search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harrasement"

    குளியல் அறையில் வைத்து அப்பா வயது நடிகர் கட்டிப்பிடிக்க முயன்றதாக புதுமுக நடிகை பிரெர்னா கண்ணா புகார் தெரிவித்துள்ளார். #MeToo #PrernaKhanna
    ‘வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா.

    தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின.

    என்னைத் திரையுலகில் வழிநடத்த யாரும் இல்லை. இந்த துறைக்கு நான் புதியவள். ஒருமுறை ஐதராபாத்திலிருந்து ஒரு நடிகர் என்னை அழைத்தார். ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிகப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரச் சொன்னார்.

    என் அம்மாவை உடன் அழைத்துவரக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக நான் என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.

    நாங்கள் அறையில் இருந்தபோது எனது ஐ லைனரை நீக்கச் சொன்னார். ஐ லைனர் இல்லாமல் எனது முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக கூறினார். நான் கழிவறைக்கு ஐ லைனரை அழிக்கச் சென்றபோது, அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

    நான் என் கண்ணை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீரென்று கண்ணாடியை நோக்கி என்னைத் தள்ளியபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் மிகவும் பயந்துபோய் அவரை தள்ளினேன். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்தன. பின்னர் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.

    எனது அப்பாவயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது கவலையும் ஆச்சரியத்தையும் தந்தது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.



    தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இயக்குனர், எனது விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் எனது மேனேஜரின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார்.

    நான் அவருடன் இணக்கமாகச் சென்றால் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக எனது மேனேஜரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நான் கோபத்துடன் திட்டி அவரது அலுவலகத்தில் இருந்து வந்தேன்.

    பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது.

    இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் மூன்று முறை யோசிப்பாள்.

    அப்படி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மீ டூ இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது. ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். மீ டூ இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MeToo #PrernaKhanna

    மீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam
    மீடூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மேலும் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    இந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது. 

    சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுபற்றி கேட்டதற்கு, உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.



    இன்று மாலை இந்த வி‌ஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த வி‌ஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடிவு செய்துள்ளனர். #MeToo #NadigarSangam

    ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தானும் பாலியல் தொல்லைகளை சந்தித்திருப்பதாக கூறியுள்ளார். #MeToo #YaashikaAnand
    பெண்கள் சினிமா உலகில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில், மீ டூ இயக்கத்தின் மூலம் கூறி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கும் இந்தப் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது. நான் பட வாய்ப்பு கேட்டு செல்லும் சமயத்தில் எனது ஆடையைச் சரிசெய்வது போலவும், முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்லித்தருவது போலவும் என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர்.

    இதுதவிர பொதுவெளியில் என்னை இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாகச் சீண்டினார். என் வீடு அருகே இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சி செய்தார். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் எனக் கேட்கும் வீடியோ வெளியானது; அந்தப் பெண் நான் தான்” என்றார்., 



    இது குறித்து புகார் தெரிவித்திருக்கலாமே என்று கேட்டதற்கு, “காவல் துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். சில போலீசார் கூட என்னைத் தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் துணிந்து வெளியில் சொல்லி தவறானவர்களை அடையாளம் காட்டும்போதுதான், பாலியல் தொல்லைகள் குறையும்” என்றும் கூறியுள்ளார். #MeToo #YaashikaAnand

    அறியாத வயதில் பள்ளி படிக்கும் போது, தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம்திறந்த சுனைனா, சம்பந்தபட்டவரை சட்டை காலரை பிடித்து கேட்க வேண்டும் என்று கூறினார். #MeToo #Sunanina
    காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இணைய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனியின் சில்லுகருப்பட்டி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகள் பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.



    அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10-ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு தொல்லை கொடுத்தார்.

    ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை.இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’

    என்று சுனைனா கூறினார். #MeToo #Sunanina

    இயக்குநர் சுசிகணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை வைத்த நிலையில், அதில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க ஒரு ரூபாய் இழப்பீடு கோரி சுசிகணேசன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #MeToo #SusiGaneshan
    ‘மீ டூ’  மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்து உள்ளார். மேலும், தன் மீது அவதூறு பரப்பும் லீனா மணிமேகலைக்கு எதிராக அவர் ஏற்கனவே, சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் சுசிகணேசன் சென்னை பெருநகர உரிமையியல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை லீனா மணிமேகலை கூறி உள்ளார். சுயவிளம்பரத்திற்காக பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார். இதன்மூலம் எனக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ந‌ஷ்ட ஈடாக ஒரு ரூபாயை உரிமையியல் சட்டத்தின் கீழ் வழங்க லீனா மணிமேகலைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி உள்ளார்.



    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தன் மீதான புகாரில் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கவே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக சுசிகணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #MeToo #SusiGaneshan #LeenaManimegalai

    கர்நாடக மாநிலத்தில் வங்கி கடனுக்காக பாலியல் ரீதியாக ஒத்துழைக்குமாறு வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் வழிமறித்து தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. #DavanagereWoman #bankmanager
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். கடன் அளிப்பதற்கு பரிகாரமாக அந்த பெண்ணை வங்கியின் மேனஜர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

    இதனால், மனம் வெறுத்துப்போன அந்தப்பெண் வேதனையுடன் வங்கியில் இருந்து வெளியேறினார். ஆனால், நல்ல குடும்பத்தை சேர்ந்த தன்னை இழிவுப்படுத்திய மேனஜருக்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்பிய அந்தப் பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி மேனஜரை கைகாட்டி வழிமறித்தார்.



    ‘பழம் நழுவி பாலில் விழுந்தது’ என்று ஆசையுடன் மேனேஜர் அவரை நெருங்கினார். சற்றும் தாமதிக்காமல் மேனேஜரின் சட்டையை பிடித்து இழுத்த அந்தப் பெண், கன்னட மொழியில் திட்டியவாறு பெரிய தடிக்கம்பால் அவரை சரமாரியாக தாக்கியதுடன், செருப்பாலும் அடித்தார்.

    இந்த காட்சி நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரைப்போல் தவறை உடனடியாக தட்டிக்கேட்பதுடன், அயோக்கியர்களை தோலுரித்துக் காட்டி தண்டிக்கும் துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும் என இந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். #DavanagereWoman #bankmanager #bankmanagersexualfavours #sexualfavourstoapproveloan

    பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள சின்மயியிடம் சுசிலீக்ஸ் சர்ச்சை பற்றி பலரும் விளக்கம் கேட்ட நிலையில், வீடியோ வடிவில் சின்மயி தனது விளக்கத்தை தெரிவித்திருக்கிறார். #MeToo #Chinmayi
    பாலிவுட்டில் மீடூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார். அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.

    சமூக வலைத்தளத்தில் பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்தனர்.

    2016-ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா டுவீட் செய்திருந்தார். சின்மயி அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்புகள் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். சின்மயி குறித்து சுசித்ராவின் டுவீட்டுகள் மற்றும் வீடியோவை தேடிக் கண்டுபிடித்த சமூகவலைதளவாசிகள் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர்.

    நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்ததை பார்த்த சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவுசெய்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் சின்மயி.
    சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ஒரு டுவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று கார்த்திக் டுவீட் செய்துள்ளார் என்று சின்மயி குறிப்பிட்டு கூறுயுள்ளார். #MeToo #Chinmayi #SuchiLeaks

    சின்மயி வெளியிட்ட வீடியோவை பார்க்க: