாக்கப்படும். இது பெரிய நகரங்களில் பணியாற்றும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது.

    ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இந்த செயலி மூலம் 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது.
    • தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் போன்றவற்றை பதிவு செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் காத்திருக்க தேவையில்லாத நிலையுடன், அவர்களின் நேரமும் மிச்சமாகிறது.

    இந்த செயலி மூலம் பயணிகள், புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது. அது தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, புறநகர்ப் பகுதிகளில் இந்த தூரம் 2 கி.மீ. தூரத்தில் இருந்து 5 கி.மீ.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தினசரி பாசஞ்சர் ரெயில்களிலும், நீண்டதூர ரெயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

    இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5 கி.மீ. தூர கட்டுப்பாட்டை 10 கி.மீ. அளவுக்கு அதிகரிக்க விரும்பும் மண்டல ரெயில்வே நிர்வாகங்கள், அதுகுறித்து ரெயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டுமே தினசரி சுமார் 5 ஆயிரம் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
    • டிக்கெட் கவுண்ட்டர்களில் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

    சென்னை :

    சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர் என பெரும்பாலானோர் மின்சார ரெயில் சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    அந்தவகையில் சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கமாக வாரநாட்களில் 244 மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் முக்கிய ரெயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்கான பயணிகள் கூட்டம் எப்போதும் இருந்து வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டுமே சராசரியாக தினசரி சுமார் 5 ஆயிரம் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மின்சார ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற 4 தனி டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற 3 கவுண்ட்டர்கள் பெரும்பாலும் மூடிய நிலையில் தான் இருக்கிறது. எப்போதாவதுதான் 2-வது கவுண்ட்டர் திறக்கப்படுகிறது.

    இதனால் நெருக்கடியான நேரங்களில் மின்சார ரெயிலுக்கு டிக்கெட்டு எடுக்க வரும் பயணிகள், ஒரே கவுண்ட்டரில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. வால் போல் நீண்டு நிற்கும் பயணிகளின் வரிசை சில சமயங்களில் டிக்கெட் கவுண்ட்டர் வளாகத்தை விட்டு வெளியே சென்று விடுகிறது.

    நீண்ட நேரம் நின்று, டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்தும் கூட சில சமயங்களில், பயணிகளுக்கு சில்லரை இல்லை எனக்கூறி டிக்கெட் வழங்காமல் திருப்பி அனுப்பி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கால்கடுக்க நிற்கும் பயணிகள் நொந்து விடுகின்றனர். குறிப்பாக டிக்கெட் வழங்கும் நபர்கள், சில்லரைக்காக முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொள்வது பயணிகளிடையே ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது

    என்னதான் கூறினாலும், பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இது தவிர பண்டிகை காலங்களில் அலைமோதும் கூட்டத்துக்கு, கவுண்ட்டர்களில் நிற்க இடம் ஏது? ஆனால் ரெயில்வே நிர்வாகமோ, கவுண்ட்டர்கள் இருந்தும் அதற்கான வேலையாட்களை நியமிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே காலை மற்றும் மாலையில் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க வரும் பயணிகளின் நீண்ட வரிசையை குறைக்க, கூடுதல் கவுண்ட்டர்களை திறந்தால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் சில்லரை தட்டுப்பாட்டை சுமூகமாக கையாளவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பெரும்பாலான மின்சார ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவோர் ரெயில் நிலையம் மற்றும் அங்கீகார மையங்களில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.

    இந்த நிலையில் ரெயில் டிக்கெட்டுகளை இனிமேல் தபால் நிலையங்களிலும் முன்பதிவு செய்யலாம். அதற்கான வசதியை மதுரை ரெயில்வே கோட்டம் சிவகாசி தபால் நிலையத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

    இங்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மதுரை கோட்டம் முழுவதும் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கோட்டத்தில் ரெயில்வே துறையும், அஞ்சல் துறையும் ஒருங்கிணைந்து சிவகாசி தபால் நிலையத்தில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் திட்டத்தை அமல் படுத்தி உள்ளது. இதனை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SouthernRailway
    சென்னை:

    சென்னையில் நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதி தொடங்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள பொது தளத்தில் ‘கியூ.ஆர்.கோடு’ உள்ள பதாகைகள் ஒட்டப்படும்.

    பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘யூ.டி.எஸ்.-ஆப்’ மூலம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உடனே முன்பதிவற்ற டிக்கெட் எடுக்கலாம். இதன்மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்லாமல் முன்பதிவற்ற டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் ‘யூ.டி.எஸ்.-ஆப்’ வசதியை 5 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இப்போது ‘கியூ.ஆர்.கோடு’ வசதியின் மூலம் ‘யூ.டி.எஸ்.-ஆப்’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும். இந்த வசதி தற்போது முதற்கட்டமாக சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த புதிய வசதி தெற்கு ரெயில்வேயின் அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரிவாக்கப்படும். டிக்கெட் கவுண்ட்டர்களில் உள்ள கூட்டத்தை குறைக்க தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் பொறுத்தப்பட உள்ளது.

    தெற்கு ரெயில்வே சார்பில் தீபாவளிக்கு 23 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு தொடங்கியவுடன் அனைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டன. மேலும் நவம்பர் மாதத்தில் 35 சிறப்பு ரெயில்களும், டிசம்பர் மாதத்தில் 28 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளது.



    சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரெயில்களில் 90 சதவீத டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விழாக்காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவற்ற சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SouthernRailway
    பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. #PongalFestive #TrainTicket

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தினர் குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். கடைசி நேர கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தற்போது ரெயில் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டி திட்டமிட்டு செல்லும் வகையில் 120 நாட்களுக்கு முன்கூட்டியே, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 15) வருவதால், 3 நாட்களுக்கு முன்கூட்டி, அதாவது ஜனவரி 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று(வியாழக்கிழமை) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்களான நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, செந்தூர், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு நீண்டது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 மற்றும் 13-ந் தேதிக்கு முன்பதிவு இன்று(வெள்ளிக் கிழமை) மற்றும் நாளையும் (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. #PongalFestive #TrainTicket
    ×