என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வயல்களில் தோண்டுவதைக் காணலாம்.
    • புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் ஒரு காட்சி உள்ளது.

    மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'சாவா'.

    சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

    முகலாய மன்னர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்ஷய் கண்ணா நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் சாவா படத்தில் வரும் காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் புதையலை தேடி கிளம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வயல்களில் தோண்டுவதைக் காணலாம். பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க நாணயங்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் இலக்கு.

    முகலாயர் காலத்தில் புர்ஹான்பூர் ஒரு வளமான நகரமாக இருந்தது. மேலும் இங்கு முகலாய நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததாக நம்பப்படுகிறது.

    சாவா திரைப்படத்தில் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் (விக்கி கௌஷல்) மற்றும் ஔரங்கசீப் (அக்ஷய் கன்னா) ஆகியோர் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் ஒரு காட்சி உள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, கிராமவாசிகள் அங்கே உண்மையிலேயே ஒரு புதையல் புதைந்து இருக்கலாம் என்று நினைத்து, தோண்டத் தொடங்கியுள்ளனர்.

    நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வயல்களை கிராம மக்கள் தோண்டியுள்ளனர். சிலர் தங்க நாணயங்களைக் கண்டறிய மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தினர்.

    கிராம மக்களின் தோன்றுவதை அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறை ஓடோடி வந்தது. கோட்டை பகுதியில் அரசாங்க அனுமதியின்றி இதுபோன்ற அகழ்வாராய்ச்சி சட்டவிரோதமானது என்று போலீஸ் மக்களை எச்சரித்தது.

    உண்மையில் அங்கு புதைக்கப்பட்ட புதையல் ஏதேனும் உள்ளதா இல்லையா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, புர்ஹான்பூரில் தங்கத்தால் நிரம்பிய புதையல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

    முகலாயர்களை எதிர்த்து விக்கி கௌஷல் (சத்ரபதி சம்பாஜி) துணிச்சலுடன் போராடும் காட்சிகள், அவுரங்கசீப்பால் சாம்பாஜி சித்திரவதை செய்யப்படும் நெஞ்சை பிழியும் காட்சிகள் என காட்சிக்கு காட்சிக்கு ஸ்கோர் செய்த சாவா படம் இதுவரை ரூ.571 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.
    • சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு.

    பெண்கள் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் அனைவரும் பச்சை பொய் கூறி வருகிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் கீதா ஜீவன் மேலும் கூறியிருப்பதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு. மகளிர் உதவித் தொகை திட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சுய உதவிக்குழுக்கள் மூலம் மகளிரை தொழில் முனைவோர்களாக்கியுள்ளது திமுக அரசு. மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள்.

    தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும்போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள். உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
    • இதனால் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் வரை எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என நாம் அவர்களிடம் கேட்கக் கூடாது.

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.

    2-வது நாளான இன்று கட்சி தொடர்களிடையே உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    குஜராத் காங்கிரசில் இரண்டு விதமான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர். மக்களிடம் நேர்மையாக இருப்பவர்கள் அவர்களுக்காகப் போராடுபவர்கள், அவர்களை மதிக்கிறார்கள். காங்கிரசின் சித்தாந்தத்தை இதயத்தில் வைத்திருக்கிறார்கள்.

    மற்றவர்கள் மக்களிடமிருந்து வெகு தொலைவில் அமர்ந்திருக்கிறார்கள். மக்களவை அவர்கள் மதிக்கவில்லை, அவர்களில் பாதி பேர் பாஜகவுடன் இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பாஜக-வுக்கு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களைந்தெறிவது அவசியம். காங்கிரஸ் கட்சி அதன் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். இதனால் நம்முடைய பொறுப்புகளை நிறைவேற்றும் வரை எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள் என நாம் அவர்களிடம் கேட்கக் கூடாது.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

    அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கியது. இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்று வலைதளம் வழியாக நாளை (9-ந்தேதி) முதல் 11-ந்தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.

    இல்லையெனில் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ந்தேதி வெளியிடப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 14-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
    • ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும்.

    சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "பெண் பிள்ளை படித்தால் சமூகமே முன்னேற்ற பாதைக்கு செல்லும்" என்று கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பையன் படிக்கிறான் என்றால் அவன் குடும்பம் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெண் பிள்ளை படிக்கிறாள் என்றால் ஒட்டுமொத்த சமூகமே முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

    அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு தப்பினர்.
    • உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

    கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சனாபூர் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுமார் 27 வயதான இளம்பெண் ஒருவர் சுற்றுலா வந்தார். அவர் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தார்.

    நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ், ஒடிசாவை சேர்ந்த பிபாஷ் ஆகிய 4 சுற்றுலா பயணிகள், மற்றும் தங்கும் விடுதி நடத்தி வரும் 29 வயதான ஒரு இளம்பெண் ஆகிய 5 பேரும் துங்கபத்ரா ஏரிகரையில் இசையை கேட்டு கொண்டும், நட்சத்திரங்களை ரசித்துகொண்டும் இருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டனர். மேலும் அவர்களிடம் பணம் கேடடு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இஸ்ரேல் பெண் சுற்றுலா பயணி மற்றும் தங்கும் விடுதியின் பெண் உரிமையாளரை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

    அப்போது தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு தப்பினர். இதில் அமெரிக்காவை சேர்ந்த டேனியல், மகாராஷ்டிராவை சேர்ந்த பங்கஜ் ஆகியோர் உயிர் தப்பினர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த பிபாசை காணவில்லை.

    இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே துங்கபத்ரா நதியில் தள்ளிவிடப்பட்ட ஒடிசாவை சேர்ந்த சுற்றுலா பயணி பிபாசை தீயணைப்பு துறையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில் அவர் இன்று காலை 8 மணியளவில் கங்காவதி தாலுகாவில் உள்ள மல்லப்பூர் அருகே உள்ள ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் உடல் கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  




     


    • 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பவானி சுப்பராயன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    பெண்கள் சிறுவயதிலிருந்தே அடக்குமுறையில் இருந்தே வளர்க்கப்படுகிறார்கள் பருவ வயது அடைந்தவுடன் இயல்பாக மற்றவர்களுடன் பழக முடிவதில்லை. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காமல் புகார் அளிக்கலாம்.

    பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நற்போதனைகளை வழங்க வேண்டும். நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது. யாரும் தொடவே கூடாது என சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சமம் என சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சாதி, நிறம், உயரம் ஆகியவற்றை கொண்டு வேறுபாடுகள் வரக்கூடாது. பெண்களின் அழகை வர்ணித்தால் அவர்கள் மீது புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகாகவி பாரதியார், மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என கூறியுள்ளார்.

    'நட்புக்கும் ஒரு எல்லை உண்டு. நாம் நமது கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் கல்வி கற்றால் சமூகம் மாற்றங்கள் ஏற்படும். நமது அடிப்படை உரிமைகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டவே அனுமதிக்கப்படவில்லை. தற்போது கல்பனா சாவ்லா முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதற்கு காரணம் பெண்கள் மனதிற்குள் இருக்கும் தீராத வேட்கை தான். 2 கைகள் தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.
    • பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு முதலமைச்சர் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,

    நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான 50 மின் ஆட்டோக்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல் கட்டமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 இளஞ்சிகப்பு நிற ஆட்டோக்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 ஆட்டோக்கள் என மொத்தம் 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

    இந்த அடையாள அட்டை மூலம், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லவும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெறப்படும் பயிர்க் கடன், கால்நடைக் கடன், சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன் எனப் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்கும் பொருட்களுக்கு 5 சதவிகித கூடுதல் தள்ளுபடி, ஆவின் நிறுவன கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கவும், இ-சேவை மையங்களில் அனைத்து சேவைகளுக்கும் 10 சதவிகித சேவைக் கட்டணம் குறைவு போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்று பயன்பெறலாம்.

    தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46,592 மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

    பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ், ஐந்து பெண்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலப் பத்திரமும், நிலம் வாங்குவதற்கான மானியமாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

    தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், பதிவு செய்துள்ள 40 பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் பெறுவதற்கான உதவித் தொகை ஆணைகளும், 10 பெண் தொழிலாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொள்வதற்கான ஆணைகளும் என மொத்தம் 50 பெண்களுக்கு 1.18 கோடி ரூபாய் நிதி உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற செல்வி முத்துரத்தினஸ்ரீ, செல்வி ஜே. நிரஞ்சனா, செல்வி எஸ். வர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 2025-ம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்.

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை, போதை ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கடலூர் மாவட்டம். காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சவுமியாவிற்கு.

