search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Galaxy S9"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #GalaxyS9



    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது புதிய விளம்பர யுக்தியை அறிவித்துள்ளது. அதன்படி நெதர்லாந்தில் உள்ள சிறிய கிராமத்திற்கு சென்ற சாம்சங் அங்கு வசிப்பவர்களுக்கு 50 புத்தம் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த உலகம் முழுக்க சிறிய போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதை பின்பற்றி வரும் நிலையில், சாம்சங் இதே வழிமுறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

    நெதர்லாந்தில் சாம்சங் சென்று இருக்கும் கிராமத்தின் பெயர் அப்பெல் அதாவது தட்சு மொழியில் ஆப்பிள் என பொருள் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்திற்காகவே சாம்சங் அங்கு 50 கேலக்ஸி எஸ்9 யூனிட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 



    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, கிராமத்தில் வசிக்கும் 312 பேரில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிய கேலக்ஸி எஸ்9 யூனிட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் வழங்கும் தருணங்களை சிறிய வீடியோவாக சாம்சங் நெதர்லாந்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வீடியோ ஆப்பிள் சமூகம் சாம்சங்கிற்கு மாறுகிறது என்ற தலைப்பில் துவங்குகிறது. 

    சாம்சங் பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,

    <div align="center">
    <object height="360">
    <embed src="https://www.youtube.com/v/WLEZAbfBDl4?rel=0" height="360px" width="100%" />
    </object>
    </div>
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சன்ரைஸ் கோல்டு மற்றும் பர்கன்டி ரெட் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேல்க்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் சேட்டின் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக கேல்க்ஸி எஸ்9 சன்ரோஸ் கோல்டு நிறம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஃபினிஷ் ஸ்மார்ட்போனினை மிளிர செய்கிறது. 

    கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் பர்கன்டி நிற மாடல்கள் முதற்கட்டமாக கொரியா மற்றும் சீனாவில் மே மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் கோல்டு நிற கேல்கி எஸ்9 சீரிஸ் ஜூன் மாத வாக்கில் ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி, ஹாங் காங், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின், தாய்வான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் என்றும் மற்ற நாடுகளில் வரும் மாதங்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய நிறம் தவிர ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவும், கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 / எக்சைனோஸ் 9810 சிபெசெட், 4 ஜிபி, 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் பிக்சல் PDAF, கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    ×