search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் எஸ்டேட் மானேஜரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை
    X

    ரியல் எஸ்டேட் மானேஜரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை

    பெரியபாளையம் அருகே ரியல் எஸ்டேட் மானேஜரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பெரியபாளையம்:

    சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மானேஜராக இருப்பவர் அபுபக்கர்.

    பெரியபாளையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் வீட்டுமனைக்கான நிலத்தை அமைந்தகரை நிறுவனம் வாங்கி உள்ளது. இதற்கான உரிமம் பெறுவதற்காக அபுபக்கர் காரில் பெரியபாளையம் சென்றார்.

    காரை பெரியபாளையம் பஜாரில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஒரு கடையில் சொத்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்தார். திரும்பி வந்தபோது அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    காரில் இருந்த சூட்கேஸ், லேப்டாப் ஆகியவை கொள்ளைபோய் இருந்தன. நிலத்துக்கு கொடுப்பதற்காக 9 லட்சத்து 23 ஆயிரத்து 645 ரூபாய் சூட்கேசில் வைத்து இருந்தார்.

    கொள்ளை குறித்து பெரியபாளையம் போலீசில் அபுபக்கர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    பெரியபாளையம் கடை வீதியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரை நோட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×