என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fire broke"
- தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை.
கோவை காட்டூர் பகுதியில் உள்ள சோமசுந்தரா மில்லில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியானது. இதனால் அந்த பகுதியில் கரும் புகைமண்டலம் ஏற்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டன.
தகவலின் பேரில் தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சோமசுந்தரா மில் தற்போது மூடப்பட்டு உள்ளது. எனவே அங்கு காய்ந்த சருகுகள் குவிந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அந்த வழியாக சென்ற சிலர் பீடி அல்லது சிகரெட் குடித்துவிட்டு வீசியதால் மில்லுக்குள் தீவிபத்து ஏற்பட்டதா என்று தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
- தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரையில் நல்லமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த நல்லமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறிய டித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக பெரும்பாலும் பொதுமக்களே தீயை அணைத்து கட்டுப்படுத்தி னர்.
மேலும் தீ பற்றிய உடன் அங்கு இருந்த மின்வாரிய பணியாளர்கள் மின்சார த்தை துண்டித்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாலகிருஷ்ணன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
- ரூ.87 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
கோவை,
கோவை எஸ்.எஸ். குளத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). இவர் ஆர்.எஸ். புரம் டி.வி. சாமி ரோட்டில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அவர் கடையைவழக்கம் போல் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் கடையில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து கடைக்காரர் கடை தீப்பிடித்து எரிவதை பாலகிருஷ்ணனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் தீயை போராடி அணைத்தனர். இருந்த போதிலும் ரூ.87 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பூட்டிய கடைக்குள் தீப்பி டித்தது எப்படி? மின் பழுதால் தீப்பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீவைத் தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
- அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை மூலத்துறையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த செல்போன் டவரில் திடீரென கரும்புகை வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தனர்.
அப்போது செல்போன் டவரில் திடீரென தீ பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி ஜெனரேட்டர் பகுதி முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் செல்போன் டவரில் இருந்த வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.இதனால் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
செல்போன் டவர் தீ விபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது யாரேனும் தீ வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது.
- ரூ.55 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
- இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்மம்பாளையம் புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது34).
இவர் காரமடையில் எலக்கட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கார்த்திகேயன் வழக்கம் போல வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் காவலாளியான செல்வராஜ் என்பவர் காவல் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 11 மணியளவில் எலக்ட்ரிக்கல் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான காவலாளி செல்வராஜ் சம்பவம் குறித்து உடனடியாக கடை உரிமையாளர் கார்த்திகேயனுக்கும், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளைம் தீயணைப்பு துறையினர், காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில் கடையில் ரூ.50 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரையிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்