search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு- மறுத்தேர்வு, மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
    X

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு- மறுத்தேர்வு, மறுமதிப்பீடு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

    • இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    • பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரையில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மதிப்பெண் குறைவாக பெற்றதாக கருதினால் அவர்கள் தாங்கள் எழுதிய விடைத்தாள் நகலை பெற்று அதற்கான மதிப்பெண் சரிவர கணக்கிடப்பட்டு உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    மறுகூட்டலின்போது தவறுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்து மீண்டும் மாறுபட்ட மதிப்பெண்ணை சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வுக்கு மறுமதிப்பீடு முறை இருந்து வருகிறது. தற்போது முதன் முதலாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தாங்கள் உறுதியாக எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் மாணவர்களின் விடைத்தாளை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். எந்த பாடத்திற்கு மறு மதிப்பீடு செய்ய விரும்புகிறாரோ? அந்த பாடத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்படும்.

    இந்த திட்டம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுவதன் மூலம் மதிப்பெண் கூடவோ அல்லது குறையவோ கூடும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு மே 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்தார்.

    இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் வரும் ஜூலை 2ம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×