search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீடூ விவகாரம் - நடிகர் சங்க அவசர செயற்குழு இன்று கூடுகிறது
    X

    மீடூ விவகாரம் - நடிகர் சங்க அவசர செயற்குழு இன்று கூடுகிறது

    மீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam
    மீடூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மேலும் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    இந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது. 

    சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுபற்றி கேட்டதற்கு, உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.



    இன்று மாலை இந்த வி‌ஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த வி‌ஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடிவு செய்துள்ளனர். #MeToo #NadigarSangam

    Next Story
    ×