search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Director"

    • ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • கீழ்பவானி பாசன விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    காங்கயம் :

    முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்கக்கூடாது என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்டு் மாதங்களில் எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடிக்கு தொடர், முறை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றின் நீரினை பயன்படுத்தி பயிறு வகைகள், சோளம் வகைகள், காய்கறிகள் சாகுபடி செய்து பயனடைந்து வருகின்றனர்.

    தமிழ்நாடு அரசு, விதை ஆய்வு துறை மூலம் முறையாக அனுமதி பெற்று பல்வேறு விதைகளை விற்பனை செய்து வரும் விதை விற்பனை நிலையங்கள் கீழ்கண்ட விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதன்படி அனைத்து வகையான விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளுக்கு முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். விற்பனை நிலையங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    விதை விற்பனை நிலையங்கள் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து அனைத்து விதைகளின் பல்வேறு ரகங்கள், இருப்பு நிலை, விலை பட்டியல் விவரம் ஆகியவற்றை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். அனைத்து விதைகளுக்கும் சரியான விலை பட்டியல் வழங்க வேண்டும். விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும் போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். இதில் வாங்கும் விதை குவியலின் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து வாங்க வேண்டும். இதுபோன்ற அரசு விதிமுறைகளை இப்பகுதி விதை விற்பனை நிலையஙகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். சில தானிய மண்டிகளில் திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் கட்டாயம் வாங்கக்கூடாது. இப்பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை இயக்குநா் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது.
    • தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அனைத்து தொழிலாளா் நல அமைப்பு மாநிலச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையில் துணை இயக்குநா் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ளது. தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே திருப்பூா் வருகிறாா்.

    திருப்பூா் மாநகா் மற்றும் புறநகரில் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திரையரங்கங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கப்படாமல் வீதிமீறல்கள் இருந்து வருகிறது. ஆகவே, காலியாக உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பணியிடத்தை நிரப்பி விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர்.
    • விவசாயிகள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். நெல் விதை வாங்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய நெல் விதைகளை விதை உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். சான்றட்டையில் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையினால் தர உத்திரவாத விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார நிலை விதைகளின் சான்றட்டை வெண்மை நிறத்திலும், சான்று நிலை விதைகளின் சான்றட்டை நீல நிறத்திலும் இருக்கும். சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்குவது சிறந்தது.

    விவசாயிகள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். வாங்கும் விதைகளுக்கு விற்பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விபரம் குறிப்பிட்ட விற்பனைப் பட்டியலை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தனியார் நிறுவனங்களின் நெல் விதைகளை வாங்கும் விவசாயிகள் விதை மூட்டைகளில் உள்ள உண்மை நிலை விபர அட்டையில் குறிப்பிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.
    • மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை.

    இதுபோன்ற அரசு அங்கீகாரம் இல்லாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி ரக விதைகளை விற்பனை செய்வதும், வாங்கி பயிர் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை விற்பனை செய்வது தெரிந்தால் உடனடியாக உங்கள் பகுதி 2விதை ஆய்வாளருக்கு அல்லது விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண். 0462 2553017-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி போன்ற விதை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இயக்குனர் உத்தரவின்படி மாவட்டந்தோறும் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் விதை ஆய்வு துணை இயக்குனர், விதைச்சான்று உதவி இயக்குனர், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், விதை ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி பட்டதாரிகள் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

    எனவே வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    ×