search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை மங்கலங்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கி பேசினார்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஒய்வு பெற்ற டிஐஜி பாண்டியன், ஒய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பால் வண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவ்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

    மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    Next Story
    ×