search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை காட்டூர் பகுதியில் உள்ள சோமசுந்தரா மில்லில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியானது. இதனால் அந்த பகுதியில் கரும் புகைமண்டலம் ஏற்பட்டது.

    அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டன.

    தகவலின் பேரில் தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சோமசுந்தரா மில் தற்போது மூடப்பட்டு உள்ளது. எனவே அங்கு காய்ந்த சருகுகள் குவிந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அந்த வழியாக சென்ற சிலர் பீடி அல்லது சிகரெட் குடித்துவிட்டு வீசியதால் மில்லுக்குள் தீவிபத்து ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
    • தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கன்னியாகுமரி வந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சியை பார்த்து ரசிப்பது வழக்கம்.

    அவர்கள் கன்னியாகுமரியில் தங்கி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு செல்வார்கள். இதனால் கன்னியாகுமரியில் உள்ள விடுதிகள் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்தே இருக்கும். இங்குள்ள புதிய பஸ் நிலையம் அருகில் 4 வழிச்சாலை முடியும் சீரோ பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது.

    இந்த விடுதியின் 4-வது மாடியில் உள்ள மேல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விடுதி ஊழியர்கள் அந்த தளத்திற்கு சென்று பார்த்த போது, அங்குள்ள பூட்டிக்கிடந்த ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்கு ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் காற்றின் வேகத்தில் தீ மற்ற அறைகளுக்கும் பரவியது. இதைப் பார்த்து அந்த அறைகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

    இதற்கிடையில் புகை மண்டலம் காரணமாக விடுதியின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தீ விபத்து குறித்து உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து புகையை வெளியேற்றினார்கள்.

    தீ விபத்து ஏற்பட்ட அறைக்கு பக்கத்து அறைகளில் தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளையும் புகைமண்டலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு தீப்பிடித்த அறையை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர்.

    தீயை மேலும் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இருப்பினும் விடுதி அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி., கட்டில் மற்றும் அழகு சாதன பொருட்கள், திரைச் சீலை போன்றவை எரிந்து சாம்பலானது. சுமார் ரூ.10லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ பிடித்து இருப்பது தெரியவந்தது. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த அடுப்பில் காகிதத்தை எரித்த பெண்ணின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உயிரிழந்தார்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(வயது 35). இவருக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட்டநிலையில், வீட்டில் தனியாக இருந்த வள்ளி விறகு அடுப்பில் காகிதங்களை போட்டு கொளுத்தியுள்ளார். அப்போது வள்ளியின் உடையில் தீப்பற்றி உடலில் பரவியது. இதனால் அவர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வள்ளியை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூர் குப்பை கிடங்கு தீ 6 நாட்களுக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
    • தொடர்ந்து தண்ணீர் தெளித்து அணைக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து கரூர், புகழூர், அரவக்குறிச்சி, முசிறி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அதனை முழுவதுமாக அணைத்தனர். இதனால் கரூர் வாங்கல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • பெரம்பலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான வளாகம், குடியிருப்பு மற்றும் மைதானம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் வீடுகளின் பின்புறம் மற்றும் அருகே உள்ள பகுதியில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. மேலும் வாகனங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் யு, வி பிளாக்குகள் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று மதியம் 12.45 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மள, மளவென பரவி இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் கரும்புகை வெளியேறியதால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி இருசக்கர வாகனங்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 70 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தன.

