search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton"

    • இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை.
    • கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவரான ராயபுரம் அலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    முறைப்படி இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை. கடைகளில் மாநகராட்சி ஊழியர்களே நாங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் கழிவுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். கோழி இறைச்சியில் இருந்துதான் அதிக அளவில் கழிவுகள் குவியும். மற்றபடி ஆட்டு இறைச்சியில் இருந்து அதிக கழிவுகள் குவிவதில்லை.

    ஏனென்றால் ஆட்டிலுள்ள உறுப்புகளில் அனைத்துமே பயன்படுபவைதான். கோழி இறைச்சி கழிவுகளை சில கம்பெனிகள் வாங்கி சென்று விடுகின்றன. இறால் பண்ணை மீன் வளர்ப்பு போன்ற பண்ணைகளில் இருந்து வருபவர்கள் கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    இதே போன்று மாநகராட்சி நிர்வாகமும் சென்னையில் இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கி விடலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவின பட்டியலில் மட்டன் பிரியாணியின் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. #EC #LSPolls
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கி இருக்கும் அவர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்காக சிலப் பல கோடிகளை வாரியிறைக்கவும் சிலர் தயங்குவது இல்லை.

    ஆனால் அப்படிப்பட்ட வேட்பாளர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது வேட்பாளர் தங்கள் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அதிகப்பட்ச விலை விவரங்களை தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

    அதன்படி, வேட்பாளர்கள் பயன்படுத்தும் 2 படுக்கை வசதி கொண்ட அறையின் வாடகை 5 நட்சத்திர விடுதி என்றால் ரூ.9300 மற்றும் வரிகளும் அடங்கியதாக இருக்க வேண்டும். 3 நட்சத்திர விடுதி என்றால் ரூ.5,800 மற்றும் வரிகள் அடங்கி இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

    இதைப்போல மட்டன், சிக்கன், காய்கறி பிரியாணிகளின் விலை முறையே ரூ.200, ரூ.180, ரூ.100 ஆக இருக்க வேண்டும் எனக்கூறி உள்ள தேர்தல் கமிஷன், மற்ற உணவு வகைகளான சாப்பாடு ரூ.100, சிற்றுண்டி ரூ.100, தேநீர் ரூ.10, பால் ரூ.15, காய்கறி சாதம் ரூ.50, இளநீர் ரூ.40 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அறிவித்து இருக்கிறது.

    மேலும் பூசணிக்காய் ரூ.120, சேலை (பூனம்) மற்றும் டீ-சர்ட் முறையே ரூ.200 மற்றும் ரூ.175, வாழை மரம் ரூ.700, தொப்பி ரூ.50, பூக்கள் ரூ.60, சால்வை ரூ.150, தண்ணீர் ஒரு லிட்டர் ரூ.20, பிளச்சிங் பவுடர் கிலோ ரூ.90 போன்றவற்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வேட்பாளர்களுடன் செல்லும் தொழிலாளர்களின் ஊதியத்தை பொறுத்தவரை 8 மணி நேரத்துக்கு ரூ.450-ம், டிரைவர்களுக்கு ரூ.695-ம் வழங்கப்பட வேண்டும். பட்டாசுகளுக்கு ரூ.600 (ஆயிரம் வாலா), பேண்ட் மேளத்துக்கு ரூ.4500 (4 மணி நேரத்துக்கு) என நிர்ணயித்துள்ள தேர்தல் கமிஷன், திருமண மண்டபங்களுக்கு வாடகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அறிவித்து இருக்கிறது.

    வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் பயன்படுத்தும் எல்.இ.டி. திரைகளின் வாடகை ரூ.12 ஆயிரமாகவும் (8 மணி நேரம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர்களின் இத்தகைய தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தொகுதிக்கு 2 அதிகாரிகளை நியமித்து இருக்கும் தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பில் நடைபெறும் பிரசாரங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவும் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. #EC #LSPolls

    சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #DogMeatInChennai #MeatRumour
    சென்னை:

    சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் கடந்த 17-ம் தேதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த இறைச்சியை அனுப்பிய நபர் யார்?, சென்னையில் அவற்றை பெற வேண்டிய ஏஜெண்டு யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நாய்க்கறி பீதி காரணமாக பிரியாணி கடைகளில் விற்பனையும் சரிந்தது.



    இந்நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில்,  கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது. #DogMeatInChennai #MeatRumour
    ஒரு குடும்பத்துக்கு அரை கிலோ ஆட்டிறைச்சி எடுத்து சமைப்பதே குதிரைக்கொம்பாக உள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் ஒருவர் 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக தின்று தீர்த்துள்ளார். #22KgMutton #Muttoneatingchallenge
    சென்னை:

    நோய்களுக்கு பயந்து அசைவப் பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறிவிட்டாலும், சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

    ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ.., என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

    22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சோற்றுத்தட்டில் உதறி எடுத்து, ரசித்து சுவைக்கும் சுகமே அலாதியானது. #22KgMutton  #Muttoneatingchallenge

    இதை வீடியோ வடிவில் காண..,



    ×