search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "approves"

    2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. #Sugarcane #ModiCabinet
    புதுடெல்லி:

    பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2018-19-ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பின் குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.20 அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

    இதனால் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் சந்தை ஆண்டு முதல் விவசாயிகள் அளிக்கும் ஒரு குவிண்டால் கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் குறைந்த பட்சமாக ரூ.275 வழங்கவேண்டும்.

    சந்தை நிலவரத்தையொட்டி, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேர்மையான மற்றும் லாபகரமான விலை கிடைக்கச் செய்யும் விதமாக வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் கரும்புக்கு இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2017-18-ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக ரூ.255 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.  #Sugarcane #ModiCabinet #tamilnews

    நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #DamSafefyBill #Cabinet
    புதுடெல்லி:

    நமது நாட்டில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.



    இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.

    இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.

    * அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

    * அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

    * மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    * டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

    * வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.

    * எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.  #DamSafefyBill #Cabinet #Tamilnews 
    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh
    லக்னோ:

    ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 19 வயதான பிரியா சிங் தேர்வு பெற்றுள்ளார். ஏழை தொழிலாளியின் மகளான அவருக்கு ஜெர்மனி செல்வதற்கு போதிய பணம் இல்லை. இதனால் போட்டியில் பங்கேற்க தனக்கு உதவி செய்யும்படி உள்ளூர் எம்.எம்.ஏ. முதல், முதல்-மந்திரி மற்றும் பிரதமர் வரை பிரியாசிங் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இந்த கோரிக்கைக்கு உடனடியாக பதில் கிடைக்காததால், ‘தனக்கு சொந்தமான மாடுகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் தனது மகளை நிச்சயம் ஜெர்மனி போட்டிக்கு அனுப்பி வைப்பேன்’ என்று பிரியாசிங்கின் தந்தை பிரிஜ்பால் சிங் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையின் ஏழ்மை நிலையை அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க பிரியாசிங்குக்கு ரூ.4½ லட்சம் நிதி உதவியை மாநில அரசு சார்பில் உடனடியாக வழங்க உத்தரவிட்டார். #PavaShooter #PriyaSingh  #tamilnews
    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதில் வீடு வாங்குகிறவர்களுக்கு நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்து உள்ளது. #UnionCabinet #Bankruptcy
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.

    “திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.

    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

    குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.

    இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.

    மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.

    பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    * நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

    * மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. 
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு எடுத்து உள்ளது. #Pakistan #FinancialReform
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதிபர், பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொறுப்பை பாகிஸ்தான் அரசு தன்னிடம்தான் வைத்துக்கொண்டு உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரங்கள் துறை அமைச்சகம்தான் இதைக் கவனிக்கிறது.

    இந்த பகுதிக்கு பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று அவ்வப்போது அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன.இதே போன்று அங்கு உள்ள கில்ஜித் பல்திஸ்தான், பாகிஸ்தான் மாகாணம் போல இயங்கி வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகத்தான் சீனா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி) செலவில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா தனது பொருளாதார வழித்தடத்தை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ஏற்கனவே இந்தியா போர்க்கொடி தூக்கியது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில், நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் சாகித் ககான் அப்பாசி தலைமை தாங்கினார். அந்த நாட்டின் திட்டக்குழு துணைத்தலைவர் சர்தாஜ் அஜிஸ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விரிவாக பேசினார். தொடர்ந்து இது குறித்து விவாதங்களும் நடந்தன.

    அதன் முடிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், கில்ஜித் பல்திஸ்தானுக்கும் கூடுதலான நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அவற்றுடன் இதுவரை நிர்வாகம், நிதி சீர்திருத்தங்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

    இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கவுன்சில், கில்ஜித் பல்திஸ்தான் கவுன்சில், தொடர்ந்து ஆலோசனை கவுன்சில்களாக தொடர்வது என்று கூட்டத்தில் கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது.

    பிராந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கில்ஜித் பல்திஸ்தான் பகுதிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசன் இக்பால், ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி குர்ரம் தஸ்தகீர் கான் மற்றும் ராணுவம், சிவில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
    ×