search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை காட்டூர் பகுதியில் மூடப்பட்ட மில்லில் திடீர் தீவிபத்து
    X

    கோவை காட்டூர் பகுதியில் மூடப்பட்ட மில்லில் திடீர் தீவிபத்து

    • தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை காட்டூர் பகுதியில் உள்ள சோமசுந்தரா மில்லில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியானது. இதனால் அந்த பகுதியில் கரும் புகைமண்டலம் ஏற்பட்டது.

    அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டன.

    தகவலின் பேரில் தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சோமசுந்தரா மில் தற்போது மூடப்பட்டு உள்ளது. எனவே அங்கு காய்ந்த சருகுகள் குவிந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அந்த வழியாக சென்ற சிலர் பீடி அல்லது சிகரெட் குடித்துவிட்டு வீசியதால் மில்லுக்குள் தீவிபத்து ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×