    2025-ம் ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதினையும், விருது தொகையாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.

    பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.

    முன்னதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் அதிரடிப்படை காவலர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, சாகச நிகழ்ச்சிகளையும், தங்களின் கண்களைக் கட்டிக் கொண்டு துப்பாக்கிகளை கையாளுவதையும், ஆயுதங்களை பயன்படுத்திடும் முறை குறித்தும் செய்து காட்டியதை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சி.வி. கணேசன், கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி சோமு, கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், மோகன், ஜோசப் சாமுவேல்,சுதர்சனம், வேலு, மூர்த்தி, பிரபாகர ராஜா, துணை மேயர் மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 1500 பெண்கள் தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
    • இந்த காலத்தில் இளைஞர்கள் தாடி வைப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம்.

    அன்பே உன் அன்பை தாடி... தாடி... என்று அவள் பின்னால் அலைந்தேன். ஆனால் அவளோ என்னை தாடி வைத்து அலைய விட்டு விட்டாள்... என்று தான் ஒரு காலத்தில் காதலில் தோற்றுப் போனவர்கள் புலம்பினார்கள்.

    ஒருவர் தாடி வளர்க்கிறார் என்றாலே அதன் பின்னணியில் ஏதோ ஒரு சோகம் இருக்கிறது என்று தான் அர்த்தம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது 'கிளீன்ஷேவ்' செய்து விட்டுத்தான் செல்வார்கள். பெற்றோர்களும் தங்கள் மகன்களை தாடி வைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

    ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. நம் கண்ணில் படும் ஆண்களில் 80 சதவீதம் பேர் தாடியுடன் தான் தெரிகிறார்கள். ஏன், மணமேடையில் இருக்கும் மணமகன் கூட தாடியோடுதான் இருக்கிறார்.

    அடச்சீ... தாடி குத்துதுடா ஒழுங்கா ஷேவ் பண்ணுடா என்று பெண்களும் சொன்னார்கள். ஆனால் இன்று தான் நேசிக்கும் ஆடவன் தாடி வைத்திருந்தால் அதை பார்த்து மகிழ்கிறார்கள். அன்று கன்னத்தை கிள்ளிய கைகள் இன்று தாடியை வருடி சூப்பர்டா என்று சொல்கின்றன.

    ஆனால் இன்று தாடியை பார்த்தே ஒரு இளைஞரை இளம்பெண்கள் முடிவு செய்து விடுகிறார்களாம். கிளீனாக ஷேவ் செய்து இருந்தால் அவர் 'சாக்லெட் பாய்...' அமுல் பேபி போல் இருப்பாராம். நேர்த்தியாக தாடி வைத்திருந்தால் அவர் வித்தியாசமான லுக்கில் தெரிவார். அவரிடம் பொறுமை இருக்கும். சின்சியராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பார் என்பது பெண்கள் கணிப்பு.

    அந்த மாதிரி ஆண் துணையோடு இருந்தால் பாதுகாப்பு கிடைக்குமாம். அதாவது பலம்மிக்கவராக இருப்பாராம். தங்களுக்காக சண்டை போடும் அளவுக்கு அவர்களிடம் துணிச்சல் இருக்குமாம்.

    அதற்கு பெண்கள் சொல்லும் உதாரணம் தான் ஆச்சரியமாக இருக்கிறது. 'அந்த கால மன்னர்களின் படங்களை பாருங்கள். உலகம் முழுவதும் வெற்றி பெற்ற தலைவர்களை பாருங்கள். எல்லோர் முகத்திலும் தாடி இருக்கும். அந்த தாடி தான் அவர்களின் அழகுக்கும், வீரத்துக்கும் அடையாளம் என்பது அவர்கள் தரப்பு வாதம்.

    அப்படி தாடியுடன் இருக்கும் ஆண்கள் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள். நம்மையும் சுதந்திரமாக வைத்துக் கொள்வார்கள். தனக்கு சரி என்று பட்டதை செய்து முடிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் பார்ட்னர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல அப்படிப்பட்டவர்கள்தான் ஒரே பெண் பார்ட்னருடன் கடைசி காலம் வரை இருப்பார்களாம். கிளீன்ஷேவ் செய்யும் ஆண்கள் அடிக்கடி பார்ட்னர்களையும் மாற்றி விடுவார்களாம். என்னடா இது புதுக்கதையாக இருக்கிறது என்று வடிவேல் பாணியில் யோசிக்கிறீர்களா?

