search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mann Ki Baat"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18-வது மக்களவை இளைஞர்களின் விருப்பத்தின் அடையாளமாகவும் இருக்கும்.
    • உற்சாகமும், ஆற்றலும் நிறைந்த இளைஞர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று 110-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தைக் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செய்ய இந்த நாள் சிறப்பான நாள். பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, உலகம் வளர்ச்சி பெறும் என மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.

    இந்தியாவில் பெண்கள் சக்தியானது அனைத்து துறைகளிலும் புதிய உச்சத்தை தொடுகிறது. கிராமங்களில் வசிக்கும் பெண்களால் டிரோன்களை இயக்க முடியுமா, பறக்கவைக்க வேண்டுமா என கேள்வி எழுந்தது. ஆனால் இன்று அதுவும் சாத்தியமானது. இயற்கை விவசாயம், நீர் சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பெண்களின் தலைமைப்பண்பு வெளிவந்துள்ளது.

    ரசாயனங்களால், நமது அன்னை பூமியானது அவதிப்பட்டது. வேதனையடைந்தது. ஆனால், நமது பூமியை காப்பதில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கை வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் பணியில் இளைஞர்கள் எவ்வளவு அதிகமாக பங்கேற்கிறார்களோ, அந்த அளவுக்கு அதன் முடிவுகள் நாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். உற்சாகமும், ஆற்றலும் நிறைந்த இளைஞர்களால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    18-வது மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இளைஞர்கள் பெறுகிறார்கள். இதன் பொருள் 18-வது மக்களவை இளைஞர்களின் விருப்பத்தின் அடையாளமாகவும் இருக்கும் .

    இளைஞர்கள் அரசியல், பொது அறிவு குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். விளையாட்டு, திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான சூழல் நாடு முழுவதும் பரவலாக உள்ளது. மார்ச் மாதத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

    110 எபிசோட்களில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், சாதனைகள் பற்றி மக்களுடன் பேசியது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

    மன் கி பாத் என்பது மக்களால் மக்களுக்காக, மக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு திட்டம். பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் சட்டத்தைப் பின்பற்றி அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாது. அடுத்ததாக 111-வது எபிசோடில் மன் கி பாத்தில் மக்களுடன் உரையாடுவேன் என தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்துள்ளது.
    • இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்து உள்ளது. அனைவரின் மனங்களில் ராமர் உள்ளார்.

    கடந்த 22-ம் தேதி மாலை நாடு முழுவதும் ராமஜோதி ஏற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடினர். அன்று நாட்டின் பலம் தெரிந்தது. கடவுள் ராமரின் ஆட்சி, நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது.

    பத்ம விருதுகளால் கவுரவிக்கப்படும் பலர், பெரிய மாற்றங்களைச் செய்ய அடிமட்டத்தில் இருந்து பணியாற்றியவர்கள்.

    பத்ம விருதுகள் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த விருது மக்களின் பத்மா ஆக மாறியுள்ளது. திறமையான விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருது மூலம் கவுரவிக்கப்பட்டனர்.

    இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. நமது இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற வெளிநாட்டினருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், தைவான், மெக்சிகோ மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் விருது பெற்றுள்ளனர்.

    இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறப்பாக இருந்தது. இந்த அணிவகுப்பில் இருந்த பெண்கள் சக்தி குறித்து அனைவரும் பேசினர்.

    இன்றைய இந்தியாவில் நமது மகள்கள், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பெண்கள் முத்திரை பதித்துள்ளனர். நாடு முழுவதும் இக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியும் விரிவடைகிறது.

    இன்று நிறைய பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால், பலரின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளது. இவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

    • லோகநாதன் சிறுவயது முதலே ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
    • கடந்த 25 வருடங்களாக இதுவரை அவர் 1500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார்.

    சூலூர்:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடுவதோடு, பல்வேறு சேவைகள் செய்து வரும் தன்னார்வலர்களை பாராட்டியும் வருகிறார்.

    அந்த வகையில் இந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில், தனது சிறுவயது முதலே தன் ஊதியத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து உதவி வரும் கோவையை சேர்ந்த கூலித்தொழிலாளியான லோகநாதன் குறித்தும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி பேசியதுடன், அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

    சூலூர் பகுதியில் வசித்து வரும் லோகநாதன் சிறுவயது முதலே ஏழை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். லோகநாதன் தன் ஊதியத்தில் ஒரு பகுதியை குழந்தைகளுக்கு உதவ நன்கொடையாக வழங்கி வருகிறார். கடந்த 25 வருடங்களாக இதுவரை அவர் 1500க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார்.

