என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநில கல்வி திட்டங்களுக்கான நிதி மறுப்பு - மத்திய அரசை எதிர்க்க தி.மு.க. அரசுக்கு அச்சம் : சீமான்
- மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது.
- தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
திருப்பூர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இங்கு பல்வேறு நாடுகள் உருவாகும்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. மத்திய அரசுக்கு நிதியில் பெரும் வருவாயை கொடுப்பது தமிழ்நாடும் ஒன்று.
மும்மொழிக் கொள்கை காரணமாக தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்காதது வரவேற்கத்தக்கது.
மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி தர முடியாது என மத்திய அரசு கூற முடியாது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தீர்வு தானா வரும்.
மத்திய அரசை எதிர்த்தால் ED, IT என விசாரணை அமைப்புகள் ரெய்டு வரும் என பயப்படுகின்றனர். என் வீட்டிற்கு ED, IT போன்றவை ரெய்டு வரமுடியாது. ஏனெனில் என்னிடம் ஒன்றுமில்லை.
கறை படிந்திருப்பதால் தான் மாநில உரிமைக்கு பாதகம் வரும் போது ஆட்சியாளர்களால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை என்றார்.






