சென்னையில் வெப்பத்தை தணித்த திடீர் மழை

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் வெப்பத்தை தணித்த திடீர் மழை
Published on

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனிக்கிழமை வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை கோடை மழை பெய்தது. அதிகாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில், புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று காலை பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. சென்னையை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com