search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exhibition"

    • இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.

    இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.

    இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.

    ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.

    சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.

    வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.

    • தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
    • ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.

    அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.

    கண்காட்சியினை கண்டு ரசிக்கவும், குளு,குளு சீசனை அனுபவிக்கவும்வெளி மாநிலங்கள், வெளிமா வட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள னர்.

    வெள்ளிக்கிழமை முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவில் மலர் கண்காட்சியையொ ட்டி, பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்து குலு ங்கிய பூக்களை பார்வை யிட்டனர்.மேலும் பூங்காவில் லட்சக்கணக்கான கார்னே சன் மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, பல ஆயிரம் மலர்களை கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    அங்குள்ள புல் மைதான த்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சியை யொட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்கள், மலர்களால் உருவான யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் கண்டு ரசித்தனர்.

    நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் மழைக்கு அங்கிருந்த மரத்த டிகளில் தஞ்சம் அடைந்த னர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி கண்காட்சியை பார்வையிட்டு, மகிழ்ந்தனர்.

    மழையால் அங்கு குளு, குளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை இது வரை 60 ஆயிரம் பார்வையிட்டுள்ளனர். இதேபோல் ரோஜா கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இன்று 4-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் மலர் கண்கா ட்சியை பார்வையிட்டனர்.

    ஊட்டிக்கு ஏராளமானோர் சொந்த வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணித்தும் ஊட்டிக்கு வருகிறார்கள்.

    இப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பது சிரமமானது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், அவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து 20 சுற்று பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் மூலம் படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்த பஸ்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.100 கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவதும், அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

    • பொதுமக்களை கவர்ந்த சிறுதானிய உணவுகள்
    • உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளின் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,வேலூர் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை, வேலூர் மாவட்ட நுகர்வோர்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அரங்குகள் அமைத்திருந்தனர்.

    இதில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் படி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு 'உணவே மருந்து' என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, சம்பா, தினை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றின் செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. காட்சிக்க வைத்திருந்த உணவுகள் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அப்துல் முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது
    • டாக்டர் ராஜா முகமது கண்காட்சி யை துவங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62ம் தேசிய மருந்தியல் வாரவிழா வினையொட்டி 4-ம் நாள் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தின ராக டாக்டர் ராஜா முகமது கலந்துகொண்டு கண்காட்சி யை துவங்கிவைத்தார். ரோவர் கல்வி நிறுவனங்க ளின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் கே.வரதராஜன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் சிறப்புரை ஆற்றினார்.

    துணை முதல்வர் மாரியம்மாள் நன்றி கூறினார். இந்த கண்காட்சியில் மருந்தியல் சம்பந்தமான 50க்கும் அதிகமான படைப்புகளை மாணவர்கள் தங்களுடைய தனித்துவத்தை கொண்டு வெளிப்படுத்தினர். மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் விழா வினை ஒருங்கிணைத்தனர். விழாவில் தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி மேலாளர் சத்திஷ்வரன் அலுவலக மேலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    • வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்
    • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்மலையனூர் வட்டா ரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வளத்தி யில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிழ்ச்சிக்கு மேல்மலை யனூர் ஒன்றிய குழு தலை வர் கண்மணி நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயனா வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர்வரிசை பொருட்க ளை வழங்கி சிறப்புரையாற்றி னார்.தொடர்ந்து வளத்தி ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பில் ஊட்டச் சத்துடன் கூடிய தொகுப்பி னை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கான கண்காட்சியினைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராம சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கள், சரவண குமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.
    • கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    உடுமலை:

    உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி , வாமன் விருக்ஷா போன்சாய் கிளப் சார்பில் இயற்கைக்குள் சிறிய இயற்கை மற்றும் இக்கபானாவின் ஜப்பானிய மலர் அலங்கரிப்பு பற்றிய கலை கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி ஜி.வி.ஜி., மாநாட்டு அரங்கம் 1 ல் நடைபெற்றது.இந்த கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார்.ஆலோசகர் மற்றும் இயக்குநர் மஞ்சுளா வரவேற்று பேசினார்.போன்சாய் கிளப்பின் தலைவர் ஸ்ரீமதி மீனா குருசாமி சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் போன்சாய் கிளப்பின் அமைப்பு பற்றியும் வெளிநாடுகளில் இருக்கும் போன்சாய் மரங்களின் தன்மை குறித்தும் விரிவாக விளக்கினார்.

    மேலும் போன்சாய் மரங்கள் அமைதி, சமாதானம்,நற்குணங்கள், நல்ல எண்ணங்களை பிரதிபலிக்கின்றன என்று கூறியதுடன் போன்சாய் மரத்தின் சிறப்புக்களை எடுத்துரைத்தார்.அதைத் தொடர்ந்து போன்சாய், சாய்கேய்,சூசேகி வகைகள் மற்றும் இக்கபானா ஜப்பானிய மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அரங்குகளை விஜயகுமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.அப்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்,கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர். முடிவில் பத்மாபாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.  

    • மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திறந்து வைத்தார்.
    • அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் தனியார் ஹாலில் அமைக்கப்பட்டு ள்ள மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமல க்கண்ணன் திறந்து வைத்தார்.

    சென்னை நெசவாளர் சேவை மையம் சார்பில் திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை திண்டுக்கல்லில் வருகிற 23ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறவுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 5 கைவினை கலைஞர்கள் தங்கள் உற்பத்தி ரகங்கள் மற்றும் பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படு த்தியுள்ளனர்.

