search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jet airways"

    • சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறையால் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்
    • வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிபதி முன் ஆஜரான அவர், உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பது நல்லது என்றார்

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவராக நரேஷ் கோயல் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார்.

    இதற்கிடையே, அவர் கனரா வங்கியில் இருந்து ரூ.538 கோடி வாங்கி அதனை கட்டாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வங்கி சார்பில் நரேஷ் கோயல் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் மீதும், மனைவி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக அமலாக்கத் துறை நரேஷ் கோயலை கைதுசெய்தது. அதன்பின் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது 71 வயதாகும் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார். உடலில் நடுக்கம், முழங்கால்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறுதல், 2 கால்களையும் மடக்கமுடியாமல் அவதி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் சிறப்பு நீதிபதி மொஜிதேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின்போது அவர் தனது உடல்நிலையை எடுத்துச் சொல்லி நான் வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனது மனைவி படுத்த படுக்கையாக உள்ளார். அவரைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. இனி நான் உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பதே நல்லது எனக்கூறி கதறி அழுதார். ஆனால் அப்போது அவர்க்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இதனையடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு உடல் நலக் காரணங்களுக்காக 2 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நரேஷ் கோயிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயலின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறையால் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
    • வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிபதி முன் ஆஜரான அவர், உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பது நல்லது என்றார்.

    மும்பை:

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவராக நரேஷ் கோயல் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார்.

    இதற்கிடையே, அவர் கனரா வங்கியில் இருந்து ரூ.538 கோடி வாங்கி அதனை கட்டாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வங்கி சார்பில் நரேஷ் கோயல் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் மீதும், மனைவி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக அமலாக்கத் துறை நரேஷ் கோயலை கைதுசெய்தது. அதன்பின் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது 71 வயதாகும் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார். உடலில் நடுக்கம், முழங்கால்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறுதல், 2 கால்களையும் மடக்கமுடியாமல் அவதி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் சிறப்பு நீதிபதி மொஜிதேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரால் சரிவர நிற்கக்கூட முடியவில்லை. உடல் நடுக்கத்துடன் காணப்பட்டது. நீதிபதி முன் அவர் கை கூப்பியபடி நின்றார்.

    விசாரணையின்போது அவர் தனது உடல்நிலையை எடுத்துச் சொல்லி நான் வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனது மனைவி படுத்த படுக்கையாக உள்ளார். அவரைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. இனி நான் உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பதே நல்லது எனக்கூறி கதறி அழுதார்.

    இதைக்கேட்ட நீதிபதி மனம் மற்றும் உடல்நலம் பாதுகாக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரது வக்கீல்களுக்கு உத்தரவிட்டார்.

    • ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
    • கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

    மும்பை:

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார்.

    கடந்த மே 5-ம் தேதி மும்பையில் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.பி.ஐ. பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது.

    மத்திய புலனாய்வு முகமையின் முந்தைய 2 சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சிஇஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.
     
    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.



    பணப்பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்,அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சிஇஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
    ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் யார் என்பதை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #JetAirways #SubramanianSwamy
    புதுடெல்லி:

    ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. நிதி நெருக்கடியால் அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

    ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லியும், சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்காவும் தான் காரணம் என பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.



    அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை தவறாக பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம் என அருண் ஜெட்லிக்கும், ஜெயந்த் சின்காவுக்கும் நரேந்திர மோடி கூற வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையொட்டி அவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் அவர் ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.

    இந்த தகவல்களை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  #JetAirways #SubramanianSwamy 
    கடன் சுமையால் முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்துள்ளது. #SpiceJet #SpiceJethires #JetAirways #JetAirwaysemployees #JetAirwayspilots
    மும்பை:

    கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டை பிடிக்க  ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய விமானங்கள் வாங்கவும், வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமானங்களில் பணியாற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விரும்பியது. 