    குறிப்பாக அவர் கழிவறையை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த உதவிகளை செய்து வருகிறார். இதுதவிர பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயன்படுத்தப்பட்ட சட்டைகளை பெற்று ஏழை, எளிய குழந்தைகளுக்கு கொடுக்கும் சேவையையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

    பிரதமர் மோடி பாராட்டியது குறித்து லோகநாதன் கூறியதாவது:-

    பிரதமர் பாராட்டிய லோகநாதனை மக்கள் சந்தித்து பாராட்டிய காட்சி

    பிரதமர் பாராட்டிய லோகநாதனை மக்கள் சந்தித்து பாராட்டிய காட்சி

    நான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன்பிறகு வறுமை காரணமாக என்னால் படிக்க முடியவில்லை. எனவே வெல்டிங் மற்றும் தினக்கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருக்கும்.

    இருந்த போதும் வறுமையில் வாடும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆர்வம். அதற்காக கழிவறைகளை சுத்தம் செய்வதில், கிடைக்கும் பணத்தை சேமித்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறேன்.

    இந்த சேவைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து விருது பெற்றிருந்தாலும், பிரதமர் மோடி எனது சேவையை பாராட்டி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதை நான் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.

    பிரதமரின் இந்த பாராட்டையும், பெருமையையும் கோவை மாவட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தூய்மை பணியை செய்து கொண்டு மக்கள் சேவையாற்றி வரும் என்னை உலகம் முழுக்க தெரியப்படுத்திய பிரதமருக்கு நன்றி. பிரதமரின் பாராட்டு மேலும் பல சேவைகள் செய்ய என்னை ஊக்குவித்துள்ளது.

    • நவம்பர் 26-ந்தேதியை நாம் ஒருபோதும் மறக்க இயலாது.
    • அரசியலமைப்பு தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    107-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    நவம்பர் 26-ந்தேதியை நாம் ஒருபோதும் மறக்க இயலாது. இந்த நாளில் தான் நாட்டில் மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது.

    பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய இந்த தாக்குதல் நாடு முழுவதையும் உலுக்கி விட்டது. இதில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்த அந்த துணிச்சலான இதயங்களை நாடு இன்று நினைவு கூர்கிறது.

    மும்பை தாக்குதலில் இருந்து மீண்டு தற்போது முழு துணிச்சலுடன் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டோம். இது இந்தியாவின் திறமை தான்.

    இன்னொரு காரணத்திற்காக இந்த நாள் முக்கியமானது. 1949-ல் அரசியலமைப்பு சபை இந்த நாளில் இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டது. 2015-ல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை கொண்டாடும் போது நவம்பர் 26-ந் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் வந்தது எனக்கு நினைவிருக்கிறது. அரசியலமைப்பு தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமீபத்தில் பண்டிகைகளின்போது சுமார் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் இடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது.

    கையில் இருந்து பணம் கொடுக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு நீங்கள் டிஜிட்டல் மூலமாக மட்டுமே பணம் செலுத்துங்கள். ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் அனுபவங்களையும், புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    தீபாவளி பண்டிகையின்போது பெரிதளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

    21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பாகும். நாம் அனைவரும் சேர்ந்து மக்களின் கடமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கான உறுதியை நிச்சயம் நிறை வேற்றுவோம்.

    'தூய்மை இந்தியா' இப்போது முழு நாட்டிற்கும் பிடித்த தலைப்பாக மாறி உள்ளது. இது பொது சுகாதாரம் தொடர்பான மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது. இந்த முயற்சி தேசிய உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது. இது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது.

    இந்த பிரசாரம் பல்வேறு தரப்பு மக்களை குறிப்பாக இளைஞர்களை கூட்டு பங்களிப்புக்கு ஊக்கப்படுத்தி உள்ளது. குஜராத்தின் சூரத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து 'புராஜெக்ட் சூரத்'-யை தொடங்கியுள்ளனர். அவர்கள் பொது இடங்களையும், டுமாஸ் கடற்கரையையும் சுத்தம் செய்து வருகிறார்கள்.

