search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai railway station"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் 10.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது.
    • ரெயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரு மார்க்கத்தில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

    சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு ஒரு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் அதே போல் இரவு 7.20 மணிக்கு ஒரு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படுகிறது.

    28 மணி நேர பயணத்துக்கு பிறகு இந்த ரெயில்கள் ஹவுரா சென்றடையும். பல ஆண்டுகளாக இந்த வழித் தடத்தில் இந்த இரு ரெயில்களும் தான் இயக்கப்படுகிறது.

    ஆனால் இப்போது பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.

    விபத்துக்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்கியது. வழக்கமாக காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் 10.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளால் ரெயில் நிரம்பி இருந்தது. ரெயில்கள் ரத்தானதால் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்த தொழிலாளர்கள் ஏராளமானோர் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்தனர்.

    இந்த ரெயில் கூடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகபட்டினம், பலாசா, பெர்காம்பூர் வழியாக நாளை மாலை 6 மணியளவில் ஹவுரா சென்றடையும்.

    இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா ரெயிலும் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    ரெயிலில் புறப்பட்டு சென்ற பயணிகள் சிலர் கூறும்போது, "விபத்து நடந்த பாலசோர் பகுதியை கடந்து செல்லும் போது ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்" என்றனர்.

    இதற்கிடையில் ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்ட சிறப்பு ரெயில் இன்று பிற்பகல் சென்னை வந்தடைகிறது.

    இன்றும் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர் யாராவது ஒடிசா செல்வதாக இருந்தால் அவர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படும். அவர்கள் கூடுதல் தகவல்களுக்கு 044-2533 0952, 044-2533 0953, 044-2535 4771, 044-2535 4148, 044-2533 0953 என்ற தொலை பேசி எண்கள் மூலமும், 90030 61974 எனும் கைப்பேசி எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #DogMeatInChennai #MeatRumour
    சென்னை:

    சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் கடந்த 17-ம் தேதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த இறைச்சியை அனுப்பிய நபர் யார்?, சென்னையில் அவற்றை பெற வேண்டிய ஏஜெண்டு யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நாய்க்கறி பீதி காரணமாக பிரியாணி கடைகளில் விற்பனையும் சரிந்தது.



    இந்நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில்,  கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது. #DogMeatInChennai #MeatRumour
    சென்னை வந்த ரெயிலில் ஆந்திர திருடர்கள் வங்கி பெண் ஊழியர் மற்றும் அரசு டாக்டரிடம் 57½ பவுன் நகைகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சென்னை:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் பி.வி.ராஜூ. இவரது மனைவி லட்சுமி (வயது 58). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி தனது கணவருடன் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ஐதராபாத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் இருவரும் தூங்க சென்றனர்.

    பின்னர் கூடூர் ரெயில் நிலையம் அருகே லட்சுமி எழுந்து பார்த்தபோது அவரது பையும், அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் செல்போன் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று சென்னை வந்த லட்சுமி, இது குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

    ஆந்திரா மாநிலம் சமல்காட் பகுதியை சேர்ந்தவர் பரக் குமார் (53). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் வாராந்திர ரெயில் மூலம் பரக்குமார் மற்றும் அவரது மனைவி சென்னைக்கு புறப்பட்டனர்.

    ரெயில் கூடூர் அருகே வந்தபோது பரக்குமார் ரெயிலில் கழிப்பறைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தான் வைத்திருந்த பையும், அதில் இருந்த 17½ பவுன் தங்க நகை உள்ளிட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்களும் திருட்டுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்து பரக்குமார் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார்.

    லட்சுமி மற்றும் பரக்குமாரின் புகாரின் அடிப்படையில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், இந்த சம்பவம் நடைபெற்றது ஆந்திரா என்பதால், இது குறித்து ஆந்திரா போலீசாரிடம் தகவல் தெரிவித்து வழக்கை ஆந்திராவுக்கு மாற்றம் செய்தார். 
    ×