    மேலும் பரமக்குடி காட்டன் சேலைகள், அருப்பு க்கோட்டை காட்டன் சேலைகள், காட்டன் லுங்கிகள், துண்டுகள், சட்டைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், செயற்கை ப்பட்டு சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கைத்தறி , ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு ள்ளன. அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் தள்ளுபடி மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

    • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
    • 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

    கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும் கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் பாராட்டினார். இதில் சந்திராயன்-3 மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.சந்திராயன்-3 மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால் உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பழைய கலையான பொம்மலாட்ட பொம்மைகள் மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு மற்றும் பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களும் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் தொடர்பான பொருட்களும் மேலும் 300-க்கும் மேற்பட்ட வானியல், கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    இதனை 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்வினை மாணவர்களே ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    புதுச்சேரி:

    புளு ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளியின் திருவள்ளுவர் வளாகத்தில் பள்ளி அளவிலான மாஸ் எக்ஸ்போ - 2023 கண்காட்சி நடந்தது.

    2 நாட்கள் நடந்த கண்காட்சியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    இதில் நடுவர்களாக கணித ஆசிரியை டாக்டர் ஜெலதீஸ்வரி, அறிவியல் பேராசிரியர் ராஜகுரு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் சுகுமாறன் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் சாலை சிவசெல்வம் நன்றி கூறினார்.

    2-ம் நாள் நடைபெற்ற கண்காட்சியின் நிறைவு விழாவில் உழவர்கரை ெதாகுதி எம்.எல்.ஏ. சிவசங்கர் பங்கேற்று மாண வர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

    • புதுக்கோட்டையில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
    • 1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்

    புதுக்கோட்டை,

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் நடத்திய அறியியல் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

    இக்கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து,  மாணவர்களின் அறிவியல் சிந்தனையையும்,  கலை பொருட்கள் மீதுள்ள ஆர்வத்தையும் கண்டு பாராட்டினார்.  இதில் சந்திராயன்-3  மாதிரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்திராயன்-3 மாதிரி தொழில்நுட்பத்தோடு இயங்கும் முறையில் மாணவர்களால்  உருவாக்கப்பட்டதால் பெற்றோர்கள் ஆர்வமுடன் கேட்டும் கண்டும் ரசித்தனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான பொம்மலாட்ட பொம்மைகள், மூலம் கதை சொல்லும் கைவினை பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு , பழைய சீன முறையில் உருவாக்கப்பட்ட  எளிய கணித கருவி ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்று, புதிய செய்திகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.  மாணவர்களுக்கு  எளிமையான கற்றலுக்கும், இந்த அறிவியல் மற்றும் கைவினைப்  பொருட்கள் கண்காட்சி பயனுள்ளதாக அமைந்தது. ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கைவினைப்பொருட்களும் இருநூறுக்கு மேற்பட்ட அறிவியல்  தொடர்பான பொருட்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட வானியல்,  கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண்காட்சியில்  இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை  1500-க்கு மேற்பட்ட பெற்றோர்கள்,  பொதுமக்கள்  கண்டு ரசித்தனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்களே ஒருங்கிணைந்து செய்திருந்தது பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.

    • தமுக்கம் மைதானத்தில் ஆட்டோ எக்ஸ்போ-2023 கண்காட்சி நாளை வரை நடக்கிறது
    • ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    மதுரை

    தமிழ்நாடு ஆட்டோ மொபைல் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ்டீலர்ஸ் அசோசியே சன் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவி லான ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியை நடத்துகிறது.

    இந்த ஆண்டுக்கான கண் காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கண்காட் சியை சுந்தரம் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் விஜயராகவன் திறந்து வைத் தார்.

    இதில், மதுரை மோட் டார்ஸ் பார்ட்ஸ் வியாபாரி கள் சங்கத்தலைவர் சிதம்ப ரம், டி.ஏ.ஏ.ஐ.எப், தலைவர் ராஜேஸ்வரன், கண்காட்சி தலைவர் முருகேசன், செய லாளர் சிதம்பரம், துணை தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சிதம்பர நாதன், டி.வி.எஸ். ஆட்டோ மொபைல்ஸ் சொலியூ ஷன்ஸ்மேலாண்மை இயக்கு னர் சீனிவாசராகவன், ரானோ ஆப்டர் மார்க்கெட் பிசினஸ் தலைவர் கிரி பிரசாத், ரூட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சரவணசுந்தரம், எம்.என். ஆட்டோ புராடெக்ட்சுந்தா ராஜன், கண்காட்சி ஒருங்கி ணைப்புகுழு உறுப்பினர் ரவி, லயன் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியானது இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் முன்னணி இருசக்கர வாகன கார் மற்றும் நிறுவனங்கள், உதிரி பாகங் கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 140 அரங்குகள் அமைத்துள்ளன.

    குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்கள், உயர், டியூப், பேட்டரி. பேரிங் கேபிள்கள், ஓர்க்ஷாப் டூல்ஸ் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கண்காட்சி மெக்கா னிக்குகள் மட்டுமின்றி வாக னங்கள் ஓட்டுனர்கள். வாகன உரிமையாளர்க ளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பார்வையா ளர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் பரிசு கள் வழங்கப்படுகின்றன. கண் காட்சியை இலவசமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிட லாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    ×