search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident 9 killed"

    கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி 9 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடூர் மண்டலம் கொடூமூர் கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஆட்டோவில் மகாநதி சிவன் கோவிலில் தரிசனம் செய்ய இன்று அதிகாலை சென்றனர்.

    சித்தூர் கர்னூல் தேசிய நெடுஞ்சாலை ஓர்வ கல்லு மண்டலம் கோமையாஜியா பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ சென்ற கொண்டிருந்த போது ஹைதராபாத்தில் இருந்து சித்தூர் நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ் ஆட்டோவின் பின் பக்கம் மோதியது.

    இதில் ஆட்டோ சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதில் இருந்த பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர் இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஓர்வ கல்லு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கர்னூல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் பெயர் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    ஒரே ஊரை சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    ×