என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்காளதேசத்தினர் 9 பேர் கைது"
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மானேஜராக இருப்பவர் அபுபக்கர்.
பெரியபாளையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் வீட்டுமனைக்கான நிலத்தை அமைந்தகரை நிறுவனம் வாங்கி உள்ளது. இதற்கான உரிமம் பெறுவதற்காக அபுபக்கர் காரில் பெரியபாளையம் சென்றார்.
காரை பெரியபாளையம் பஜாரில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஒரு கடையில் சொத்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்தார். திரும்பி வந்தபோது அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரில் இருந்த சூட்கேஸ், லேப்டாப் ஆகியவை கொள்ளைபோய் இருந்தன. நிலத்துக்கு கொடுப்பதற்காக 9 லட்சத்து 23 ஆயிரத்து 645 ரூபாய் சூட்கேசில் வைத்து இருந்தார்.
கொள்ளை குறித்து பெரியபாளையம் போலீசில் அபுபக்கர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
பெரியபாளையம் கடை வீதியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரை நோட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பெரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்தது.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.#GreaterNoidaBuildingCollapse
திருமலை:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடூர் மண்டலம் கொடூமூர் கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஆட்டோவில் மகாநதி சிவன் கோவிலில் தரிசனம் செய்ய இன்று அதிகாலை சென்றனர்.
சித்தூர் கர்னூல் தேசிய நெடுஞ்சாலை ஓர்வ கல்லு மண்டலம் கோமையாஜியா பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ சென்ற கொண்டிருந்த போது ஹைதராபாத்தில் இருந்து சித்தூர் நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ் ஆட்டோவின் பின் பக்கம் மோதியது.
இதில் ஆட்டோ சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதில் இருந்த பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர் இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஓர்வ கல்லு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கர்னூல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் பெயர் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஒரே ஊரை சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்