search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New jersey"

    • நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது.
    • இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கின. அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் குலுங்கின.

    நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

    பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    நிலநடுக்கம் குறித்து, ஐகானிக் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அதன் எக்ஸ் பக்கத்தில், "நான் நன்றாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், " நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய- அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த எவரும் தயவுசெய்து madad.newyork@mea.gov.in என்கிற முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது
    • மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்ஸியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்தது.

    இதற்கு முன்னதாக, மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அறிமுகம் செய்தது.
    • இதேபோல, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்வாகமும் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

    மும்பை:

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தோம் என மும்பை நிர்வாகம் அறிவித்தது.

     இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.

    இதேபோல், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர்.

    • சென்னை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் புதிய சீருடை அணிந்து களம் இறங்க உள்ளது.
    • இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன.

    டெல்லி:

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் தொடரின் இறுதி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 65 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை களம் இறங்க உள்ளது.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய சீருடை அணிந்து ஆட உள்ளதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த தொடரில் இதற்கு முன்னதாக மும்பை, பெங்களூரு, குஜராத் அணிகள் மாற்று சீருடையுடன் விளையாடி உள்ளன. லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் புதிய சீருடையுடன் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×