என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அமெரிக்க பங்குச்சந்தை தினமும் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது.
    • அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4 டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    குறிப்பாக வரி விதிப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த நாடுகள் பதிலடியாக அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. மேலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே தனது வரி விதிப்பு நடவடிக்கையால் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அமெரிக்கப் பொருளாதாரம் மாற்றக் காலத்தில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

    அவரது இந்த கருத்தை தொடர்ந்து உலகளவில் பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    பொருளாதார மந்தநிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்பனை செய்வதை அதிகரித்தனர்.

    இதன்மூலம் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலருக்கும் மேல் குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான எஸ்-பி 500, பிப்ரவரி 19-ந்தேதி அடைந்த வரலாற்று உச்சத்தில் இருந்து 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் சரிந்தன.

    சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பால், ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.
    • வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400

    09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320

    08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320

    07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240

    06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-03-2025- ஒரு கிராம் ரூ.108

    09-03-2025- ஒரு கிராம் ரூ.108

    08-03-2025- ஒரு கிராம் ரூ.108

    07-03-2025- ஒரு கிராம் ரூ.108

    06-03-2025- ஒரு கிராம் ரூ.108

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனிக்கிழமை வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை கோடை மழை பெய்தது. அதிகாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில், புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. சென்னையை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • இந்திய ரெயில்வேயில் 12,362 பெண் அலுவலக ஊழியர்களும் 2,360 பெண் மேற்பார்வையாளர்களும் உள்ளனர்.
    • இந்திய ரெயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014-ல் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய ரெயில்வேயின் முக்கிய செயல்பாட்டு வேலைகளில் பெண்கள் அதிக பங்கு வகிக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தற்போது 2,162 பெண்கள் லோகோ பைலட்டுகளாக பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் 794 பெண்கள் ரெயில் மேலாளர்களாக (காவலர்கள்) உள்ளனர். கூடுதலாக, இந்தியா முழுவதும் 1,699 பெண்கள் நிலைய மேலாளர்களாக (station masters) பணிபுரிகின்றனர்.

    இந்திய ரெயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பெண் லோகோ பைலட்டுகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014-ல் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    ரெயில்வே மூத்த அதிகாரி கூறுகையில்,

    நிர்வாக மற்றும் பராமரிப்புத் துறைகளிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்திய ரெயில்வேயில் 12,362 பெண் அலுவலக ஊழியர்களும் 2,360 பெண் மேற்பார்வையாளர்களும் உள்ளனர்.

    பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையான தண்டவாளப் பராமரிப்பில், ரெயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக 7,756 பெண்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர்.

    பயணிகள் சேவைகளிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 4,446 பேர் டிக்கெட் சரிபார்ப்பாளர்களாகவும், 4,430 பேர் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பாயிண்ட்ஸ்மேன்களாகவும் பணியாற்றுகின்றனர்.

    இந்திய ரெயில்வே பல ரெயில் நிலையங்களை அனைத்து பெண் குழுக்களுடன் செயல்படுத்தி உள்ளது. இவற்றில் மாதுங்கா, நியூ அமராவதி, அஜ்னி மற்றும் காந்திநகர் ரெயில் நிலையங்கள் அடங்கும்.

    இந்திய ரெயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்திய ரெயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நேற்றிரவு இந்தியா வந்தடைந்தது. தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளனர். வருகிற 22-ம் தேதி ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் வருண் மற்றும் ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுகின்றனர்.

    அதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்காக சென்னை வந்துள்ளனர். இந்த தொடருக்காக வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், சி.எஸ்.கே. அணியுடன் இருவரும் விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் திரைக்கதை சார்ந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதன் காரணமாக படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

    திரைக்கதை சார்ந்த பணிகள் முழுமை பெற்ற பிறகு, இந்த ஆண்டு இறுதியில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முட்டை கலவையுடன் பிஸ்கெட்டும் வெந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறுகிறது.
    • ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான உணவு வகைகளின் செய்முறை குறிப்புகள் பகிரப்பட்டு அதிக பார்வைகளை ஈர்ப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது இணையத்தில் புதிதாக வெளியாகி உள்ள ஒரு உணவு தயாரிப்பு வீடியோ சமூக வலைத்தளவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.

    கொல்கத்தாவில் சாலையோர உணவகத்தில் தயாரிக்கப்பட்ட புதுவித ஆம்லெட் தொடர்பான வீடியோவே அதற்கு காரணம். அந்த வீடியோவில் சமையல் கலைஞர் சூடான தோசைக்கல்லில் முட்டைகள் உடைத்து ஊற்றுகிறார்.

    பார்வையாளர்கள் ஏதோ சாதாரண ஆம்லெட் தயாரிப்பு வீடியோதான் என நினைப்பதற்குள் தனது பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்துகிறார். அதாவது முட்டை கலவை வெந்து வரும் நேரத்தில் ஒரு பாக்கெட் முழுவதும் உள்ள கிரீம் பிஸ்கெட்டுகளை அதிலே கொட்டுகிறார். முட்டை கலவையுடன் பிஸ்கெட்டும் வெந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறுகிறது.

    பின்னர் வெந்த அந்த 'கிரீம் பிஸ்கெட்' ஆம்லெட்டை தனது ரசனைக்கேற்ப அலங்கரித்து வாடிக்கையாளர்களிடம் வழங்குகிறார். இந்த ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.



    • சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட இந்தியாவில் இருந்து ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வரிசையில், வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    • மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.
    • விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து, நேருவால் பாராளுமன்றத்திலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் 3 மற்றும் 4-வது மொழியை படித்துக்கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் இறங்கும்.

    தி.மு.க.வை எதிர்க்கும் திறமையோ, வீழ்த்துகிற திறமையோ அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்ற கட்சிகள் வரலாம். அதன் வரலாறு, அவர்கள் தேர்தலை சந்தித்த பிறகு தான் தெரியும். பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை கூடத்தான் வேண்டும். குறைந்து வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.க. மீது இருக்கிற வெறுப்பால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் கூட்டணி பற்றியோ, யாரோடு கூட்டணி என்பது பற்றி எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவார். மாஃபா பாண்டியராஜன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடருவோம்.
    • எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும் வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை, அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்களிடம் வரும். தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதில் தான் தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வைத்திலிங்கம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
    • அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

    வைத்திலிங்கத்தை நேற்று இரவு திடீரென, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒவ்வொருவரும் தலா அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சசிலாவுடன், அவருடைய சகோதரர் திவாகரன் உடன் வந்தார்.

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என சசிகலா கூறி வந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இணைப்புக்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வைத்திலிங்கத்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைத்திலிங்கத்துடனான இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. தி.மு.க. போல் இல்லை. நல்ல ஆட்சி 2026-ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அ.தி.மு.க.வை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல தான்.

    அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்து கேட்டதற்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள் படி அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ? அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு, தி.மு.க. மத்திய அரசு என்று முதலில் பார்க்க வேண்டும். மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை வாங்கி போய் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026-ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதை மாற்று பாதையில் கொண்டு போகும் ஒரே எண்ணத்தில் அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இந்த மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் ஒரு சில விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. இன்னும் போகப்போக 2026-தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தை சீர்கெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாத்துக்கும் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×