search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SIT"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். 

    இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மணிப்பூரில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவம் மற்றும் போலீசாரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்கும் சிபிஐ-யிடம் சுப்ரீம் கோர்ட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. #ManipurFakeEncounterCase #CBI
    புதுடெல்லி:

    கடந்த 1979 மற்றும் 2002-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட சட்ட விரோதக் கொலைகளை போலி என்கவுண்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிகழ்த்தியது என அந்த மாநிலத்தின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்திய பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற படுகொலைகளில் இந்திய ராணுவம், அசாம் ரைபிள் படைப்பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், வழக்கு எந்த விசாரணையும் இன்றி இருப்பதாக மீண்டும் ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராக உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று இந்த மனு நீதிபதிகள் லோகுர், லலித் ஆகியோர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் வேனுகோபால், சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராகினர்.

    போலி என்கவுண்டர் வழக்கு ஓராண்டாக நடந்து வந்த நிலையில் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? என நீதிபதிகள் சிபிஐ இயக்குநரிடம் கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    வழக்கில் யாரை கைது செய்ய வேண்டும் என்பதை சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறோம் என நீதிபதிகள் கூறினர். மேலும், 5 குற்றப்பத்திரிகைகள் அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ இயக்குநர் உறுதியளித்தார்.

    இந்த வழக்கில் சிபிஐ-யின் விசாரணை பரமபத விளையாட்டை போல இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்கை அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைக்கும் சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×