search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafael corruption"

    ரபேல் ஊழலில் பிரதமர் மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். #Thirumavalavan #PMModi
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரபேல் விமான பேர ஊழலில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டதும் அதனால் இந்திய அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதும் ஆதாரப்பூர்வமாக ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் உண்மை முழுமையாக வெளிப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் மீண்டும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

    ரபேல் விமான பேரத்தில் அதற்கென நியமிக்கப்பட்ட குழு மட்டும்தான் ஈடுபட்டது வேறு எவரும் அதில் தலையிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.



    ஆனால் மத்திய அரசு கூறியதற்கு மாறாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளோடு பிரதமர் அலுவலகம் பேரத்தில் ஈடுபட்டதும், அதனால் ஏற்கனவே இந்தியாவின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நட்டம் ஏற்படும் நிலை உருவானதும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆவணங்களின் சான்றுகளோடு ஆங்கில நாளேட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே, மோடி அரசின் பொய் வாக்குமூலத்தை நம்பி முடிவெடுத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan #PMModi
    ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றும் பாராளுமன்றத்தில் அமளி நீடித்தது.

    மக்களவை இன்று காலை கூடியதும், மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் ரபேல் வழக்கின் தீர்ப்பு மற்றும் சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ரபேல் விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போட்டி போட்டு முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



    2 மணிக்கு அவை கூடியபோது ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் மீண்டும் முழக்கமிட்டனர்.  அவர்களுக்கு பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதேபோல் அதிமுக, கேரள கம்யூனிஸ்ட் எம்பிக்களும் தங்கள் கோரிக்கைளை முன்வைத்து முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    ×