என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கர்னூல் அருகே ஆட்டோ மீது பஸ் மோதி 9 பேர் பலி
திருமலை:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடூர் மண்டலம் கொடூமூர் கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஆட்டோவில் மகாநதி சிவன் கோவிலில் தரிசனம் செய்ய இன்று அதிகாலை சென்றனர்.
சித்தூர் கர்னூல் தேசிய நெடுஞ்சாலை ஓர்வ கல்லு மண்டலம் கோமையாஜியா பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ சென்ற கொண்டிருந்த போது ஹைதராபாத்தில் இருந்து சித்தூர் நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ் ஆட்டோவின் பின் பக்கம் மோதியது.
இதில் ஆட்டோ சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதில் இருந்த பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர் இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஓர்வ கல்லு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கர்னூல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் பெயர் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஒரே ஊரை சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்