    இந்த இளைஞர்கள் குழு பல லட்சம் கிலோ குப்பைகளை அகற்றியுள்ளனர். அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். தூய்மை என்பது ஒருநாள் அல்லது ஒரு வாரத்திற்கான பிரசாரம் அல்ல. அது வாழ் நாள் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு முயற்சியாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து 10 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் பலியானார்கள்.

    • மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
    • உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மூலம் இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என்றார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 107-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    நாட்டைக் கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

    நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

    நவம்பர் 26-ம் தேதியை யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டில் கொடூர தாக்குதல் நடந்த தினம் இன்று. மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய தினம் மற்றொரு முக்கியமான நாள். இந்த நாளில்தான் 1949-ம் ஆண்டு அரசியல் அமைப்பை, அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டது. நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் ஆகி உள்ளது.

    உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவு பிரசாரம், நாட்டிற்கு பல வாய்ப்புகளைத் திறந்துள்ளது. நமது பொருளாதாரத்திற்கு வலிமையை அளித்துள்ளது. நாட்டின் சமமான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது.

    சர்வதேச பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு கண்டபோது உள்ளூர் பொருட்களுக்கான நமது ஆதரவானது, இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க உதவியது என தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளனர்.
    • மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி உங்கள் கருத்தை சொல்லலாம்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி தொடங்கினார். இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

    இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்) நடத்திய ஆய்வில் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது:-

    நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது கேட்டுள்ளனர்.

    23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள், மேலும் 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி கொண்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்துள்ளனர். 73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    கருத்து கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 59 சதவீதம் பேர், அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.

    இதற்கிடையே பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் 26-ந் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச உள்ளார். இதில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி உங்கள் கருத்தை சொல்லலாம்.

    • பிரதமர் மோடி இன்று 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
    • அப்போது பேசிய அவர், இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது என்றார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி 104-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில், இன்று 105வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, கோடிக்கணக்கான மக்கள் இந்த சம்பவத்தை ஒவ்வொரு கணமும் வெவ்வேறு ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் கண்டுகளித்தனர். இதை இஸ்ரோவின் யூடியூப் லைவ் சேனலில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர், இதுவே சாதனையாக உள்ளது. சந்திரயான்-3 மீது கோடிக்கணக்கான இந்தியர்களின் பற்று எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுகிறது.

    சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு ஜி-20 மாநாடு ஒவ்வொரு இந்தியரின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியுள்ளது. பாரத மண்டபம் ஒரு பிரபலம் போல் ஆகிவிட்டது. மக்கள் அங்கு செல்பி எடுத்து பெருமையுடன் பதிவிட்டு வருகின்ற னர். இந்த உச்சிமாநாட்டில், ஆப்பிரிக்க யூனியனை ஜி-20-ல் முழு உறுப்பினர் ஆக்கியதன் மூலம் இந்தியா தனது தலைமையை நிரூபித்துள்ளது.

    எந்தவொரு துறையும் குறைந்த முதலீட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்றால் அது சுற்றுலாத் துறைதான். சுற்றுலாத் துறையை அதிகரிப்பதில் எந்த நாட்டின் மீதும் நல்லெண்ணமும் ஈர்ப்பும் மிக முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மீதான உலக மக்களின் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது மற்றும் ஜி20 வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு, இந்தியாவின் மீதான உலக மக்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

    ஜி20க்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் இந்தியா வந்தனர். இங்குள்ள பன்முகத்தன்மை, பல்வேறு மரபுகள், பல்வேறு உணவு வகைகள், நமது பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்து கொண்டனர். இங்கு வரும் பிரதிநிதிகள் தங்களுடன் கொண்டு வந்த அற்புதமான அனுபவம் சுற்றுலாவை மேலும் விரிவுபடுத்தும்.

    சில நாட்களுக்கு முன்பு, சாந்தி நிகேதன் மற்றும் கர்நாடகாவின் புனித ஹொய்சலா கோவில்கள் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான சாதனைக்காக அனைத்து நாட்டு மக்களையும் நான் வாழ்த்துகிறேன். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பண்டைய சமஸ்கிருத வசனத்திலிருந்து சாந்திநிகேதன் என்ற பொன்மொழியை எடுத்தார்.