    • மூலிமங்கலம் பகுதியில் தீப்பிடித்து எரிந்து தென்னை மரங்கள் நாசமானது
    • காய்ந்த செடி, கொடிகளில் தீப்பிடித்ததால் தென்னை மரங்கள் நாசம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மூலமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50).விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி கொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. தென்ன மரங்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அதை பார்த்த ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • கரும்புத்தோட்டம் அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே உள்ள கரும்பு தோட்டம் அருகே இருந்த முள்வேலிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
    • அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையில் நகராட்சி குப்பை கிடங்கில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் பலமணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, திமுக நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் கவிவேந்தன், மற்றும் பிரேம் ஆனந்த் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து தீயை கட்டுபடுத்து பணியை துரிதப்படுத்தினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரா;களுக்கு தகவல் தரப்பட்டவுடன் இரண்டு வாகனத்திற்கும் மேலாக கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். விடிய,விடிய தீயை அணைக்க போராடி வருகின்றனர் . வருடத்திற்கு இரண்டு முறை இதுபோல் தீ விபத்து நடப்பது தொடர் கதையாக வருகிறது என அப்பகுதியின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தொpவிக்கின்றனர் . நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர் கள் தங்கள் இஷ்டம் போல் குப்பைகள் போட்டு வருவதால் இதுபோன்று தீ விபத்துக்கள் நடைப்பெறுவதாகவும் குற்றசாட்டுகின்றர் . தமிழக வாழ்வுரிமை கட்சி நியாஸ் இதற்கு கடுமையான கண்டனம் தொpவித்துள்ளார். குப்பை கிடங்கிற்கு சாpயான இடத்தை தோ;வு செய்யாத காரணமும், குப்பைகளை கையாளும் முறையே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் சமூக விரோதிகள் செயல் என்று சொல்லி கடந்து விடமுடியாது, அதிகாரிகளும் சமூக விரோதிகளாவர் கள் என்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு குப்பை கிடங்கை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கந்தர்வகோட்டை அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து
    • தீ விபத்தில் 30 மின்கலன்கள் எரிந்து நாசமானது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை- வெள்ளாள விடுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 440 கேவி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேட்டரி குடோனில் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்தது.இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்ட நிலையில், கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீரர்கள் தண்ணீர் மற்றும் மணல்களை கொண்டு போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 30 மின்கலன்கள் தீயில் எரிந்து நாசமாகின.துணை மின் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து மின்துறை அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
    • தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    திருச்சி,

    அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்து வந்தது/

    இந்நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அதில் இருந்து கிளம்பிய புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் சென்று குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 3 தீயணைப்பு வாகனங்களும், 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகளும் சென்று, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அரியமங்கலம் குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிந்ததால், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியமங்கலம் எஸ்.ஐ.டி, யில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை செல்லும் சாலையில் புகை மூட்டங்களுடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீ பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    • சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருள்கள், டிராக்டர் எந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு அருகே உள்ள வடுகனூரில் கயிறு மில் ஒன்றை கடந்த 5 வருடங்களாக குத்தகைக்கு எடுத்து கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே தங்கி உள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தேங்காய் நார்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் ஆலை முழுவதும் மளமளவென தீ பிடிக்க தொடங்கி கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். தீ வேகமாக பரவியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கும், போலீருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புவீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருள்கள், டிராக்டர் எந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் தீ விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

    • தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது.
    • தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் உள்ள மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கடையில் இருந்த மரப்பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் செல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது. இதனை வேடிக்கை பார்த்தவர்கள் அந்த நாயை விரட்டிவிட்டனர். ஆனாலும் அந்த நாய் தொடர்ந்து அங்கேயே வந்தது. அப்போதுதான் கடை உரிமையாளர், கடைக்குள் நாய் குட்டி போட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த நாய்க்கு கடையின் வெளியே நின்றவர்கள் வழிவிட்டனர். உடனே அந்த தாய் நாய், புகை மூட்டத்தில் மோப்பம் பிடித்தபடி உள்ளே சென்று மரப்பலகையின் கீழ் தீயிலும் பாதுகாப்பாக இருந்த 6 குட்டிகளை ஒவ்வொன்றாக பாசத்துடன் வாயில் கவ்வியபடி வெளியே எடுத்து வந்தது. பின்னர் அந்த குட்டிகளை கடையின் அருகில் உள்ள பின்பகுதியில் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக ஒளித்து வைத்தது. இதில் இரண்டு நாய்க்குட்டிகள் இறந்து இருந்தன. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் வருத்தம் அடைந்தனர். பின்னர் இறந்த 2 குட்டிகளையும் தனியாக எடுத்தனர். மீதியிருந்த 4 குட்டிகளுக்கும் தாய் நாய் பாசத்துடன் பாலூட்டியது.

    ×