என் மலர்

    நீங்கள் தேடியது "10th Class"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது.
    • தேர்வினை 106 மையங்களில் எழுத இருக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனை 32 ஆயிரத்து 171 பேர் எழுதுகிறார்கள்.தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது. இதுபோல் பிளஸ்-1 தேர்வு இன்று (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் செய்துள்ளனர்.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெ றுகிறது. இந்த தேர்வினை 106 மையங்களில், 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் எழுத இருக்கிறா ர்கள்.தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 106 தலைமை ஆசிரிய ர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற 1780 ஆசிரி யர்களும் நியமிக்கப்ப ட்டுள்ளனர். மேலும், காப்பி அடித்தல் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேர்வு மையத்தில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணை தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்க உள்ளது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2,615 பேர் எழுத உள்ளனர்.

    இதேபோல் பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்கி வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×