search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kambu Recipes"

    • வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - ஒரு கப்,

    வெங்காயம் - 3,

    பச்சை மிளகாய் - 6,

    கடுகு - அரை ஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    உப்பு - ஒன்றரை ஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து,

    எண்ணெய் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    * கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

    * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
    • இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வரலாம்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - அரை கப்,

    கேரட் - 2,

    பீன்ஸ் - 50 கிராம்,

    காலிஃப்ளவர் - ஒன்று சிறியது,

    பட்டாணி - கால் கப்,

    பட்டை - 2,

    ஏலக்காய் - 4,

    கிராம்பு - 1,

    பிரியாணி இலை - 1,

    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,

    பூண்டு - 5 பல்,

    கடுகு - அரை ஸ்பூன்,

    மிளகு - அரை ஸ்பூன்,

    சீரகம் - அரை ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

    மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்,

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    எலுமிச்சை பழம் - பாதி அளவு,

    உப்பு - 2 ஸ்பூன்.

    செய்முறை:

    கேரட், பீன்ஸ், கொத்தமல்லி தழை, காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பினை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கம்பை குக்கரில் போட்டு அதோடு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, இரண்டு கப் தண்ணீர், மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் நசுக்கிய பூண்டை சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்து கொதிக்க விடவும்.

    கஞ்சி நன்றாக கொதித்தவுடன் இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.

    கம்பு வெஜிடபிள் கஞ்சி பயன்கள்: கம்பு உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியடைய செய்கிறது. கம்பில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. இரத்தசோகை உள்ளவர்கள் இந்த கஞ்சியை குடித்து வர மிகவும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். தூக்கமின்மை, உடல் சோர்வு உடையவர்கள் இதனை சாப்பிட புத்துணர்ச்சி கிடைக்கும். குழந்தைகள் முடிகள் பெரியவர்கள் வரை இந்த கம்பு வெஜிடேபிள் கஞ்சியை அடிக்கடி குடித்து வர உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    • அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது.
    • சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. 

    தேவையான பொருட்கள்:

    கம்பு - 2 கப்

    வெல்லம் - ½ கப்

    தேங்காய்த் துருவல் - ¼ கப்

    முந்திரி (பொடிதாக நறுக்கியது) - ¼ கப்

    வெந்நீர் - தேவைக்கு ஏற்ப

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - தேவைக்கு

    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

    வாழை இலை - 1

    செய்முறை:

    * கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்

    * அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும்.

    * சிறிதளவு தண்ணீரில் உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும் கிளறவும்.

    * மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்யவும்

    * இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    * வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்

    * அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

    குறிப்பு: வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.

    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
    • அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கருப்பட்டி - 300 கிராம்

    ஏலக்காய் - 2

    எண்ணெய் - சிறிதளவு

     செய்முறை

    கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

    ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.
    • உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்

    கம்பு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    காய்ந்த மிளகாய் - 5

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - சுவைக்கு

    செய்முறை

    அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.

    கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு - கொள்ளு தோசை ரெடி.

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு, கேரட் சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    இட்லிமாவு - 1/4 கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கேரட் - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, இட்லிமாவு, சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..

    அத்துடன் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல் போட்டு நன்கு கலந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு - கேரட் ஊத்தப்பம் ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்,
    பச்சை பயறு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 2
    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 4 கப்,
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :


    நெய் - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை :


    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற விடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    பாசிப்பருப்பை கழுவி பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.

    கம்பை மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.

    குக்கரில் நெய் விட்டு உருக்கியதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அரைத்த கம்பு, பாசிப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கிளறி மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

    வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கிச்சடியின் மேலே ஊற்றி கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்பு வெஜிடபிள் கஞ்சி இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. இந்த இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஊறவைத்த கம்பு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    ஏலக்காய் - 2,
    பிரியாணி இலை - 1,
    வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) - 3 கப்,
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    பூண்டு - 3 பல்,
    உப்பு, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப,
    எலுமிச்சைப்பழம் - அரை மூடி.



    செய்முறை :

    கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.

    இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.

    பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும்.

    இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    பலன்கள்: இதில் இரும்புச் சத்து மிக அதிகம். இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கம்பு உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்,
    தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் - தலா 1 கப்,
    ஏலப் பொடி - சிறிது,
    நெய், உப்பு- தேவைக்கு.



    செய்முறை :

    கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும்.

    இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

    சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி.

    வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×