search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly by elections"

    எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தங்கி இருந்த விடுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    நான் இல்லாத நேரத்தில் எனது அறையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது மிகவும் பாரபட்சமானது. திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். அவர்களின் அறைகளில் ஏன் சோதனை நடத்தவில்லை.

    காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பரங்குன்றம் தொகுதியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பரங்குன்றம், மே. 13-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 மற்றும் 6-ந்தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக அவர் இன்று மாலை 5 மணிக்கு தொகுதிக் குட்பட்ட வலையன்குளத்தில் பிரசாரத்தை தொடங்கு கிறார்.

    அதைத்தொடர்ந்து சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், சின்ன அனுப் பானடி, ஐராவதநல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய் கிறார்.

    தமிழக சட்டசபைக்கு நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 6 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கின்றார். #MDMK #Vaiko #TNByPolls
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சட்டசபைக்கு நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கீழ்காணும் நாட்களில் பிரசாரம் மேற்கொள்கின்றார்.

    திருப்பரங்குன்றத்தில் மே 8, 9-ந்தேதியும், ஒட்டப்பிடாரத்தில் 10-ந்தேதியும், சூலூரில் 11-ந்தேதியும், அரவக்குறிச்சியில் 12, 13-ந்தேதியிலும் பிரசாரம் செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko #TNByPolls
    4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது. #TNByPolls #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தல்களில் அவரது கட்சி களம் இறங்கியது.

    தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் களம் இறங்குவதாக அறிவித்த கமல் தனது பிரசார பயணத்தையும் வெளியிட்டார்.

    மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் அவர் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூறியதாவது:

    ‘4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் உறுதியாக போட்டியிடுகிறோம். வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தயாராகி விடும். நாளை அறிவிக்கப்படும்.


    நாளையே வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் விடுமுறை என்பதால் வேட்பாளர்கள் வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்வார்கள். இந்த 4 தொகுதி தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் செய்த அதே தீவிர பிரசாரத்தை இந்த 4 தொகுதிகளுக்கும் கமல்ஹாசன் தர இருக்கிறார். அதற்காக சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி விட்டார்.

    இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க அறிவிப்பு வெளியிடவில்லை. அறிவிப்பு இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெற்றுதான் வேட்பாளர்கள் தேர்வு செய்துள்ளோம். தகுதியான, பலமான வேட்பாளர்களாக தான் இருப்பார்கள்.

    2 நாட்களாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்கான மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. முதலில் எல்லா தொகுதி வேட்பாளர்களும் தனித்தனியாக அழைக்கப்பட்டு தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தலில் அவர்களுக்கு இருந்த நடைமுறை பிரச்சனைகள், நிர்வாகிகளின் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு அடுத்து எல்லா மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடந்தது. இதில் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு கருத்துகளை கேட்டுக்கொண்டார். வேட்பாளர்களின் பிரச்சனைகளை கவனத்துடன் கேட்டார். இந்த மதிப்பாய்வு கூட்டம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 4 தொகுதிகளுக்கான தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் எங்கள் வியூகம் வேறு விதமாக இருக்கும்’.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #TNByPolls #KamalHaasan #MakkalNeedhiMaiam
    அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #TNElections2019 #TNAssemblyBypoll #NaamThamizharKatchi
    சென்னை:

    தமிழகத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி நீங்கலாக ஏனைய 38 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருந்தது.

    அதன்பிறகு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. அதன்பின்னர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் தொடர்ச்சியாக, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

    இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் பா.க. செல்வம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா, சூலூர் தொகுதியில் வெ. விஜயராகவன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TNElections2019 #TNAssemblyBypoll #NaamThamizharKatchi
    ×