search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2001 parliament attack"

    • டெல்லி காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது
    • எதிர்ப்பு குரல்களை நசுக்கி மசோதாக்களை நிறைவேற்ற முயல்வதாக கார்கே குற்றச்சாட்டு

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் இம்மாதம் 22 வரை நடக்க உள்ளது.

    டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில் மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பி பல எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த நபர் மேசைகளின் மீது தாவி குதித்து கொண்டே சபாநாயகர் இருக்கை அருகே செல்ல முயன்றார். மற்றொரு நபர் கோஷமிட்டு கொண்டே அங்கும் இங்கும் ஓடினார். சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்து நின்ற போதும் ஒரு சில எம்.பி.க்கள் துணிந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து, அங்கு விரைந்து வந்த சபைக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடைபெற்ற அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இதே போன்று கோஷமிட்டு, வர்ண புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்துள்ள டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 47 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்ம நபர்கள் பாராளுமன்றத்தையே தாக்க துணிந்தனர். ஆனால், மோடி பாராளுமன்றத்தையும் ஜனநாயக மாண்புகளையும் தாக்குகிறார். 47 பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் மோடி குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டார்.

    எங்களுக்கு 2 கோரிக்கைகள்தான்: பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது மன்னிக்க முடியாதது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மற்றொன்று, இச்சம்பவம் குறித்த ஆழமான விவாதம் நடைபெற்றே ஆக வேண்டும்.

    அச்சு ஊடகத்தில் பிரதமர் பேட்டியளிக்கிறார்; தொலைக்காட்சி சேனல்களில் உள்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், இந்திய மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாராளுமன்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இருவரும் தவறி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

    இதன் மூலம் எதிர்கட்சிகள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்கி, எதிர்ப்பு குரல்களை நசுக்கி, அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கொண்டு வர துடிக்கும் சட்டங்களை எந்த வித விவாதங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல் எளிதாக கொண்டு வர முடியும்.

    இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.

    • 2001 தாக்குதலின் 22-வது நினைவு தினத்தன்று மீண்டும் அத்துமீறல் நடந்தது
    • சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே தாக்குதல் நடந்ததில்லை என்றார் திவாரி

    கடந்த டிசம்பர் 13 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட மக்களவையில் அலுவல் நேரத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையின் மைய பகுதிக்கு 2 பேர் குதித்தனர். ஒருவர் எம்.பிக்களை தாண்டி மேசைகள் மீது குதித்தவாறு சபாநாயகர் அருகே செல்ல முயன்றார். தன் உடலில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை குப்பிகளை அங்கு வீசினார். அதிலிருந்து கிளம்பிய மஞ்சள் நிற புகை சில எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. இன்னொரு நபர் கோஷமிட்டவாறே அவையில் அங்கும் இங்கும் ஓடினார்.

    இந்த எதிர்பாராத சம்பவத்தால் அவையிலிருந்த சில எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது நின்றிருந்தாலும், சில எம்.பி.க்கள் துணிச்சலுடன் அந்த இருவரையும் நெருங்கி பிடித்து விரைந்து வந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கோஷமிட்டு கொண்டே வர்ண குப்பிகளை வீசினர். அதிலிருந்தும் வர்ண புகை வெளிக்கிளம்பியது


    அந்த 4 பேரையும் கைது செய்துள்ள புது டெல்லி காவல்துறை இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்தும், இதில் ஈடுபட்டவர்களின் நோக்கம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இச்சம்பவம் நடந்து சில தினங்கள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, "எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட கூடாத இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; கவலைக்குரியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன" என தெரிவித்தார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சி துணை தலைவரான பிரமோத் திவாரி இது குறித்து கருத்து தெரிவித்திருப்பதாவது:

    இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை பாராளுமன்றத்திற்கு உள்ளே மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ எந்த வித பாதுகாப்பு குறைபாடோ அத்துமீறலோ ஏற்பட்டதில்லை என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது நடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பிரதமர் வெளியிலிருந்து அறிக்கை விடுகிறார்; ஆனால் அவைக்கு வந்து பேச மறுக்கிறார். அவர் ஏன் அவைக்கு வந்து உறுப்பினர்களிடையே தனது விளக்கத்தை முன்வைக்க மறுக்கிறார்?

    இவ்வாறு திவாரி கூறினார்.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    ×