    அந்த வசனம்-'யத்ர விஸ்வம் பவத்யேக் நீதம்' அதாவது உலகம் முழுவதையும் ஒரு சிறிய கூட்டில் அடைக்கக்கூடியது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கர்நாடகாவின் ஹொய்சலா கோவில்கள் 13-ம் நூற்றாண்டின் சிறந்த கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றவை. இந்தக் கோவில்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, கோவில் கட்டுமானத்தின் இந்திய பாரம்பரியத்துக்குக் கிடைத்த மரியாதையாகும்.

    இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சொத்துக்களின் எண்ணிக்கை தற்போது 42ஐ எட்டியுள்ளது. நமது வரலாற்று மற்றும் கலாச்சார இடங்கள் முடிந்தவரை உலக பாரம்பரிய தளங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் முயற்சி. நீங்கள் எங்காவது பயணம் செய்யத் திட்டமிடும் போதெல்லாம், இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காண முயற்சிக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    வெவ்வேறு மாநிலங்களின் கலாசாரத்தைப் புரிந்து கொள்ள, பாரம்பரிய தளங்களைப் பார்க்கவும். இதன்மூலம், உங்கள் நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றை நீங்கள் அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் வருமானத்தை அதிகரிக்க ஒரு முக்கிய ஊடகமாக மாறுவீர்கள்.

    இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் பல நூற்றாண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடிப்படையாக இருக்கும்.

    ஆப்பிரிக்க யூனியனை ஜி20-ல் உறுப்பினராக்குவதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் தலைமை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

    உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக தனித்துவமான நூலகத்தை இளைஞர்கள் ஆரம்பித்துள்ளனர்.

    டிஜிட்டல் தொழில்நுட்ப காலகட்டத்திலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளை வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

    பண்டிகை காலம் துவங்க உள்ள நேரத்தில் உள்ளூர் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகளுக்கு ஒரு கையேடு வழங்கப்பட்டது
    • தீன் இலாஹி எனும் புதிய கோட்பாட்டை உருவாக்கினார்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று "மன் கி பாத்" எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார்.

    இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து இருப்பதால், இதன் 100வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போது பா.ஜ.க.வினர் பெருமையுடன் கொண்டாடினர்.

    சமீபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 2-நாள் உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு "பாரத்: ஜனநாயகத்தின் தாய்" எனும் ஒரு சிறு கையேடு வினியோகிக்கப்பட்டது. இதன் 38-வது பக்கத்தில் மொகலாய பேரரசர் அக்பர் குறித்து பிரசுரமாகியுள்ளது.

    அதில், "காலங்காலமாக இந்தியாவில் மக்களின் உணர்வு, ஆட்சி அமைப்பவர்களுக்கு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மொகலாய பேரரசர் அக்பர் ஆட்சியின் போது மதங்களை பற்றி எண்ணாமல் பொது நலனுக்காக அனைவரையும் அரவணைத்து செல்லும் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டது. தீன்-இ-லாஹி எனும் ஒருங்கிணைந்த மத கோட்பாட்டை அக்பர் உருவாக்கினார். தனது காலத்தையும் தாண்டி எதிர்கால தலைமுறைகளின் நல்வாழ்வு குறித்து சிந்தித்தவர் அக்பர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் துணையுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரதமரின் "மன் கி பாத்" நிகழ்ச்சியை இந்த கையேட்டுடன் தொடர்புபடுத்தி பா.ஜ.க.வை கிண்டல் செய்யும்விதமாக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

    அதில் அவர், "ஜி20 பதிவேடு: முகலாய பேரரசர் அக்பரை அமைதி மற்றும் ஜனநாயகத்தின் முன்னோடியாக புகழ்கிறது. உலகத்திற்கு ஒரு முகம்; பாரத் எனும் இந்தியாவிற்கு மற்றொரு முகம். உண்மையான இதயத்தின் குரல் எது என தெரிவியுங்கள்," என்று பதிவிட்டிருக்கிறார்.

    • இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள்.
    • தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்?

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சந்திரயான்-3 மிஷன் வெற்றி மிக பிரமாண்டமானது. இது புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் சந்திராயன்3 மிஷன் பெண் சக்திக்கு நேரடி உதாரணம். இந்த பணியில், பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்?

    செப்டம்பர் மாதம் இந்தியாவின் திறனைக் காணப் போகிறது. ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இந்தியா முழுமையாக தயாராக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல உலக அமைப்புகளின் தலைவர்கள் டெல்லி வரவுள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வாழ்க்கைப் பயணங்களை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
    • பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 104வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நாளை காலை 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். இந்தியா முழுவதிலும் இருந்து எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மன் கி பாத் அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கி, அதன் 100வது அத்தியாயத்தை ஏப்ரல் 30, 2023 அன்று அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • சத்ரபதி சிவாஜியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
    • யோகாவை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.