    அதன் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இன்று தெரிவித்துள்ளார். #SpiceJet #SpiceJethires #JetAirways #JetAirwaysemployees  #JetAirwayspilots
    பணப்பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. #JetAirwaysEmployees #JetAirwaysManagement
    புதுடெல்லி:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.
     
    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது. 

    அவ்வகையில், நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

    போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

    சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. வங்கியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #JetAirwaysEmployees #JetAirwaysManagement
    நிதி நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. #ChennaiAirport #JetAirways
    ஆலந்தூர்:

    ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நேற்று முதல் அந்த நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணை நிறுவனம் நிறுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

    இன்று காலை 1.13 மணிக்கு பாரீஸ் செல்லும் விமானம் மற்றும் காலை 11.25, மாலை 4.50 மணிக்கு மும்பை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி நேற்று மாலையே பயணிகளுக்கு விமான நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் வேறு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். #ChennaiAirport #JetAirways
    நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டு, ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு, விமானிகள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். #JetAirways
    புதுடெல்லி:

    நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வாங்கிய கடன்களையும் அடைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பைலட்டுகள் மற்றும் ஊழியர்கள், சம்பள பாக்கியை வழங்கக்கோரி ஏப்ரல் 1ம் தேதி முதல் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் மாத சம்பளம் மட்டும் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளனர். இதனால், விமான சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 



    இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை கேட்டு விமானிகள், வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். உள்நாட்டு விமானிகள் சங்கமான என்ஏஜி சார்பில், ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபேக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை ஏப்ரல் 14-ம் தேதிக்குள் வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் இன்று மும்பையில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையின்போது நிறுவனம் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகளில் தற்போதைய நிலை மற்றும் புதிய தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #JetAirways
    ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை ஒத்திவைத்துள்ளனர். #JetAirways #JetAirwayspilots #nottoflydecision
    மும்பை:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில்  பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

    அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

    இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.  போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள்,  பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.



    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

    இந்த அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

    இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில்,  தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.

    நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

    இதற்கிடையில், முன்னர் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்ட விமானிகள் மற்றும் பொறியாளர்களுடன் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை நடத்திவரும் வங்கிகள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.

    கடந்த ஆண்டு டிசம்பர், இந்த ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான சம்பளத்தை தற்போது ஒரே தவணையாக அளிக்க முடியாது. டிசம்பர் மாத சம்பள நிலுவைத்தொகையை இப்போது வழங்க தயாராக இருக்கிறோம் என விமானிகள் சங்க பிரதிநிதிகளுடன் இன்று சமரசம் பேசப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஏப்ரல் முதல் தேதியில் இருந்து என அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விமானிகள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. #JetAirways #JetAirwayspilots #nottoflydecision
    கடுமையான கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். #JetAirways
    மும்பை:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன.
    அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

    அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமாங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

    இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

    இந்த அறிவிப்பையடுத்து மேலும் சில விமானச் சேவைகளும் முடங்கும் நிலை உருவானது. இதனால் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

    இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தற்போது தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

    நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    மனைவியுடன் நரேஷ் கோயல்

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், மும்பை பங்குச் சந்தையில் சமீபகாலமாக மிகப்பெரிய சரிவை சந்தித்துவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று சுமார் 4 சதவீதம் அளவுக்கு ஏறுமுகம் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #JetAirways
    ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை பெற்று தருமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக மேலும் 7 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. #JetAirways
    மும்பை:

    இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.

    கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக தெரிவித்திருந்தனர்.



    இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லி- அபுதாபி, தம்மாம், தாக்கா, ஹாங் காங், ரியாத்  ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவைகளை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மும்பை- மான்செஸ்டர் செல்லும் விமானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று கூடுதலாக 2 ஜெட்லைட் விமானங்கள் உள்ளிட்ட 7 விமானங்களை தரையிறக்கியது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி தட்டுப்பாடு காரணமாக 600 விமானங்கள் இயக்கப்படும் வழிகளில், தற்போது 119 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #JetAirways

    ×