search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayaan-3 success"

    • சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா-எல் இயங்கும்
    • இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சியாகும்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலகிலேயே முதல்முறையாக, எந்த நாடும் செய்யாத சாதனையாக, நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.

    உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனுக்கு அருகே சென்று ஆராய்ச்சி புரிய, ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது.

    ஆதித்யா-எல்1 என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த விண்கலன் செப்டம்பர் 2-ம் தேதி அன்று காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா-எல்1 இயங்கும்.

    சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது நாட்டிற்கே ஒரு புது முயற்சியாகும்.

    பூமியிலிருந்து சுமார் 10 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஆதித்யா-எல்1 நிலைநிறுத்தப்பட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். ஆதித்யா-எல்1, கிரகண பாதிப்புகளையும் மீறி சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

    "விண்கலனை ஏவுதலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஏவுதலுக்கான தயார்நிலை வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏவுகணை மற்றும் விண்கலன் ஆகியவற்றின் உள்ளே உள்ள அமைப்புகளின் பரிசோதனைகளும் நிறைவு பெற்று விட்டது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்திருக்கும் இஸ்ரோ, தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

    சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயங்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக ஆதித்யா-எல்1 அனுப்பப்படுகிறது.

    • சூரிய மண்டலத்தில் லக்ரேஞ்சியன் புள்ளி எனப்படும் இடத்தை அடையும்
    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகளுக்கும் ஈடாக இது கருதப்படுகிறது

    இதுவரை நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியில் உலகின் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை. ஆனால், இம்முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று உலக நாடுகளை தன்பக்கம் திரும்பி பார்க்க செய்தது.

    இந்த வெற்றிக்கு பிறகு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இது குறித்து இஸ்ரோ மையத்தின் மூத்த விஞ்ஞானி கூறும் போது, "சூரியனை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பும் முதல் முயற்சியாக ஆதித்யா எல் 1 (Aditya L1) எனும் பெயரில் செப்டம்பர் 2-ம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து காலை 11:50 மணிக்கு விண்கலன் அனுப்பப்படும்," என்று தெரிவித்தார்.

    இத்திட்டத்தின் நோக்கப்படி, சூரியனில் உள்ள வாயு மண்டலம், சூரியனின் மத்திய பகுதியான கொரானாவின் வெப்பம், சூரிய வாயுவின் வேகம் மற்றும் தட்பவெப்ப மாறுதல்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். சூரிய மண்டலத்தில் லக்ரேஞ்சியன் புள்ளி என்ற இடத்தை அடைய முயற்சிப்பதே இதன் நோக்கங்களில் ஒன்று. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.400 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். (PSLV-XL) ராக்கெட்டில் இந்த விண்கலன் சூரியனின் சுற்று வட்டப்பாதயை சென்று அடையும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

    சூரியனில் இருந்து அவ்வப்போது வெடி அதிர்வுகள் வெளிப்படும். இந்தியா விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதால் இந்த அதிர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டால், அதன்படி இஸ்ரோவின் ஆராய்ச்சிகளை சுலபமாக திட்டமிடலாம் என்பதால் இது மிகவும் அவசியமான முயற்சி என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவின் இந்த ஆராய்ச்சி, அமெரிக்காவின் நாசா மையத்தின் முயற்சிகளுக்கும், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முயற்சிகளுக்கும் ஈடாக கருதப்படுகிறது.

    ஆதித்யா எல் 1 திட்டத்தில் உலகில் எந்த நாடும் இதுவரை செய்யாத முயற்சியாக சூரியனின் வெளிப்புற மண்டலத்தை இதுவரை இல்லாத, குறைந்த தூரத்தில் கண்டு ஆராயவும், புற ஊதா நிற கதிர்வீச்சிற்கு இடையே ஊடுருவி சூரியனின் புகைப்படங்களை எடுக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும். 

    • அக்டோபரில் ஒரு பரிசோதனை விண்கலன் அனுப்பப்பட இருக்கிறது
    • மூன்றாம் கட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்படுகிறது

    இதுவரை எந்த நாடும் புரியாத சாதனையாக நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக அனுப்பி உலகையே இந்தியா திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

    இதனை அடுத்து பல விண்வெளி ஆராய்ச்சிகளை நிகழ்த்த இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    மத்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

    அப்போது அவர், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நிதி பங்களிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். சந்திரயான்-3 திட்டத்திற்கு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் முயற்சிகளுக்கு கோவிட் தொற்று நெருக்கடிகளினால் தடை ஏற்பட்டது."

    "தற்போது சந்திரயான்-3 வெற்றி அடைந்ததை அடுத்து ககன்யான் உட்பட பல திட்டங்களில் இனி இஸ்ரோ தீவிரம் காட்டும். இதன்படி ககன்யான் திட்டத்திற்காக, அக்டோபர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதலில் ஒரு பரிசோதனை முயற்சியாக ஒரு சோதனை விண்கலனை அனுப்பும்."

    "அடுத்த கட்டமாக "வியோமித்ரா" எனும் பெயரில் ஒரு பெண் ரோபோ விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பெண் மனித இயந்திரம் மனிதர்களின் நடவடிக்கைகளையும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்."

    "இந்த இரு முயற்சிகளும் வெற்றி அடைந்ததும், அதில் இருந்து கிடைக்கும் அனுபவங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து அதன்படி மூன்றாவது முயற்சியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவோம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதும் முக்கியம்," இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் ஊடகங்கள் சந்திரயான் 3 முயற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார் ஃபவத்
    • நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் வானில் வெற்றிகரமாக செலுத்தியது.

