search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO scientists"

    • தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
    • திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் 'ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா. அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது.

    தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு. விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை.

    ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள்.

    உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

    இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார்.
    • கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பலனாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார். லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    பின்னர், காணொலி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்து தெரிவித்தும் பேசினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அன்றே அவர் இந்தியா திரும்புகிறார்.

    நாடு திரும்பியவுடன் பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளை சந்திக்கிறார். இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறார்.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஜி-20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 3-வது பெரிய உலக பொருளாதாரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்து உள்ளோம். அன்னிய நேரடி முதலீட்டை தாராள மயமாக்கி உள்ளோம்.

    போட்டித்திறன், மேம்பட்ட வெளிப்படைத் தன்மை, விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல், புதுமைகளை ஊக்குவித்து உள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 60 முதல் 70 சதவீத வேலை வாய்ப்பை கொண்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை பங்களிக்கிறது. அவர்களுக்கு நமது தொடர்ச்சியான ஆதரவு தேவையாகும்.

    வர்த்தகம் மற்றும் உலக மயமாக்கல் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உலக ளாவிய நம்பிக்கையை காண்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பல னாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் நாட்களில் இஸ்ரோ பல திட்டங்களை செயல்படுத்த போகிறது
    • மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டப்படி நிலவிற்கு ஏவப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை தொடர்ந்து இஸ்ரோ வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் இந்தியர்கள் மேலும் பெருமைப்படும் வகையில் உள்ளது.

    அவற்றில் சில திட்டங்களின் விவரங்கள்:

    1) ஆதித்யா எல் 1 (2023) - உத்தேச திட்ட செலவு - ரூ.378 கோடி

    சூரிய மண்டலத்தை நோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு நிகராக இந்த விண்கலம் அமையும். கிரகணங்களின் பாதிப்புகள் இல்லாத வகையில் சூரியனை இது தொடர்ந்து ஆய்வு செய்யும். சூரியனின் வெளிப்புறம் உள்ள மண்டலம் குறித்தும் சூரிய புயலின் வேகம் உட்பட பல நுட்பமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தான் இதன் நோக்கம்.

    2) நாசா-இஸ்ரோ சார் (நிஸார்) (2024) - உத்தேச திட்ட செலவு - ரூ.12 ஆயிரம் கோடி

    இது இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து உருவாக்கும் ஒரு குறைவான உயரத்தில் அமைய போகும் ஆராய்ச்சி மையம். பூமியின் நுட்பமான இயக்கங்களை 12 நாட்களிலேயே இதனால் பதிவு செய்ய முடியும். இது இந்தியாவின் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட இருக்கிறது.

    3) ஸ்பேடக்ஸ் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.124 கோடி

    இது ஒரு இரட்டை விண்கல திட்டம். சேசர் மற்றும் டார்கெட் என இரண்டு விண்கலங்கள் இரண்டு வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும். இவ்விரண்டும் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக இயக்கப்படும்.

    4) மங்கள்யான்-2 (2024) - உத்தேச திட்ட செலவு - அறிவிக்கப்படவில்லை

    அதி உயர் தொழில்நுட்ப கேமரா பதிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம் செவ்வாய் கிரகத்தை குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும்.

    5) ககன்யான் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.9023 கோடி

    இது மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் பெருமைமிகு திட்டம்.

    6) சுக்ரயான் 1 (2031) - உத்தேச திட்ட செலவு - ரூ.1000 கோடி

    பூமியில் இருந்து சுக்ரனுக்கு விண்கலம் அனுப்ப தேவைப்படும் சாதகமான அறிவியல்பூர்வமான சூழ்நிலை 19 மாதங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். எனவே 2031ம் வருடம்தான் இதற்கு சரியான காலகட்டம் என விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

    மே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

    மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பாதுகாப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவிவருகிறது. அனைத்து வகை செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாறி உள்ளது.

    தற்போது நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. இதனை படிப்படியாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்கான 8 செயற்கைகோள்கள் அடுத்த மாதத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.



    ரேடார்களை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்’ வகை செயற்கைகோள் மற்றும் ‘கார்ட்டோசாட்-3’ வரைபட செயற்கைகோள் பாதுகாப்பு துறை பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளன. ஏற்கனவே ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்களில் இருந்து துல்லியமான தகவல் களை பெறமுடியாததால் தற்போது ஏவப்பட உள்ள செயற்கைகோள்களில் துல்லியமான தரவுகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்த செயற்கைகோள்கள் மூலம் இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் தரவுகளை தெளிவாக பெற முடியும். எல்லையை கண்காணிக்க இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். செயலிழந்த செயற்கைகோள்களுக்கு பதிலாக தான் புதிய செயற்கைகோள்கள் ஏவப்பட இருக்கிறது.

    ரீசாட்-2பி மே மாதமும், கார்ட்டோசாட்-3 ஜூன் மாதமும், ரீசாட்-2பிஆர்1 ஜூலை மாதமும், ஜீசாட்-1 (புதியது) செப்டம்பர் மாதமும், ஆர்1சாட்- 2பிஆர்2 அக்டோபர் மாதமும், ஜி1சாட்-2 மற்றும் ஆர்1சாட்-1ஏ நவம்பர் மாதமும், ஜி-சாட்-32 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #ISRO
    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புவி கண்காணிப்புக்கான ‘ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ செயற்கைகோள் உள்ளிட்ட 30 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து இந்தியாவை பெருமைபடுத்துங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகலன் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். ஏவுகலன்களின் வேகத்திற்கு இணையான விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளும் விண்ணைத் தொடுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    ×