search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK Ramadoss"

    பாமக தோல்வி அடைந்தாலும் வாக்குகள் குறையவில்லை என்று ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.

    நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்த வித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு.

    மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது.

    மத்தியிலும், மாநிலத் திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன. இதன் மூலம் தீயவர்களின் கைகளில் நாடும், மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    அதேபோல், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் நோக்கம் கொண்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடத்திய கட்சி பா.ம.க. தான் என்பதை தமிழக மக்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரத்து செய்ய வைத்தது பாமக தான்.

    ஆனால், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத - போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத வி‌ஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின. ஏமாற்றின.

    பாட்டாளி மக்கள் கட்சி மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டுகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்தின. பொய்களின் துணையுடனும், பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது தி.மு.க. அணி. இது தற்காலிகமான வெற்றியே. மக்கள் உண்மையையும், நன்மையையும் உணரும் போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது.

    மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம்; வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புவி கண்காணிப்புக்கான ‘ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ செயற்கைகோள் உள்ளிட்ட 30 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து இந்தியாவை பெருமைபடுத்துங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகலன் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். ஏவுகலன்களின் வேகத்திற்கு இணையான விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளும் விண்ணைத் தொடுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    ×