search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gautami"

    • தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக அழகப்பன் உள்ளிட்ட 3 பேரையும் பவர் ஏஜெண்டுகளாக கவுதமி நியமித்தார்.
    • வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மூலம் நிலம் விற்ற பணம் ரூ.11 கோடி என்பது அவருக்கு தெரியவந்தது.

    சென்னை:

    பிரபல நடிகை கவுதமிக்கு சொந்தமான 8.63 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்த அவருக்கு, காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நிலத்தை விற்பதற்கு உதவுவதாக கூறினார்.

    பின்னர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய ரியல் எஸ்டேட் தரகர்களை நடிகை கவுதமிக்கு, அழகப்பன் அறிமுகம் செய்தார். பின்னர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக அழகப்பன் உள்ளிட்ட 3 பேரையும் பவர் ஏஜெண்டுகளாக கவுதமி நியமித்தார்.

    இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு நிலத்தை விற்று விட்டதாக கூறி, சுமார் ரூ.4 கோடியை கவுதமிக்கு அவர்கள் 3 பேரும் கொடுத்தனர். பின்னர் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மூலம் நிலம் விற்ற பணம் ரூ.11 கோடி என்பது அவருக்கு தெரியவந்தது.

    ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதை அறிந்த நடிகை கவுதமி, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர்கள் மேனகா, பூமாரன், புஷ்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    வழக்கு தொடர்பாக காரைக்குடியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அழகப்பன் குடும்பத்தோடு தலைமறைவானார்.

    நடிகை கவுதமியின் புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தரகர் பலராமன் (வயது 64) கைது செய்யப்பட்டார். அழகப்பன் மற்றும் ரகுநாதன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

    இதனிடையே நடிகை கவுதமி இன்னொரு நில மோசடி புகாரை காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் கொடுத்துள்ளார்.

    தலைமறைவான அழகப்பனுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர்.

    அழகப்பன் (63), அவருடைய மனைவி நாச்சியாள் (57), மகன் சிவ அழகப்பன் (32), மருமகள் ஆர்த்தி (28), டிரைவர் சதீஷ் (27) ஆகியோர் கேரள மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள கிராமத்தில் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அழகப்பன், அவருடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் டிரைவர் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    • சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக 6 பேர் மீது நடிகை கவுதமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் உள்ளிட்ட 6 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள சொத்து என நடிகை கவுதமிக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

    இந்த சொத்துகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக காரைக்குடி சி.அழகப்பன், அவருடைய மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, உறவினர் பாஸ்கர் மற்றும் கார் டிரைவர் சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது நடிகை கவுதமி போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அதன்பேரில் அழகப்பன் உள்ளிட்ட 6 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், திருவண்ணாமலை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் உள்ளிட்ட 6 பேர், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரமின்றி புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் புகார்தாரரான கவுதமி தரப்பிலும், போலீசார் தரப்பிலும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதையடுத்து அழகப்பன் உள்ளிட்ட 6 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
    • மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பிரபல தமிழ் நடிகை கவுதமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியை சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சால் சதீஷ்குமார், ஆர்த்தி, பாஸ்கரன் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் போல் ஆவணங்கள் தயாரித்து நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    • ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
    • விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.

    இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கவுதமி சொத்துக்களின் ஆவணங்களை முறைகேடு செய்து வேறு பெயருக்கு மாற்றி விட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னை ஏமாற்றி பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கவுதமி சென்னை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் சொத்து மோசடி தொடர்பாக விசாரிக்க சென்னை குற்றப் புலனாய்வு பிரிவு உதவி கமிஷன் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் நேற்று காரைக்குடி வந்தனர். கோட்டையூருக்கு சென்ற அவர்கள் அழகப்பனுக்கு சொந்தமான வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த விசாரணை மற்றும் சோதனை நடந்தது. அப்போது அழகப்பனின் குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    வீட்டில் கவுதமியின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என சல்லடை போட்டு போலீசார் சோதனை மேற்கொண்ட னர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். மதியம் தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவையும் தாண்டி விடிய விடிய நடந்தது. இதில் மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

    காரைக்குடியில் தொழிலதிபர் அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதை காணலாம்

     இன்று அதிகாலை வீட்டிலிருந்து கைப்பற்றிய சில ஆவணங்களுடன் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர். விரைவில் அழகப்பன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    பல வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்த நடிகை கவுதமி இந்த மோசடி புகார் விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அக்கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு.
    • பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு. கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமி அளித்துள்ள கடிதம் மனவேதனை தருகிறது.

    அவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது பா.ஜனதாவுக்காக தேசிய அளவில் பணியாற்ற வாருங்கள். உங்களுக்கு பொறுப்பு வழங்குகிறோம் என்று அழைத்தேன். அப்போது கவுதமி பரவாயில்லை மாநில அளவில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவருடன் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். மாநில அளவிலான கட்சி நிகழ்ச்சிகளில் கவுதமி தீவிரமாக பங்கெடுத்து வந்தார்.

    எந்த நேரத்திலும் சோர்வு பாராமல் பணியாற்றக்கூடியவர். தைரியம்-தன்னம்பிக்கை மிகுந்த பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவுதமியின் உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உதவி கேட்டு இருந்தார்.

    அப்போது நான் அவரிடம் அந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் அனுப்பி வையுங்கள், நிச்சயமாக உதவி செய்கிறோம் என்று சொல்லி இருந்தேன்.

    இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது. நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ முற்படுவது இல்லை. கவுதமிக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என தெரியவில்லை.

    அதுபற்றி முழுமையாக தெரிந்தால்தான் நாங்கள் விளக்கம் சொல்ல முடியும்.

    பா.ஜனதா கட்சியில் நடிகை கவுதமி இருந்தது வரை அவர் கொடுத்த புகார் மீது ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும் அவரது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியென்றால் நடிகை கவுதமிக்கு ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

    நடிகர் விஜய்யின் லியோ படத்தை இன்னும் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போதுதான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை அரசியல், சினிமா ஆகிய இரண்டும் ஒன்றாக கலந்தது. திரைப்படங்களில் நல்ல கருத்துகள், பொழுதுபோக்கும் அம்சங்கள் இருந்தால் அது யார் நடித்த சினிமாவாக இருந்தாலும் பார்ப்பது தவறே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி.
    • நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி.

    நடிகை கவுதமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பான கடிதங்களை பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

    கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கவுதமி இவர்மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையும் மாறி மாறி குறை சொல்கிறார்களே தவிர மக்களை யாருமே கண்டுக்கொள்ளவில்லை என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். #Gautami
    சென்னை:

    நடிகை கவுதமி இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறி இருப்பதாவது:-

    கேள்வி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து உங்கள் கருத்து?

    பதில்: மனிதர்களால் இத்தகைய செயல்களை எப்படி செய்ய முடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வாழ்நாள் முழுக்க பாதிக்கலாம். அந்த வலிதான் மிகக்கொடியது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் நம்பிக்கையுடன் மீண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    கேள்வி:- பா.ஜனதாவில் இணைந்த நீங்கள் அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் இருப்பது ஏன்?

    பதில்:- அரசியல் என் முழுநேர தொழில் கிடையாது. மற்ற பல பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்துகிறேன். அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால்தான் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை.

    கேள்வி:- மோடி ஆட்சி குறித்து உங்கள் கருத்து?

    பதில்: என் பவுண்டே‌ஷன் பணிகள் குறித்துப் பேசவும் மேற்கொண்டு நல்ல யோசனைகளைப் பெறவும் பிரதமரை 2016-ல் சந்தித்தேன். ஆனால் அரசியல் குறித்து அப்போது பேசவில்லை. பிரதமராக மோடி நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார். மத்திய அரசு செய்த பல நல்ல திட்டங்கள் மக்கள் மத்தியில் சரியாக எடுத்துக் கூறப்படவில்லை. அது மக்களுக்கு முழுமையாகத் தெரிந்தால், பா.ஜனதாவின் பலம் இன்னும் கூடும்.

    கேள்வி:- பா.ஜனதா- அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி பற்றி?

    பதில்:- அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது. இக்கூட்டணி, பல காரணங்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து கருத்துச் சொல்ல விருப்பமில்லை.

    கேள்வி:- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் மாற்றங்கள்?

    பதில்:- தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. ஆனால், ஓர் அரசின் ஆட்சி முடிவடையும் போதுதான் அவர்களின் ஆட்சித்திறனை மதிப்பிடவேண்டும் என்பது என் கருத்து.

    அதனால், தற்போதைய ஆட்சி முடிவடையும் போது என் கருத்தை வெளிப்படையாக சொல்கிறேன். ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையும் மாறி மாறி குற்றம் சாட்டிகிட்டே இருக்கிறார்கள். ஆனால் மக்களை யாருமே பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்று எனக்கு வருத்தம் இருக்கிறது.



    அரசியல் தலைவராகவும் சவால்களை கடந்து சாதித்த பெண்ணாகவும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும். ஆளுமையுடன் வாழ்ந்த அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் எனக்கு அதிக வருத்தமும் சந்தேகமும் உண்டு. எனக்கு மட்டும் அல்ல கோடிக்கணக்கான மக்களுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கிறது’’ அதற்கான விடை தெரிந்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Gautami #ADMK #DMK
    தாதா 87 பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கவுதமி, தண்டனை கொடுக்கும் போது மனிதத்தன்மையை இழக்க கூடாது என்று கூறியுள்ளார். #Gautami
    சாருஹாசன், ஜனகராஜ், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாதா 87’. விஜய்ஸ்ரீ இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவுதமி பேசும்போது, “இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான செய்தி பற்றிப் பலரும் பேசினார்கள்.

    ‘பெண்களைக் கொடுமைப்படுத்தினால், அவர்களைக் கொளுத்த வேண்டும்’ என்பதுதான் அந்தச் செய்தி. சினிமா என்று எடுத்துக்கொண்டால், நாடகத்தனமும் கலந்திருக்கும். சில வி‌ஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டினால் நிறைய பேரிடம் சென்றுசேரும் என்பது தவிர்க்க முடியாத ஒரு உண்மை. அதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம்.



    கதையைச் சொல்லும்போது அதைப் பயன்படுத்துகிறோம். நிஜ வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினை. பிரச்சினை மட்டுமல்ல, நம்மைச் சுற்றி சமுதாயத்தில் கொடூரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு எவ்வளவு கொடூரமாக ஒரு பதில் சொன்னாலும் கொடுத்தாலும் போதாது. ஆனால், அந்த ஒரு பதில், அந்த ஒரு தண்டனை கொடுக்கும்போது, நமக்குள் இருக்கிற மனிதத்தன்மையை நாம் இழந்துவிடக் கூடாது” என்றார்.
    ×