search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local election"

    தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அரசாணை வெளியிட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பற்றி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கடந்த 2½ வருடமாக பல்வேறு காரணங்களை சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலை சரிப்படுத்த அரசாணை போடுவது எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு விசயமாகும்.

    ஏனென்றால் வாக்காளர் பட்டியல் தயார் நிலையில்தான் உள்ளது. தேர்தலை தள்ளிப்போட சுப்ரீம்கோர்ட்டில் காரணம் சொல்வதற்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளனர்.


    2½ வருடமாக தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டு தற்போது மீண்டும் முதலில் இருந்து வாக்காளர்பட்டியல் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்று சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார். இந்த அறிவிப்பு வருகிற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால், எந்தெந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்ற விபரம் முழுமையாக வெளியிடப்படவில்லை.

    வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அனைத்து பணிகளும் தயாராகத்தான் உள்ளன. ஆனாலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு தோல்விபயம்தான் காரணம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்காளர் வரையறை பணி முடிந்துள்ள நிலையில் ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது.

    அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

    தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இட ஒதுக்கீடு பிரச்சினையை சரி செய்த பிறகும் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதுபற்றி கோர்ட்டில் தமிழக அரசு கூறும்போது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறுவதாகவும், அந்த பணிகள் நிறைவுற்றதும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாகவும் அறிவித்தது.

    அதன்பிறகும் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது.

    2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு என வகைப்படுத்தி பிரிக்கப்பட்டது.

    இதிலும் இட ஒதுக்கீடு படி வார்டுகள் பிரிக்கப்பட்டது. அதன்பிறகும் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதால் தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

    கடந்த 4-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமி‌ஷன் சார்பில் பதில் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


    அதில் வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்ய வேண்டியது. உள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுமை பெறவில்லை. எனவே உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று கூறி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே, பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்பட்டியல் சட்டமன்றம் வாரியாக தயார் நிலையில் உள்ளதால் அதை வார்டு வாரியாக பிரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலை பிரித்து சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகிவிடுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்த மாதம் சட்டசபை கூடும். எனவே ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது.

    மானியக்கோரிக்கை மீதான விவாதம் 25 நாட்கள் நடைபெறும் என்பதால் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கிவிடும். எனவே, ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

    இதைக் கண்டித்து 24-ந்தேதி மாலை முதல் பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர். தமிழக அரசோ அவர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் திடலில் அடைத்தது. அங்கும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் நேற்றிரவு அவர்களை அங்கிருந்து காவல்துறை மூலம் விரட்டியடித்தது.

    அதைத்தொடர்ந்து நேற்றிரவு முதல் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். உண்ணாநிலை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அரசு மனம் இறங்கவில்லை.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த காலங்களில் ஏராளமான போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போதும் ஏராளமானோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மட்டும் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

    2009-ம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால் அவர்களின் ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்தது. ஆனால், அதையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

    2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், மே மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் ரூ.15,500 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களிடையே இவ்வளவு ஊதிய ஏற்றத் தாழ்வு இருப்பது மிகப் பெரிய அநீதி. இதை களைய வேண்டியது அரசின் கடமை. எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை முதல்- அமைச்சர் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #AnbumaniRamadoss

    உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசை கவர்னர் கலைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #AnbumaniRamadoss

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்காக ஆளுனர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசை கலைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தான் கஜா புயல் மீட்பு பணிகள் தாமதமடைகின்றன. இதை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

    தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது. தமிழக மக்களுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

    தமிழகத்தில் கோவில்களில் நடந்த சிலை முறைகேடு குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் சிறப்பாக செயல்படுகிறார். அந்த வழக்கை நீர்க்கச் செய்யும் வகையில் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே தாமிர தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

    திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி மக்களை பீதியடையச் செய்யும் வெடிச்சத்தம் குறித்த அச்சத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss

    ஜி.எஸ்.டி.க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாசாரங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #gst
    நெல்லை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட நாள். இதை பா.ஜனதா கட்சி மட்டுமல்ல. மக்களே கொண்டாடுகிறார்கள். 133 நாடுகளில் இருக்கும் இந்த மாபெரும் திட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்தி மோடி வெற்றி கண்டுள்ளார்.

    ஜி.எஸ்.டி. மூலமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ஒரு லட்சம் கோடி அதிகமாக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. மாநிலங்களுக்கு வரும் வருவாய் தாமதமாகும் என்பது தவறான கருத்து. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. காரணமாக பொருட்களின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதாசாரங்கள் படிப்படியாக குறைக்கப்படும்.

    தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு ஒரு உள்ளாட்சி குழு இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். #tamilisai #gst
    தமிழக அரசு எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். #senthilbalaji #tngovt #localelection

    கோவை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை கொடிசியாவில் வருகிற 8-ந் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் நடும் விழா நடந்தது.

