search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவனம்"

    • இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை.
    • கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவரான ராயபுரம் அலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    முறைப்படி இறைச்சி கடைகளை அனுமதி பெற்று நடத்துபவர்கள் யாரும் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவது இல்லை. கடைகளில் மாநகராட்சி ஊழியர்களே நாங்கள் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் கழிவுகளை எடுத்துச் சென்று விடுவார்கள். கோழி இறைச்சியில் இருந்துதான் அதிக அளவில் கழிவுகள் குவியும். மற்றபடி ஆட்டு இறைச்சியில் இருந்து அதிக கழிவுகள் குவிவதில்லை.

    ஏனென்றால் ஆட்டிலுள்ள உறுப்புகளில் அனைத்துமே பயன்படுபவைதான். கோழி இறைச்சி கழிவுகளை சில கம்பெனிகள் வாங்கி சென்று விடுகின்றன. இறால் பண்ணை மீன் வளர்ப்பு போன்ற பண்ணைகளில் இருந்து வருபவர்கள் கோழி இறைச்சி கழிவுகளை வாங்கிச் சென்று தாங்கள் வளர்க்கும் இறால் மற்றும் மீன்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    இதே போன்று மாநகராட்சி நிர்வாகமும் சென்னையில் இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க அனுமதி வழங்கி விடலாம். இதன் மூலம் அந்த கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

    • விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் சாணத்தை இயற்கை விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வறட்சி ஏற்பட்டு கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.ஆண்டுதோ றும் மார்ச்,ஏப்ரல்,மே,ஆகிய மாதங்களில் வறட்சி ஏற்படும் என்பதால் கால்நடைத்துறையினர் தீவனத்தை மானிய விலையில் கால்நடைகளை வளர்ப்போருக்கு வழங்குவார்கள். இதன்படி 1 மாட்டுக்கு தினமும் 3 கிலோ வீதம் வாரத்துக்கு 21 கிலோ தீவனம் வழங்கப்ப ட்டது.குறிப்பாக 4 முதல் 5 தீவன வங்கிகள் அமைக்க ப்பட்டு, சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்ட உலர் தீவன ங்களும் மானிய விலையில் வழங்கப்பட்டன.

    இதனால் பால் உற்பத்தி பாதிக்க ப்படாமல் தடுக்கப்பட்டது டன் கால்ந டைகளை அடிமாடுகளாக விற்பனை செய்வதும் குறைந்தது.அந்த வகையில் தற்போது கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.
    • கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், திருவத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு செயல்விளக்கம் விவசாயிகளுக்கு நடத்த ப்பட்டது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசரஸ்வதி விவசாயிகளிடம் பேசிய போது, அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவ னம். மேலும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும்.

    இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூ டியது. கால்நடை தீவனப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரண மாக பல விவசாயிகள் கால்ந டைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.

    அசோலா கால்நடைகள், மீன், முயல் மற்றும் கோழி களுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும். இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்த ப்படுகிறது. அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது.

    இது நல்ல தீவனம் மற்றும் உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்றுத் தீர்வாகும் என எடுத்துக் கூறினார்.

    அசோலா வளர்ப்பு குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொ) பேசியதாவது, அசோலா வளர்ப்ப தற்காக பிளாஸ்டிக் தாள் தொட்டி மற்றும் குளத்தை பயன்படுத்தலாம். அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு ஓரளவு நிழலாக உள்ள பகுதியை தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு.

    ஏனெனில் 30 சதவீதம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி மிகவும் ஏற்றதாகும். பெரிய அளவில் அசோலாவை வளர்க்க திட்டமிட்டால் சிறிய கான்கிரீட் தொட்டியை உருவாக்கலாம்.

    கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிக்கிறது.1.5 முதல் 2 கிலோ அசோலா கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    ஆடு, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலா உணவளிக்கலாம் என்றார்.அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்திற்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் எம்.பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆ.தமிழழகன் மற்றும் வீ.ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
    • உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

     கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் போலீஸ் ஏட்டு சிவமுருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடியி ல் இருந்து அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 50), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சஞ்சீவி ராயர்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 60) ஆகியோர் கோழி மற்றும் வாத்துக்களுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. அதன்படி ஆனந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது.
    • கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 18 முதல் சேத்தி கிராமத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "கால்நடை கன்றுகள் காப்போம்" இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கன்றுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது:- கால்நடைகள், கன்றுகளுக்கு தனி தனியாக தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் கொடுக்க வேண்டும். கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் ஜி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, ராஜ்மோகன், கே.ஆர். மதிவாணன், சேதுராமன், சுந்தர்ராஜ், குப்புசாமி, ஏ. பன்னீர்செல்வம், மாரியம்மாள், என். மாரிமுத்து, வெங்கடேஷ், கே.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
    • இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் அருகே உள்ள அனுப்பூர் பகுதியில் குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரித்தல் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

    அட்மா திட்ட இனங்கள் பற்றியும், உழவன் செயலி யின் முக்கியத்துவம் பற்றி யும், மற்றும் முக்கிய மான பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, குறைந்த செலவினத்தில் கால்நடைகளுக்கான அடர் தீவனம் தயாரிக்கும் முறை குறித்து சேலம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கோபி ஆகியோர் விளக்க மளித்தனர்.

    வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி வட்டார வேளாண்மை இயக்குநர் சரஸ்வதி பேசினார். தொடர்ந்து, தரிசு நில ங்களை கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றுதல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

    இதில் தோட்டக்கலை த்துறை உதவி அலுவலர் அருட்செல்வம், ஊராட்சி தலைவர் விஜயன், உதவி கால்நடை மருத்துவர் பிரியா, உதவி வேளாண்மை அலுவலர் சிவனேசன் உள்ளிட்ட பல்வேறு துறை யைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவித் தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.

    • நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது
    • துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரம் கொங்கல்நகரம் கிராமத்தில் விவசாயி சுந்தரராஜன், கோட்டமங்கலம் விவசாயி ராமசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ 32 ஆதார நிலை விதைப்பண்ணைகளை, திருப்பூர் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அதன் பின் அவர் கூறியதாவது:-

    உணவே மருந்து என்ற அடிப்படையில், நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது.துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது. தற்போது உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் மீதான ஆர்வம் எளிதாக கிடைத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.

    இதில்சோளம் பிரதான சிறுதானிய சாகுபடி பயிராக உள்ளது. பிற சிறுதானியங்களை ஒப்பிடும்போது, அதிகளவு புரதசத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் செரிமானத்திற்கு உகந்தது.குடிமங்கலம் வட்டாரத்தில் சோளப்பயிர் சராசரியாக 400 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோ 32 ரகம் 105 முதல் 110 நாட்களில், 220 முதல் 300 செ.மீ., வரை வளரும்.மானாவாரி, இறவை என இரண்டு பருவத்திற்கும் ஏற்றது. தீவனம், தானியம் என இரண்டிற்கும் ஏற்ற ரகமாகும். இலைகள் நன்கு வளைந்து கதிர்கள் சமச்சீராகவும், தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

    இதன் ஆயிரம் தானிய எடை 16.25 கிராமாக இருப்பதால் ெஹக்டேருக்கு சராசரியாக 2,445 கிலோ, தானிய மகசூலும், 6,490 கிலோ தீவனமும் தரும் ரகமாகும். தானியம் அதிக புரதசத்தும் (11.31 சதவீதம் முதல் 14.66 சதவீதம்) நார்ச்சத்தும் (4.95 முதல் 5.8 சதவீதம்) கொண்டது. எனவே இந்த சோள ரகத்தினை விவசாயிகள் பயிரிட்டு தானியம், தீவனம் என இரண்டிலும் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்கலாம். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    மேலும் சிறுதானிய சோளம் சாகுபடிக்கு விதை பண்ணைகளை உரிய நேரத்தில் வயல் ஆய்வுகள் மேற்கொண்டு கலவன்கள் அகற்றி உரிய தொழில் நுட்ப தகவல்கள் வழங்கி தரமான விதைகளாக உற்பத்தி செய்ய வேண்டும் என விதை சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா பானு, உதவி விதை அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதம், மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
    • நெல் சாகுபடியில் பகல் நேர வெப்பநிலை, நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது.

    உடுமலை :

    தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் மாவட்ட வாரியாக வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை வெளியிடப்படுகிறது. அவ்வகையில் இவ்வாரம் திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதம், மாலை நேரத்தில் 65 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.நெல் சாகுபடியில் பகல் நேர வெப்பநிலை, நாற்றங்காலில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நிலவ ஏதுவாக உள்ளது. நாற்றங்காலை கண்காணித்து தேவைப்பட்டால் 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம்.எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி இறவை மக்காச்சோளம், சூரியகாந்தி நடவு செய்வதை தொடரலாம்.

    வளர் பருவத்தில் உள்ள கரும்பு சாகுபடியில் காய்ந்த தோகை உரிப்பது மற்றும் விட்டம் கட்டுவதன் வாயிலாக 150 நாட்கள் வயதுடைய முன் பருவ கரும்பில் துளைப்பான் பூச்சியின் தாக்கத்தை குறைக்கலாம். மழையுடன் காற்றின் வேகம் 10-14 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 5 மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

    தென்னை மரங்களுக்கு முதல் உரமாக மரம் ஒன்றுக்கு, யூரியா 650 கிராம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் தலா 1 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கை 2 கிலோவை, 50 கிலோ எருவுடன் கலந்து இடலாம்.குரும்பை உதிர்வை தடுக்க மரத்துக்கு 200 மி.லி., வீதம் வேளாண் பல்கலையின் வளர்ச்சி ஊக்கியை வேர் வாயிலாக அளிக்கலாம். உள்நோக்கிய வட்டப்பாத்தி எடுப்பதால் மழைநீரை சேகரிக்கலாம்.

    மழையின் காரணமாக புதிதாக முளைத்த புல்லை, கால்நடைகள் மேயவிடாமல் பாதுகாக்க வேண்டும். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் கால்நடைகளுக்கு உலர்ந்த திடமான தீவனங்களை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×