என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.
    • அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு ஈரோட்டிலிருந்து போலீசார் வந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பெரியாரை பற்றி நான் பேசுகிறேன். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டதாக கூறுகிறார்கள். பெரியார் பேசியதை எடுத்து பேசுகிறேன்.

    * பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.

    * பெரியார் இதெல்லாம் பேசி இருக்கிறார் என்று நான் சொன்னால் இதெல்லாம் பேசவில்லை என்று மறுக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாக பேசக்கூடாது. படம் பொய். பார்த்தது பொய் என்று பேசக்கூடாது.

    * தன்னால் அவர்களுக்கு நெருக்கடி இருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.

    * அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.

    * எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்.

    * தகைசால் தமிழர் விருதுக்கு மாற்றாக தகைசால் திராவிடர் விருது கொடுக்க வேண்டியதுதானே என்று அவர் கூறினார்.

    • இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.

    இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.

    இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

     

    • பயிற்சியின் போது விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.
    • ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து அவரது இடது முழங்காலில் தாக்கியது.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சியின் போது விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து அவரது இடது முழங்காலில் தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். மருத்துவ உதவிக்கு பிறகு ரிஷப்பண்ட் சிறிது நேரம் கழித்து பயிற்சிக்கு திரும்பினார். இதனால் இது பயப்படும் படியான காயம் இல்லை என்று கருதப்படுகிறது.

    ரிஷப்பண்ட் 2022 டிசம்பரில் பயங்கர விபத்தில் சிக்கினார். அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்த விபத்தில் முழங்காலில்தான் அவருக்கு அதிகமான காயம் ஏற்பட்டது. தற்போதும் முழங்காலில்தான் காயம் ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல்.ராகுல் தான் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதில் 3-வது ஆட்டத்தில் அவர் திறமையை வெளிப்படுத்தினர்.

    இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணியின் முதல் நிலை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தான் என்று பயிற்சியாளர் காம்பீர் தெளிவுப்படுத்தி இருந்தார். அதே நேரம் ரிஷப்பண்ட் இடம்பெற வேண்டும் என்பதில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக அகர்கர்-காம்பீர் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 20-ந் தேதி எதிர் கொள்கிறது.

    • எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
    • தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

    * எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா?

    * எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

    * தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

    இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK23 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

    திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று முன்தினம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    நேற்று மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 44 பேர் அரியானா மாநிலத்தையும், 33 பேர் குஜராத் மாநிலத்தையும், 2 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா ஒருவர் இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

    3-வது கட்டமாக நேற்று அமிர்தசரஸ் வந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

    அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

    இதுதொடர்பாக, அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் இந்தியர்களின் 3வது குழு நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். நேற்று வந்த விமானத்தில் 112 பேர் வந்தனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் டயப்பர்கள் என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்கினோம். எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்து இருந்தோம். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    • இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
    • ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.

    பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.

    இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.

    மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக் வருகிறது.

    படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் திரைப்படமாகும்.

    திரைப்படம் சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
    • பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    வதோதரா:

    3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போதுகின்றன.

    இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அந்த அணி 202 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. டெல்லி அணி முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணி கடைசி பந்தில் இந்த வெற்றியை பெற்றது.

    இதனால் பெங்களூர்-டெல்லி அணிகள் மோதும் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள். 

    • மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா நகரங்கள் குண்டு வீச்சுக்கு சின்னாபின்னமாகின.

    அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களை விடுவித்து வருகின்றனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஹமாஸ் பிடியில் இன்னும் பிணைக்கைதிகள் உள்ளனர். அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

    ஜெருசலேமில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும் வரை சமாதானம் சாத்தியமற்றது. இதனால் ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும் போது, "காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்."

    "காசாவில் ஹமாஸ் ராணுவ திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் ஒழிக்க அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவோம். காசா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்."

    "இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் பலவீனமாக உள்ளது. கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
    • அமைதி பேச்சுவார்த்தைக்கு உகந்த இடமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாஸ்கோ போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான உத்வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வைத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார். போர் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரஷிய மற்றும் உக்ரேனியர்கள் அபு தாபி மற்றும் துபாய்க்கு தாயகமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதவிர கடந்த காலங்களில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதிலும் அமீரகம் உதவியுள்ளது.

    இதன் காரணமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உகந்த இடமாக விளங்குகிறது. ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெலென்ஸ்கி அபு தாபிக்கு வந்தார். விமான நிலையத்தில் அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.

    போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜெலன்ஸ்கி பயணம் செய்தது இதுவே முதல் முறை ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
    • கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.

    வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.

    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22,800 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

    இந்திய பங்குச்சந்தைகள் 9வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.

    ×