search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Om"

    • தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் நேர்த்திக் கடனாக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
    • ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை சிறுவாபுரி தலத்துக்கு உண்டு.

    01. செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் கோவில் ராஜ கோபுரம் முன்பு விளக்கேற்றி வழிபட்டு செல்வார்கள்.

    02. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் நேர்த்திக் கடனாக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

    03. இங்கு முருகனை பாலனாகவும், வள்ளியோடு திருமணம் புரிந்து கொள்ளும் மணக்கோலத்திலும் இரு வேறு நிலைகளில் காண முடிகிறது.

    04.ஆரம்ப காலத்தில் முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.

    05. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப்பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.

    06. பலி பீடத்தின் அடியில் உப்பு, மிளகு போட்டு, பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

    07. சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிகவும் விசேஷமானது.

    08. அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ். சொந்த வீடு வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இதை பாடுகிறார்கள். வீடு, தொழில், திருமணம் செல்வம், மோட்சம் என்று அனைத்தையும் தரும் திருப்புகழ் இது.

    09. ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை சிறுவாபுரி தலத்துக்கு உண்டு.

    10. வேண்டுதல் வேண்டியபடி சீக்கிரமாகவே நிறைவேறி விடும்.

    11. கோவில் முன்பு ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளன.

    12. சென்னையில் இருந்து செங்குன்றம், காரனோடை வழியாகவும், மீஞ்சூர், பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம்.

    13. இங்கு முருகனை வணங்க செவ்வாய்க்கிழமை சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

    14. கோவில் சிறிய அளவில் இருந்தாலும் பல நூற்றாண்டு பழமையானது.

    15. பக்தர்கள் அனைவருக்கும் திருநீறு பிரசாதம் கவரிலேயே வழங்கப்படுகிறது.

    16. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதால் இங்கு அமர்ந்துள்ள முருகப்பெருமான் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    17. லவ-குசா இருவரும் சிவ பெருமானையும், முருகனையும் இங்கு வழிபட்டு உள்ளனர். ராமாயண காலத்தில் ராமருக்கும், லவ-குசனுக்கும் போர் நடந்த இடம் இது என்று கூறப்படுகிறது.

    18. வள்ளியுடன் திருமண ேஜாடியாக முருகன் இங்கு வந்து தங்கியதால் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடக்கும்.

    19. கோவில் அமைந்துள்ள ஊர் சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, குசலபுரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    20. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் சாக்லேட்டுகளை பிரசாதமாக வழங்குகின்றனர்.

    • சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.
    • இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.

    இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் மாமியார்-மருமகள் சண்டை ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

    இதில் சிக்கி தவிக்கும் மாமியார்கள், மருமகள்கள் வாயை அடைக்கும் வகையிலும் மருமகள்கள் இனிமேல் மாமியார்கள் சண்டைக்கே வராமல் அடங்கி போகும் வகையிலும் ஒருவருக்கொருவர் இங்கு பூட்டுகளை போட்டு பூட்டி செல்கின்றனர்.

    பின்னர் அந்த சாவிகளை அவர்கள் ேகாவில் உண்டியலிலோ அல்லது அங்குள்ள திருக்குளத்திலோ வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இதுபற்றி கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, "எதற்காக பக்தர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் பிரார்த்தனையை வெளியில் சொல்லக் கூடாது என கூறி நழுவி விடுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.
    • தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான்.

    முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.

    முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

    முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

    இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடியிருக்கின்றார்.

    அதன் மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பு பெற்றுள்ளன.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ,உ,ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த தாகவும் கூறப்படுகிறது.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    வளம் மிகுந்த வாழ்வு அமைய வரம் மிகுந்த சிறுவை முருகனை வழிபட வாருங்கள்!

    • ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.
    • அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    முருகன் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன்,

    ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவண பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது.

    இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

    கார்த்திகைப் பெண்கள் 6 பேர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர்.

    பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார்.

    ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார்.

    கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் இவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ.உ.ம. என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ.உ.ம. மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப்

    புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.

    ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடி கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    • வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
    • ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.

    செல்வம் தரும் வலம்புரி சங்கு

    கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.

    சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்றுபருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.

    சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு எனப்படும்.

    ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரி சங்கு.

    வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும்.

    இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.

    தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.

    ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரி சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

    வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும்பலவித நன்மைகள் கிடைக்கும்.

    மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது.

    சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.

    செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும்

    வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்துபால்பாயசம் செய்துபசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.

    இப்படி செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.

    ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும்.

    இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.

    ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில்பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.

    குழந்தைகளுக்கு இதில்பசும்பால் ஊற்றி வைத்துப்பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

    வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.

    இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.

    இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்று சந்தேகப்படுவதாக கூறிய பாரதிராஜா, என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் என்றார். #Om #Bharathiraja
    பாரதிராஜா இயக்கி நடித்துள்ள படம் ஓம். இதில் கதாநாயகியாக நட்சத்திரா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் அதிகமாக புதுமுகங்களை வைத்து படம் இயக்கவே விரும்புவேன்.

    பிரபலமான நடிகர்கள் படத்தில் இருந்தால் ரசிகர்களுக்கு இவர் இதை செய்வார் என்னும் எண்ணம் இருக்கும். ஆனால் புதுமுகங்கள் என்றால் கதையில் மட்டும் கவனம் இருக்கும். இந்த படத்தில் கூட பிரபல நடிகைகள் நடிக்க ஆர்வமாக இருந்தார்கள்.

    ஆனால் கதைக்காக நட்சத்திராவை பிடிவாதமாக இருந்து தேர்வு செய்தேன். தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் கதாநாயகிகள் குறைந்து விட்டார்கள். காரணம் தமிழ் பெண்கள் இன்னமும் சினிமாவில் நடிக்க வர தயங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை.



    ஒருவேளை இயக்குனர்கள் நிறத்துக்காக பிறமொழி நடிகைகளை கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களா என்றும் சந்தேகமாக இருக்கிறது. என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும்’ என்று கூறி இருக்கிறார். #Om #Bharathiraja

    ×