    இந்த மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் இன்றே 102-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    அடுத்த வாரம் நான் அமெரிக்காவில் இருப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அமெரிக்கா செல்வதற்கு முன் உங்களிடம் பேச விரும்புகிறேன். பிபோர்ஜோய் புயல், குஜராத்தின் கட்ச்சில் நிறைய அழிவை ஏற்படுத்தியது.

    ஆனால் கட்ச் சூறாவளியை எதிர்கொண்ட தைரியமும், தயார்நிலையும் முன்னோடியில்லாதது. சூறாவளி போன்ற கடினமான மற்றும் மிகப்பெரிய கடினமான மற்றும் மிகப் பெரிய சவால்களை சமாளிக்க இந்த உத்வேகம் இந்தியர்களுக்கு உதவுகிறது.

    பிபோர்ஜோய் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து கட்ச் மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்த்து போராட ஒரு சிறந்த வழி உள்ளது. அது இயற்கையை பாதுகாப்பது. இது பருவமழை காலத்தில் நமது பொறுப்பை இன்னும் அதிகரிக்கிறது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கை பேரிடர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதில் இருந்து விரைவாக மீள முடியும்.

    இந்த ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. யோகாவை உங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அதை அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா, ஜனநாயகத்தின் தாய். நமது ஜனநாயக மதிப்புகளை உயர்வாக கொண்டுள்ளோம். எனவே எமர்ஜென்சி விதிக்கப்பட்ட ஜூன் 25-ந்தேதியை நாம் மறக்க முடியாது. இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி ஒரு இருண்ட காலம். அதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

    ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் அன்றைய காலத்தில் எவ்வளவு சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்பதை நினைத்தால் இன்றும் மனம் நடுங்குகிறது. காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த இலக்கை அடைவதில் இளைஞர்களும் பங்களிக்கின்றனர்.

    காசநோய்க்கு எதிரான இயக்கம் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை தத்தெடுத்து வருகிறது. இதுவே இந்தியாவின் உண்மையான பலமாகும்.

    சத்ரபதி சிவாஜியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத் திறன்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவரது நீர் மேலாண்மை, கடற்படை இன்றும் இந்தியாவின் பெருமையாக உள்ளது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோட்டைகள் இன்று வரை கம்பீரமாக நிற்கின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர்.
    • அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    இன்று அவர் 99-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே மிகுந்த உற்சாகம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 100-வது நிகழ்ச்சி தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

    இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். சமீபத்தில் வந்தே பாரத் ரெயிலை ஆசியாவின் முதல் பெண் டிரைவர் சுரேகா யாதவ் இயக்கினார்.

    சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டார். நாகாலாந்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருதை பெண் இயக்குனர் வென்றுள்ளார்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். உறுப்புகளை பெற்றவர்கள், தானம் செய்தவர்களை கடவுளாக பார்க்கிறார்கள்.

    பஞ்சாப்பில் சுக்பீர்சிங்-சுக்பீத் கவுர் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 39 நாட்களில் உலகை விட்டு பிரிந்தார். அந்த மகளின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் கொண்டாடப்பட்டன. நாம் ஒருவரையொருவர் தெரிந்து, அறிந்து கொள்ளும் போது ஒற்றுமை உணர்வு வலுவடைகிறது.

    இந்த ஒற்றுமை உணர்வுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற உள்ளது. சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதி வரை நடைபெறும்.

    குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவுக்கும், தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிராவை சேர்ந்த பலர் தமிழ்நாட்டின் பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்றும் சவுராஷ்டிரா தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    இந்நிகழ்ச்சி குறித்து தமிழகத்தை சேர்ந்த பலர் எனக்கு பாராட்டு கடிதங்கள் எழுதியுள்ளனர். மதுரையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் எழுதிள்ள கடிதத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சவுராஷ்டிரா-தமிழ் உறவுகளை பற்றி முதன் முறையாக ஒருவர் சிந்தித்து, சவுராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார். இவரது இந்த வார்த்தைகள் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகளின் வெளிப்பாடு.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுகாதாரமான சூழலை மக்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×