பொது தேர்வு எழுதும் 1000 மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பூஜை

பேனா, பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பொது தேர்வு எழுதும் 1000 மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பூஜை
Published on

திருப்பத்தூர்:

ஜோலார்பேட்டை அருகே வீர ஆஞ்சநேயர் கோயிலில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர். களுக்கு சிறப்பு யாக பூஜை செய்து, 1000 பேருக்கு கோயில் நிர்வாகம் சார் பில் பேனா, பென்சில்கள். வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட் டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி எம் வட்டத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் சனிக்கிழமை, ருக்கு சிறப்பு யாக பூஜை யும், உற்சவ வழிபாடும் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுதோறும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணபெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாணவர்களுக்கு சிறப்பு யாக பூஜைசெய்யப் பட்டு பென்சில், பேனா வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீர ஆஞ்சநேயர் கோயி லில் காலை 8.30 மணி முதல் 11மணி வரை 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக் கான சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.ஐ சரஸ்வதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோ ருக்கு கலச பூஜை சிறப்பு யாக வேள்வி நடை பெற்று, பேனா, பென்சில் பூஜையில் வைத்து பள்ளி நிர்வாகத்தின் சங்கல்பம் பெற்றோர்கள் சங்கல்பம் நடைபெற்றது.

இதில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆயிரம் மாணவர் கள் பங்கேற்று வழிபட்ட னர்.

தொடர்ந்து 1000 மாணவர்களுக்கு பேனா, பென்சில்களை கோயில் நிர்வாகி எக்ஸெல் ஜி.கும ரேசன் வழங்கினார். மேலும், இந்த சிறப்பு யாக பூஜையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர் கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com