search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Exam"

    • இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    • பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மதிப்பெண் குறைவாக பெற்றதாக கருதினால் அவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகலை பெற்று அதற்கான மதிப்பெண் சரிவர கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    மறுகூட்டலின்போது தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்து மீண்டும் மாறுபட்ட மதிப்பெண்ணை சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வுக்கு மறுமதிப்பீடு முறை இருந்து வருகிறது. தற்போது முதன் முதலாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தாங்கள் உறுதியாக எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் மாணவர்களின் விடைத்தாளை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். எந்த பாடத்திற்கு மறு மதிப்பீடு செய்ய விரும்புகிறாரோ? அந்த பாடத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்படும்.

    இந்த திட்டம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுவதன் மூலம் மதிப்பெண் கூடவோ அல்லது குறையவோ கூடும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு மே 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

    இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கமுதி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 12,716 மாணவர்கள் 12,425 மாணவிகள் என மொத்தம் 25,141 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 12716 மாணவர்களில் 11345 பேரும், 12425 மாணவிகளில் 11642 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 22987 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 6.07 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஒய்வு பெற்ற டிஐஜி பாண்டியன், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பால் வண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவ்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

    மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    • பேனா, பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அருகே வீர ஆஞ்சநேயர் கோயிலில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர். களுக்கு சிறப்பு யாக பூஜை செய்து, 1000 பேருக்கு கோயில் நிர்வாகம் சார் பில் பேனா, பென்சில்கள். வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட் டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி எம் வட்டத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் சனிக்கிழமை, ருக்கு சிறப்பு யாக பூஜை யும், உற்சவ வழிபாடும் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுதோறும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணபெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    மாணவர்களுக்கு சிறப்பு யாக பூஜைசெய்யப் பட்டு பென்சில், பேனா வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வீர ஆஞ்சநேயர் கோயி லில் காலை 8.30 மணி முதல் 11மணி வரை 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக் கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.ஐ சரஸ்வதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோ ருக்கு கலச பூஜை சிறப்பு யாக வேள்வி நடை பெற்று, பேனா, பென்சில் பூஜையில் வைத்து பள்ளி நிர்வாகத்தின் சங்கல்பம் பெற்றோர்கள் சங்கல்பம் நடைபெற்றது.

    இதில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆயிரம் மாணவர் கள் பங்கேற்று வழிபட்ட னர்.

    தொடர்ந்து 1000 மாணவர்களுக்கு பேனா, பென்சில்களை கோயில் நிர்வாகி எக்ஸெல் ஜி.கும ரேசன் வழங்கினார். மேலும், இந்த சிறப்பு யாக பூஜையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர் கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

    ×