என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு.
- நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.
சென்னை :
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.
நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.
மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.
தமிழ்நாடு பொறுக்காது! என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 2020 முதல் சுமார் 3 லட்சம் குழந்தைகள் காணாமல்போயினர்.
- மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர்.
இந்தியாவில் கடந்த 2020 முதல் 4 வருடங்களில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு ஒன்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுத்தார் தரப்பில் ஆஜரான மூத்த மூத்த வழக்கறிஞர் அபர்ணா பட், மாநிலங்களுக்கு இடையிலான குழந்தை கடத்தல் வழக்குகளை சிபிஐ போன்ற தேசிய அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "கடந்த 2020 முதல் காணாமல்போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மத்திய, மாநில போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் 36 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் 'கோயா-பயா' போர்ட்டலைத் தவிர, பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் புகார் அளித்தும் நான்கு மாதங்களாக கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிந்தார்.
மாவட்டந்தோறும் மனித கடத்தல் எதிர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மத்திய அரசு கூற்றுப்படி, பீகாரில், 2020 முதல் 24,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
பீகாரைப் போலவே, ஒடிசாவிலும் 2020 முதல் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் 4,852 பேரை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 2020 முதல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயினர். அதில் 45,585 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இருப்பினும், 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
- கதாநாயகன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து உள்ளார்.
- இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'மகாராஜா' திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார். குறிப்பாக இவர் கதாநாயகன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' படத்திலும், உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்திலும், இளையதளபதி விஜயுடன் 'மாஸ்டர்' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். அஜித்துடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு என்று நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், அஜித்துடன் படம் எப்போ பண்ணுவீங்க என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி கூறுகையில்,
போற இடத்தில் எல்லாம் இந்த கேள்விய கேட்கிறார்கள். இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை. ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நடக்கறதா இருந்தது.. நடக்கவில்லை. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
இதையடுத்து எந்த படத்தில் நடிக்கிறதா இருந்தது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, படம் பெயர் சொல்ல வேண்டாம்... என தெரிவித்து படத்தின் பெயரை கூற மறுத்துவிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
- அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழ் நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
- ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.
புதுடெல்லி:
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். கும்பமேளாவுக்கு செல்ல மக்கள் திரண்டு இருந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்தனர் மற்றும் பலர் காயம் அடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாகவும், துயரமாகவும் இருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை ரெயில்வே அமைப்பின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசின் உணர்வின்மையை வெளிப்படுத்துகிறது.
பிரக்யராஜால் நடை பெற்று வரும் கும்பமேளாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் செல்வதை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ரெயில்வேயின் அலட்சியமே இதற்கு காரணம்.
தவறான நிர்வாகம், மற்றும் அலட்சியத்தில் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதை அரசும், நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ராகுல்காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
- சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
- இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.
அத்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மகனை தாய் கொலை செய்து 5 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் ஆதிராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம் பிரசாத்தை (35). துப்புரவு பணியாளராக இவர் பணி செய்து வந்தார். இவரின் தாயார் லட்சுமி தேவி (57). ஐதராபாத்,நரசராவ்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனது அத்தைகள், சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
ஐதராபாத் மற்றும் நரசராவ்பேட்டாவில் உள்ள தனது அத்தைகள் இருவரை பிரசாத் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தனது மகனை கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் பிரசாத் உயிரிழந்தார். உறவினர்களின் உதவியுடன் மகனின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள நகலகண்டி கால்வாயில் வீசியுள்ளார்.

இதுதொடர்பாக தற்போது தகவலறிந்த போலீசார் பிரசாத்தின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயில் இருந்து மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஐபிசி சட்டம் 103 மற்றும் 238 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது.
- தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
திருப்பூர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இங்கு பல்வேறு நாடுகள் உருவாகும்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு நிதியில் பெரும் வருவாயை கொடுப்பது தமிழ்நாடும் ஒன்று.
மும்மொழிக் கொள்கை காரணமாக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்காதது வரவேற்கத்தக்கது.
மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
மத்திய அரசை எதிர்த்தால் ED, IT என விசாரணை அமைப்புகள் ரெய்டு வரும் என பயப்படுகின்றனர். என் வீட்டிற்கு ED, IT போன்றவை ரெய்டு வரமுடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமில்லை.
கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதகம் வரும் போது ஆட்சியாளர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்றார்.
- இந்தப் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.
- இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இந்திய மொழிகள் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தமிழில் இவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படமான "தேரே இஸ்க் மேன்" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகர் தனுஷ் கேரவனில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரவனில் இருந்து வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்த நடிகர் தனுஷ் கேமராவை நோக்கி கையசைக்கிறார்.
இதோடு, படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ஒருத்தரை துரத்திக்கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனந்த் எல் ராய் தயாரித்து இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷால் சின்கா மேற்கொள்ள, ஆக்ஷன் இயக்குநராக ஷாம் கௌஷால் பணியாற்றுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
- ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்த சிறிது நேரத்தில் கோவா முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வேலை நிமித்தமாக கோவாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லாவு மம்லதார் (68) சென்றிருந்தார்.
நேற்று அவரது கார் கார் காதேபஜார் அருகே ஒரு ஆட்டோவுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய பின்னர் அவர் தனது காரில் அவர் தங்கியிருந்த ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் நோக்கிச் சென்றார்.
ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் லாட்ஜ் படிக்கட்டுகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு அங்கிருத்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
லாவு மம்லதார், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் (எம்ஜிபி) 2012-2017 வரை கோவா எம்எல்ஏவாக இருந்தார். 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டு மட்காய் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை;
- ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை; இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு என்று கூறி, அந்த ஆணையத்தை எல்லையில்லா அதிகாரம் பெற்ற அமைப்பைப் போன்ற தோற்றத்தை அரசும், மின்சார வாரியமும் ஏற்படுத்துகின்றன.
ஆனால், மின்சாரக் கொள்முதல் போன்ற தங்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். இதேபோக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது. இனி வரும் காலங்களிலும் இத்தகையப் போக்கு தொடர்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்.'
- இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியீட்டை ஒட்டி படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.
தற்போது டீசல் படத்தின் இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