    இதை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    110-வது விதியின் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதையெல்லாம் நிறைவேற்றாமல் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு 8 வழிசாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    நில உரிமையாளர்களும், விவசாயிகளும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள போதிலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்களின் நிலங்களை அபகரிப்பதையே நோக்கமாக உள்ளனர். 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது.

    இந்த அரசு தனியாருக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது. கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளது. ஆனால் 24 மணி நேர குடிநீர் திட்டம் என கூறி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவது ஏன்?

    மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மலரும் போது இந்த திட்டத்தை ரத்து செய்வார். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க இந்த அரசு தயங்குகிறது.

    கூட்டுறவு சங்க தேர்தல் கூட நியாயமாக நடைபெற வில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த கோர்ட்டிலும் தடை இல்லை. ஆனால் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி கொண்டே செல்கிறார்கள். எந்த தேர்தலையும் இந்த அரசால் எதிர் கொள்ள முடியாது.

    வரும் சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளுக்கும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை, முன்னாள் எம்.பி.க்கள் திருப்பூர் சிவசாமி, சுகுமார் மற்றும் வக்கீல் அகஸ்டஸ் உள்பட பலர் உடனிருந்தனர். #senthilbalaji #tngovt #localelection

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க காரணங்களை தேடி அலைவதா? என்று சட்டசபையில் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். #TNassembly #Localbodyelections

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நகராட்சி சட்ட திருத்த முன்வடிவு தாக்கல் விவாதத்தில் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்று நாங்கள் கோர்ட்டுக்கு போனது உண்மைதான். 33 சதவிகிதம் மகளிருக்கான இட ஒதுக்கீடு, 50 சதவிகிதமாக ஆனதற்கு பின்னால், யார்-யாருக்கு அந்த 50 சதவிகிதம் என்பது தெரிவிக்காமலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது அதை அறிவியுங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைதான்.

    வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்கிறதே, அதனை சரி செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என கோர்ட்டுக்கு போனது உண்மைத்தான். அதனை சரி செய்து, தேர்தலை நீங்கள் நடத்தியிருக்கலாம். ஐகோர்ட்டு இரண்டு, மூன்று தடவை தேர்தலை நடத்தலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அமைச்சர் இதையே சொல்லி, எங்கள் காதுகளில் தயவு செய்து ரத்தம் வர வைத்து விடாதீர்கள்.

    உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் போனதால் பாதிப்புகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது என்று சொல்வதை நிறுத்தி விட்டு, நீங்கள் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


    சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் என்று ஒன்று இருக்கிறது. அந்த வாரியத்திற்கு ஏற்கெனவே இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்று இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தனர். இப்போது இரண்டு பேர்களுமே இல்லை. இது ஒரு மிகப்பெரிய கோளாறு. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகின்றன என்று சென்னையைச் சுற்றிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இல்லை. தமிழ்நாடு தேர்தல் ஆணையர்தான் பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் என்பது ஒரு மிகப்பெரிய அமைப்பு.

    தனி அலுவலரால் நிச்சயமாக செயல்படவே முடியாது. ஒரு தனி அலுவலர் எப்படி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியம்? உள்ளாட்சிகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. இன்றைக்கு உள்ளாட்சி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போன ஒரு நிர்வாகமாக இருக்கின்றன. இப்போது இரண்டு வருடங்களாக நாம் காரணங்களைத் தேடி தேடிக் கொண்டிருக்கிறோம்.

    வார்டு எல்லை வரையறை செய்ய வேண்டுமென்ற புதிதாக ஒரு காரணத்தை கண்டுபிடித்து-இட ஒதுக்கீடு சரி செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர் பட்டியல் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு விட்டன. வார்டு எல்லை வரையறை என்று புதிதாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அதில் பொது மக்களிடமிருந்து 10,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை சீராய்வு செய்து வேண்டியுள்ளது என்ற காரணமும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த காரணங்கெல்லாம் ஒரு சாக்கு போக்குகள் தான் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைப்பதை நிறுத்திவிட்டு தேர்தலை நடத்துவற்குண்டான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNassembly #Localbodyelections

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார்.

    இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வேலவன், சிறுபான்மை அணி அமைப்பாளர் அகஸ்டின் சித்து, தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம், நிர்வாகிகள் செல்வம், ரங்கநாதன், கண்ணன், முருகேசன், பக்கிரி, பானுகணேசன், காந்தி, கலியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி 500 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

    *மாநிலத்தில் முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்க்கன்னிகள் மற்றும் விதவைகள் தகுதியானவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விரைவாக உதவித்தொகை கிடைத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * நெல்லித்தோப்பு வ. சுப்பையா சிலையில் இருந்து மீன் மார்க்கெட் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். மேற்கண்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.

    இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×