    நேற்று மாலை 06:04 மணியளவில் சந்திரயான்-3 திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்டது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.

    எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது. உலகில் பலரும் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் பலர் இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.

    கடந்த ஓரிரு வருடங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, பிற நாடுகளிடமும், பொருளாதார அமைப்புகளிடமும் உதவிகள் கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான்-3 நிலவை தொடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி இந்தியாவின் சாதனை முயற்சிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்தியாவை போன்று பாகிஸ்தானும் நிலவிற்கு செல்ல முயற்சிகள் எடுக்குமா என அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ஒரு பாகிஸ்தான் குடிமகன், "நாங்கள் நிலவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வசிக்கிறோம். அதாவது நிலவில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சாரம் உட்பட எந்த வசதிகளும் கிடையாது. அதே போல்தான் பாகிஸ்தானிலும் இவை எதுவும் கிடையாது," என பதிலளித்தார்.

    இவரது நகைச்சுவையான பதில் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • இது விண்வெளி சரித்திரத்திலேயே மகத்தான சாதனையாக கருதப்படுகிறது
    • 60-களிலிருந்தே சுயசார்பை மட்டுமே நம்பி இஸ்ரோ செயல்பட்டு வருகிறது

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தது. சந்திரயான் எனும் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கடந்த 2 முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

    இந்நிலையில், கடந்த ஜூலை அன்று சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வானில் வெற்றிகரமாக செலுத்தியது.

    சந்திரயான்-3 நேற்று மாலை 06:04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவை தொட்டது.

    உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவும் இதே முயற்சியை சில நாட்களுக்கு முன்பு செய்ய முயன்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.

    எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது.

    இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இஸ்ரோவை புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    இஸ்ரோவின் நேற்றைய மகத்தான வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த சாதனையானது அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரை உற்சாகமடைய செய்யும் ஒரு பெருமைக்குரிய விஷயம். இஸ்ரோவின் நிகரற்ற திறமை பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டது.

    ஒன்றுபட்டு முயற்சிக்கும் மதிப்பு வாய்ந்த பல தலைவர்கள் எப்போதுமே இஸ்ரோவில் இருந்து வருகின்றனர்.

    சுயசார்பை மட்டுமே நம்பி 60-களின் தொடக்கத்திலிருந்தே இஸ்ரோ பல வெற்றிகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த உற்சாகமான தருணத்தில் இஸ்ரோவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

    • வரும் நாட்களில் இஸ்ரோ பல திட்டங்களை செயல்படுத்த போகிறது
    • மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டப்படி நிலவிற்கு ஏவப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை தொடர்ந்து இஸ்ரோ வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் இந்தியர்கள் மேலும் பெருமைப்படும் வகையில் உள்ளது.

    அவற்றில் சில திட்டங்களின் விவரங்கள்:

    1) ஆதித்யா எல் 1 (2023) - உத்தேச திட்ட செலவு - ரூ.378 கோடி

    சூரிய மண்டலத்தை நோக்கி பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆராய்ச்சி கூடத்திற்கு நிகராக இந்த விண்கலம் அமையும். கிரகணங்களின் பாதிப்புகள் இல்லாத வகையில் சூரியனை இது தொடர்ந்து ஆய்வு செய்யும். சூரியனின் வெளிப்புறம் உள்ள மண்டலம் குறித்தும் சூரிய புயலின் வேகம் உட்பட பல நுட்பமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தான் இதன் நோக்கம்.

    2) நாசா-இஸ்ரோ சார் (நிஸார்) (2024) - உத்தேச திட்ட செலவு - ரூ.12 ஆயிரம் கோடி

    இது இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து உருவாக்கும் ஒரு குறைவான உயரத்தில் அமைய போகும் ஆராய்ச்சி மையம். பூமியின் நுட்பமான இயக்கங்களை 12 நாட்களிலேயே இதனால் பதிவு செய்ய முடியும். இது இந்தியாவின் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட இருக்கிறது.

    3) ஸ்பேடக்ஸ் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.124 கோடி

    இது ஒரு இரட்டை விண்கல திட்டம். சேசர் மற்றும் டார்கெட் என இரண்டு விண்கலங்கள் இரண்டு வெவ்வேறு சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும். இவ்விரண்டும் சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக இயக்கப்படும்.

    4) மங்கள்யான்-2 (2024) - உத்தேச திட்ட செலவு - அறிவிக்கப்படவில்லை

    அதி உயர் தொழில்நுட்ப கேமரா பதிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி விண்கலம் செவ்வாய் கிரகத்தை குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும்.

    5) ககன்யான் (2024 பிற்பகுதி) - உத்தேச திட்ட செலவு - ரூ.9023 கோடி

    இது மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் பெருமைமிகு திட்டம்.

    6) சுக்ரயான் 1 (2031) - உத்தேச திட்ட செலவு - ரூ.1000 கோடி

    பூமியில் இருந்து சுக்ரனுக்கு விண்கலம் அனுப்ப தேவைப்படும் சாதகமான அறிவியல்பூர்வமான சூழ்நிலை 19 மாதங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். எனவே 2031ம் வருடம்தான் இதற்கு சரியான காலகட்டம் என விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

    ×