    ரொம்ப யோசிக்காதீங்க. நம்பித்தான் ஆக வேண்டி உள்ளது. 2500 பெண்களிடம் இது தொடர்பாக கேட்டதில் 1500 பெண்கள் தாடி வைத்த ஆண்களைத்தான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இந்த காலத்தில் இளைஞர்கள் தாடி வைப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு இதுதான் காரணம். பல இளைஞர்கள் ஷேவ் செய்வதை விட தாடியை பராமரிப்பதில் கூடுதல் நேரம் செலவிடுகிறார்கள். சீராக டிரிம் செய்வது, தாடியில் ஒரு முடிகூட தனியா நிற்காதபடி சீவி விடுவது, அடிக்கடி கைகளால் தடவி கொள்வது என்று ஆர்வமாக உள்ளார்கள்.

    அழகான தாடி இருப்பது அழகான பெண்களுக்கு பிடிக்கும் என்றால் இளைஞர்கள் அப்படித்தானே இருப்பார்கள்.

    திருமணத்துக்கு முன்பும் சரி. பின்பும் சரி. தாடி தான் அழகு என்று கருதுவதால் ஆண்களிடம் தாடி மவுசு அதிகரித்துள்ளது.

    இதையறிந்து உங்கள் தாடி கருமையாக இருக்க வேண்டுமா...? இந்த ஒரு 'டை' போதும் என்று தாடி பராமரிப்புக்கென்றும் தனியாக கலர் டை வந்து விட்டது. சிகை அலங்காரம் செய்யும் சலூன்களில் கூட தாடி சீரமைப்புக்கு தனி கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    • விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது.
    • கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் சந்திக்கின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் தான் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில், "இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினாய் என்று விராட் கோலி என்னை பாராட்டியது என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" என்று பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அப்ரார் அகமது, "விராட் கோலிக்கு பந்து வீச வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு துபாயில் நனவானது. அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய பந்தில் முடிந்தால் சிக்ஸ் அடியுங்கள் என்று நான் அவரை சீண்டினேன். ஆனால் அவர் ஒருபோதும் கோவப்படவில்லை. கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம் நீ நன்றாக பந்துவீசினாய் என்று தெரிவித்தார். அவருடைய பாராட்டு என்னை மகிழ்ச்சியடைய செய்தது" என்று தெரிவித்தார்.

    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
    • தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை :

    தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த இந்த விழாவில் மாநில நிர்வாகிகள் நல்லதம்பி காளிராஜ் வேணுராம் , மகளிர் அணி நிர்வாகிகள் மகாலட்சுமி, சுப மங்களம், மாவட்ட செயலாளர்கள் ஆனந்தன், பிரபாகரன், பழனி, மாறன், செந்தில்குமார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பங்கேற்ற மகளிர் அணியினர் பிரேமலதாவுக்கு பிரமாண்ட ஆளுயுர மாலை அணிவித்தனர். பிரேமலதா கேக் வெட்டி மகளிர் அணிக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினருக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    பின்னர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-

    தே.மு.தி.க.வில் மகளிர் அணியினருக்கு ஒரு சீருடையை உருவாக்கி கொடுத்த நமது தலைவர் கேப்டன் இன்று தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.

    கல்லூரி விழாவில் எனக்கு நேற்று அளிக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை தே.மு.தி.க. மகளிர் அணியினருக்கு அர்ப்பணிக்கிறேன். மகளிர் தினமான இன்று கேப்டனின் லட்சியம், கொள்கைகளை அனைவரும் வென்றெடுப்பதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மும்மொழி கொள்கை தொடர்பாக எங்களது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்கிற கேப்டன் வாக்கின்படி தே.மு.தி.க. செயல்படும். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தில் தொகுதிகளை குறைக்க கூடாது. இதற்காக தே.மு.தி.க. தமிழக அரசுடன் இணைந்து எதிர்ப்பை தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பிரேமலதாவிடம், தே.மு.தி.க.வுக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா பதில் கூற மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சில நாட்களுக்கு முன்பு கேள்வி கேட்ட போதும் பதில் அளிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
    • தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே

    2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

    * த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.

    * நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்.

    * நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.

    * சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நண்பர் யார்? நீலிக்கண்ணீர் வடிப்பவர் யார் என்று தெரியும்

    * தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை என்று கூறினார்.

    ×