என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
- ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.
இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.
மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

- சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக் வருகிறது.
படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் திரைப்படமாகும்.
திரைப்படம் சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
- பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வதோதரா:
3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போதுகின்றன.
இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அந்த அணி 202 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. டெல்லி அணி முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணி கடைசி பந்தில் இந்த வெற்றியை பெற்றது.
இதனால் பெங்களூர்-டெல்லி அணிகள் மோதும் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள்.
- மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா நகரங்கள் குண்டு வீச்சுக்கு சின்னாபின்னமாகின.
அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களை விடுவித்து வருகின்றனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஹமாஸ் பிடியில் இன்னும் பிணைக்கைதிகள் உள்ளனர். அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.
ஜெருசலேமில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும் வரை சமாதானம் சாத்தியமற்றது. இதனால் ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும் போது, "காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்."
"காசாவில் ஹமாஸ் ராணுவ திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் ஒழிக்க அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவோம். காசா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்."
"இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் பலவீனமாக உள்ளது. கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.
- அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
- அமைதி பேச்சுவார்த்தைக்கு உகந்த இடமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாஸ்கோ போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான உத்வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வைத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார். போர் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரஷிய மற்றும் உக்ரேனியர்கள் அபு தாபி மற்றும் துபாய்க்கு தாயகமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதவிர கடந்த காலங்களில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதிலும் அமீரகம் உதவியுள்ளது.
இதன் காரணமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உகந்த இடமாக விளங்குகிறது. ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெலென்ஸ்கி அபு தாபிக்கு வந்தார். விமான நிலையத்தில் அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜெலன்ஸ்கி பயணம் செய்தது இதுவே முதல் முறை ஆகும்.
- ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
- கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. ஆரம்பகட்ட நிலவரப்படி சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22,800 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் 9வது நாளாக வீழ்ச்சியில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63, 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
13-02-2025- ஒரு கிராம் ரூ.107
12-02-2025- ஒரு கிராம் ரூ.107
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது.
- மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கானாவில் நான் இருக்கும்போது விஜய் படம் தெலுங்கில் ரிலீசானது. இந்தியில் ரிலீசானது. அப்போ மும்மொழிக்கொள்கை, பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம். மும்மொழிக்கொள்கை குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக்கூடாதா?
நீங்கள் சொன்னீர்களா? தமிழில் மட்டும் தான் என் படம் ரிலீசாகும் என்று.. நான் தமிழன்.. தமிழை போற்றுபவன்.. தெலுங்கில் ரிலீஸ் செய்யக்கூடாது. ரிலீஸ் செய்தால் நான் எதிர்ப்பேன் என்று சொல்லவில்லையே.
பலமொழிக்கொள்கை உங்களுக்கு தேவைப்படுவதைப்போல குழந்தைகளின் வருங்காலத்திற்கு பல மொழிக்கொள்கை தேவைப்படும்.
இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீங்க. நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்காது என்று கூறினார்.
- இன்று அதிகாலை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருந்தார்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவானது. இது பூமியில் இருந்து 5 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமும் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் சரியாக 8.02 மணிக்கு ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
முன்னதாக நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
- கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்.
- மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம்
அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது
மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில அரசின் உண்மை
இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?
இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?
பாராளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
- குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை இருக்கும்போது அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு சொல்லுங்கள்.
உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. இந்தி இருக்கிறது. நான் இந்தி என்று சொல்லவில்லை. 3-வது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். அதை 8 வயதிற்குள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மொழியை அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
மாறி வரும் உலகத்தில், சாவல் நிறைந்த உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?
படிப்பு என்றாலே உங்களுக்கு பிரச்சனை தான். தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்.
படிப்பில் நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள். குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக்கொடுப்பத்தால் அங்கு சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பெற்றோர் இருக்கிறார்கள்.
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
இன்னொரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதை இறுமாப்புடன் இவர்கள் மறுக்கிறார்கள்.
சாமானிய மக்களை படிங்கள் என்று சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என்று சொல்வது ஆணவமா?
இந்த அரசாங்கம் தான் ஆணவத்தோடு செயல்படுகிறது. இதை பா.ஜ.க. கட்சி தெளிவாக எடுத்துச்சொல்வோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்டிங்கில் இருக்கிறாரா, ஷூட்டிங்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
ஆக்டிங், ஷூட்டிங் செய்தால் தான் மக்களை அணுக முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள்.
பா.ஜ.க. 2026-ஐ நோக்கி பலமாக வெற்றி நடைபோடுகிறோம்.
வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலைவாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்த ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக்கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது மத்திய அரசு கிடையாது, தர்மேந்திர பிரதான் கிடையாது.
மாணவர்களின் கல்வியை பாதிப்பது அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.






